என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கடைகளை அகற்ற கால அவகாசம் வேண்டும் - வர்த்தகர் சங்கம் கோரிக்கை
செம்போடை கடைத்தெருவில் உள்ள கடைகளை அகற்றி கொள்ள கால அவகாசம் வேண்டும் என அரசுக்கு வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா செம்போடை கடைத்தெருவில் நான்கு தலைமுறையாக உப்பனாற்று ஓரமாக 100-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள்
கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த கடைகளை நீர் நிலை புறம்போக்கில் உள்ளதாக பொது பணி துறையினர் 21 நாட்களுக்குள் காலி செய்துகொள்ள நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.
பல தலைமுறையாக 100-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கடை வைத்து மளிகை பால், ஹேட்டல், காய்கறி, முடிதிருத்தும் கடை சலவை கடை என பல தரபட்ட கடைகள் இந்த கடைவீதியில் அமைந்துள்ளது.
இந்த கடை வியாபாரத்தை நம்பி ஆயிரக்கனக்கான குடும்பங்கள் உள்ளது மேலும் இதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இந்த கடைவீதியை நம்பி நாள்தோறும் பல்வேறு விதமாக காய்கறிகள், கீரைகள், மீன் போன்ற பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
பல கடைகாரர்கள் வங்கி மற்றும் தனியாரிடம் கடன் வாங்கி கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக சுனாமி, காஜாபுயல், டெங்கு காய்ச்சல், கொரோனா என பலவகையிலும் வர்த்தகர்கள் பாதிக்கபட்டு மீளமுடியதா நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் திடிரென்று 21 நாளில் கடைகளை அகற்ற சொல்வது வர்த்தகர்களை நிலைகுலைய செய்துள்ளது.
எனவே கடைகளை அகற்று போதிய கால அவகாசம் வேண்டும் என செம்போடை வர்த்தக சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






