என் மலர்
நாகப்பட்டினம்
நாகை அருகே கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளி-யம்மன் கோவில் பங்குனி பெருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. திருவிழாவின் முக்கிய
நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சேவாபாரதி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலத்--தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்
மஞ்சள் ஆடையுடன் முளைப்பாரி கரகம் எடுத்தும், பால் குடங்களை சுமந்தவாறும் ஊர்வலமாக சென்றனர். அப்போது செண்டை மேளம் முழங்க, காளி நடனம் மற்றும் கரகாட்ட நிகழ்ச்சிகள்
அங்கு களைகட்டியது. பின்னர் ஊர்வலமானது கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கே அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை
நிறைவேற்றினர். முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நாளை மாலை நடைபெறு-கிறது. இதில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 64 மீனவ கிராம மக்கள்
பூக்குழி இறங்குகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளி-யம்மன் கோவில் பங்குனி பெருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. திருவிழாவின் முக்கிய
நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சேவாபாரதி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலத்--தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்
மஞ்சள் ஆடையுடன் முளைப்பாரி கரகம் எடுத்தும், பால் குடங்களை சுமந்தவாறும் ஊர்வலமாக சென்றனர். அப்போது செண்டை மேளம் முழங்க, காளி நடனம் மற்றும் கரகாட்ட நிகழ்ச்சிகள்
அங்கு களைகட்டியது. பின்னர் ஊர்வலமானது கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கே அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை
நிறைவேற்றினர். முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நாளை மாலை நடைபெறு-கிறது. இதில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 64 மீனவ கிராம மக்கள்
பூக்குழி இறங்குகின்றனர்.
திட்டச்சேரி பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை - நன்னிலம்மெயின் சாலையில் திட்டச்சேரி பஸ் நிலையம் அமைந்துள்ளது.
இந்த பஸ் நிலையத்திற்கு திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், பனங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது-மக்கள் பல்வேறு தேவைக-ளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சாலை வழியே நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நன்னிலம்,வேலூர், மதுரை, சென்னை வரை செல்லும் பஸ்கள்
இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பஸ் நிலையம் சுற்றி தாழ்வாக இருப்பதால் உயரப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.
பணியின்போது பஸ் நிலையம் பின்புறம் இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை இடிக்கப்பட்டு மாற்று இடத்தில் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இந்த கழிவறையில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக மூடியைத் கிடைக்கிறது. இதனால் திட்டச்சேரி பஸ் நிலையம், வங்கிகள், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள்
கழிவறை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்-படவில்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கழிப்பறையை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமருகல் அருகே மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டா-ரவடை ஊராட்சி மதகடித்-தெருவை சேர்ந்தவர்கள் கஜேந்திரன், சங்கீதா தம்பதியினர். இவர்களின் மகன் ரகுராமன் (வயது 15). இவர்
அடியக்கமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9&ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு 9.30 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கஜேந்திரன், சங்கீதா,
ரகுராமன் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ரகுராமன் சிறுநீர் கழிக்க வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். 10 மணி வரை வீட்டிற்கு திரும்-பாததால் சங்கீதா, கஜேந்திரன்
இருவரும் ரகுராமனை தேடினர்.அப்போது வீட்டில் இருந்து ஆடு கொட்டகைக்கு செல்லும் மின் வயர் காற்றில் அறுந்து கிடந்துள்ளது. அதனை அறியாமல் மிதித்த ரகுராமன் மின்சாரம்
தாக்கி மயங்கிக் கிடந்துள்ளார். அவரை அவரது பெற்றோர் மீட்டு மோட்டார் சைக்கிளில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அங்கு ரகுராமனை பரி சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். தகவலின்பேரில் திட்டச்சேரி போலீசார் ரகுராமனின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டா-ரவடை ஊராட்சி மதகடித்-தெருவை சேர்ந்தவர்கள் கஜேந்திரன், சங்கீதா தம்பதியினர். இவர்களின் மகன் ரகுராமன் (வயது 15). இவர்
அடியக்கமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9&ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு 9.30 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கஜேந்திரன், சங்கீதா,
ரகுராமன் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ரகுராமன் சிறுநீர் கழிக்க வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். 10 மணி வரை வீட்டிற்கு திரும்-பாததால் சங்கீதா, கஜேந்திரன்
இருவரும் ரகுராமனை தேடினர்.அப்போது வீட்டில் இருந்து ஆடு கொட்டகைக்கு செல்லும் மின் வயர் காற்றில் அறுந்து கிடந்துள்ளது. அதனை அறியாமல் மிதித்த ரகுராமன் மின்சாரம்
தாக்கி மயங்கிக் கிடந்துள்ளார். அவரை அவரது பெற்றோர் மீட்டு மோட்டார் சைக்கிளில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அங்கு ரகுராமனை பரி சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். தகவலின்பேரில் திட்டச்சேரி போலீசார் ரகுராமனின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாளை முதல் 14-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாகை :
தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரையில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
அதேபோல் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்....இந்துக்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்கவே பாஜக மத பிரச்சினைகளை தூண்டிவிடுகிறது: குமாரசாமி
தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரையில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
அதேபோல் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்....இந்துக்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்கவே பாஜக மத பிரச்சினைகளை தூண்டிவிடுகிறது: குமாரசாமி
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறையொட்டி இன்று காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் கிறிஸ்தவர்களின் புனித தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறையொட்டி இன்று காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
இதில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். குருத்தோலை பவனியில் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி உன்னதங்களிலே ஓசன்னா, தாவீதின் மைந்தனே ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஓசன்னா என பாடல்களை பாடி பவனியாக சென்றனர்.
இந்த பவனி பேரலாயத்தின் முகப்பு பகுதியில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தின் கீழ்க்கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. குருத்தோலை ஞாயிறையொட்டி இன்று வேளாங்கண்ணியில் கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனை நடைபெறுகிறது.
நாகையில் 24 படகு உரிமையாளர்களுக்கு 1 கோடியே 13 லட்சத்தில் நிவாரண உதவியை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு பழுதான படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கவுதமன் தலைமையிலும் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதா-கிருஷ்ணன் பங்கேற்று மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 22 விசைப்படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம், 2 கண்ணாடி இலை படகுகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் என 24 படகு உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொலை நோக்கு திட்டங்கள் வரும் 13-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க உள்ளார். ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி வரும் புதுச்சேரி மாநில மீனவர்கள் பிரச்சினைக்கு புதுச்சேரி முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு எட்டப்படும் என கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை.மாலி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, மீன்வளத்துறை இணை இயக்குநர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு பழுதான படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கவுதமன் தலைமையிலும் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதா-கிருஷ்ணன் பங்கேற்று மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 22 விசைப்படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம், 2 கண்ணாடி இலை படகுகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் என 24 படகு உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொலை நோக்கு திட்டங்கள் வரும் 13-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க உள்ளார். ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி வரும் புதுச்சேரி மாநில மீனவர்கள் பிரச்சினைக்கு புதுச்சேரி முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு எட்டப்படும் என கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை.மாலி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, மீன்வளத்துறை இணை இயக்குநர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கீழையூர் அருகே குடும்ப தகராறில் மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). மீனவர். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கீழையூர் போலீசார் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி முதலியார்தோப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவரது மனைவி ராதிகா (32). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராதிகா வீட்டில் தூக்குப்போட்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராதிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து எதற்காக ராதிகா தற்கொலை செய்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதி போலீஸ் நிலையங்களில் குற்ற பதிவேட்டில் இருந்து 12 பேர் நீக்கம் செய்யப்பட்டு டி.ஸ்.பி. சான்றிதழை வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, வேட்டைக்காரனிருப்பு மற்றும் தலைஞாயிறு போலீஸ் நிலையங்களில் கடந்த கஜாபுயலின் போது ஏற்பட்ட பல்வேறு பிரச்சினையில் 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் 12 பேர் மீதும் காவல் நிலைய குற்றப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பின்பு இவர்களின் நன்னடத்தையின் காரணமாக குற்றப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேட்டைக்காரன் இருப்பு போலீஸ் நிலை-யத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி முருகவேல் தலைமை வகித்தார். கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடந்த கஜா புயலின் போது தலைஞாயிறு மற்றும் வேட்டைகாரனிருப்பு போலீஸ் நிலையங்களில் போடப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து 12 பேர் விடுவிக்கப்பட்டு குற்றப்பின்னணி பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களை டி.எஸ்.பி. முருகவேல் வழங்கினார்.
பின்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தொழில் தொடங்குவது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் மாவட்ட கலெக்டரிடம் இருந்து நிதி பெற்று தருவது. மற்றும் போலீசாருக்கு உறுதுணையாக இருந்து பொது மக்களுக்கு சேவையாற்றிட அறிவுரை கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி தமிழ்மணி, தலைஞாயிறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட் டம், எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்-துள்ளது.
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நிகழாண்டு சித்ரா பவுர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேல் மற்றும் மயில் உள்-ளிட்ட உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடியானது மேளதாளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 15 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.தினம்-தோறும் காலை மற்றும் இரவில் பல்வேறு வானத்தில் முருகன் வீதி உலா காட்சி நடைபெறும்.
முக்கிய நாளான சித்ரா பவுர்ணமி தினமான 16ம் தேதி பல்வேறு மாவட்டங்-களிலிருந்து பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர்.
மேலும் அன்றைய தினம் முழுவதும் இடைவிடாத பால் அபிஷேகம் நடை-பெறும்.கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட் டம், எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்-துள்ளது.
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நிகழாண்டு சித்ரா பவுர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேல் மற்றும் மயில் உள்-ளிட்ட உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடியானது மேளதாளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 15 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.தினம்-தோறும் காலை மற்றும் இரவில் பல்வேறு வானத்தில் முருகன் வீதி உலா காட்சி நடைபெறும்.
முக்கிய நாளான சித்ரா பவுர்ணமி தினமான 16ம் தேதி பல்வேறு மாவட்டங்-களிலிருந்து பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர்.
மேலும் அன்றைய தினம் முழுவதும் இடைவிடாத பால் அபிஷேகம் நடை-பெறும்.கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திட்டச்சேரி-நாகூர் சாலையில் கொட்டப்படும் குப்பையால் அவ்வழியே செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரியிலிருந்து நாகை செல்லும் சாலை வழியாக திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, திருப்புகலூர், புத்தகரம், திருக்கண்ணபுரம், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் இந்த சாலை வழியே நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, காரை-க்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் நாகையில் உள்ள பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பனங்குடி பிராவ-டையான் ஆற்றுப்பாலம் அருகில் சாலை-யோரம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேமிக்கப்படும் குப்பைகள் முழுவதும் கொட்டப்படுகிறது.
இதனால் சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் குப்பையை கடந்து செல்லும் பொழுது மூக்கை மூடி கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.
மேலும் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் துர்-நாற்றம் வீசுகிறது.இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் குப்பைகளை அடிக்கடி எரித்து விடுவதால் அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்படுகிறது.இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. புகையில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகிறது.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்-படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரியிலிருந்து நாகை செல்லும் சாலை வழியாக திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, திருப்புகலூர், புத்தகரம், திருக்கண்ணபுரம், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் இந்த சாலை வழியே நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, காரை-க்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் நாகையில் உள்ள பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பனங்குடி பிராவ-டையான் ஆற்றுப்பாலம் அருகில் சாலை-யோரம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேமிக்கப்படும் குப்பைகள் முழுவதும் கொட்டப்படுகிறது.
இதனால் சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் குப்பையை கடந்து செல்லும் பொழுது மூக்கை மூடி கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.
மேலும் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் துர்-நாற்றம் வீசுகிறது.இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் குப்பைகளை அடிக்கடி எரித்து விடுவதால் அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்படுகிறது.இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. புகையில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகிறது.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்-படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் எரவாஞ்சேரியில் கட்டுமான பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், அதனைத்தொடர்ந்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகளை துவங்காமல் இருக்கும் பயனாளிகளை உடனடியாக துவங்க வைக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தி 100 நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின்-போது எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், அதனைத்தொடர்ந்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகளை துவங்காமல் இருக்கும் பயனாளிகளை உடனடியாக துவங்க வைக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தி 100 நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின்-போது எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.






