என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை

    வேதாரண்யம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி முதலியார்தோப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவரது மனைவி ராதிகா (32). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராதிகா வீட்டில் தூக்குப்போட்டார். 

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராதிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து எதற்காக ராதிகா தற்கொலை செய்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×