என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை வனத்துறையினர் கடந்த 2020-ம் ஆண்டு அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தடைசெய்யப்பட்ட பொருளான 1060 கிலோ கடல் அட்டை கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை மகாலட்சுமி நகரில் உள்ள வன உயிரின பாதுகாவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக 12 பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற நடவடிக்கைக்காக மீண்டும் கடல் அட்டை இருப்பு குறித்து வனசரகர் அனந்தீஸ்வரன் சோதனை செய்தார். அப்போது 1060 கிலோ கடல் அட்டையில் 400 கிலோ கடல் அட்டை மாயமானது தெரியவந்தது.
இது குறித்து வனசரகர் அனந்தீஸ்வரர் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றிய நாகை காடம்பாடி பகுதியை சேர்ந்த தற்காலிக ஊழியர் கோவிந்தராஜ் திடீரென தலைமறைவாகி உள்ளார். இதனால் போலீசாருக்கு கோவிந்தராஜ் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
அவரை பிடித்து விசாரித்தால் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்பதால் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தலைமறைவான கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலின் 55-ம் ஆண்டு கோடைத் தீர்த்த திருவிழா நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த 300 -க்கும்
மேற்பட்ட பெண்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து உலக நன்மை வேண்டி பால் குடம் எடுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தர்குளம்
மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பின்பு அம்மனுகு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும்
விதமாக தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு 1.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் - 59, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்-2, வேதாரண்யம் உப்பு உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்- 1, வேதாரண்யம்
வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-1, வேதாரண்யம் ஊரகவளர்ச்சிவங்கி -1,கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் - 9 என மாவட்டத்தில் உள்ள மொத்த 73 கூட்டுறவு
நிறுவனங்களில் கடன் பெற்ற 18,412 நபர்களுக்கு கடன் தொகை ரூ.5371.27 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்-கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் வளவன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் ஐயப்பன் (20), தெட்சணாமூர்த்தி
மகன் தர்மா (20), அருணாச்சலம் மகன் அருண்குமார் (20). அகிய 4 பேரும் மது அருந்தி போதையில் திரும ருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் சட்டை
எடுக்க சென்றுள்ளனர். அங்கு போதையில் கடை ஊழியர்களிடம் 4 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கடைக்-காரர் கடையிலிருந்து வெளியே அனுப்பி உள்ளார். அப்போது
அருகில் கடை வைத்துள்ள திருமருகல் முருகன் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் குருமூர்த்தி (33), பில்லாளி தெற்கு தெரு வடிவேலு மகன் சந்திரபோஸ் (28) ஆகிய இருவரும் அவர்களை
சமாதானப்படுத்தி உள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் கட்டை, சேர் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிக் கொண்டனர்.
இதில் காயமடைந்த சந்திரபோஸ், குருமூர்த்தி, அருண்குமார் ஆகிய 3 பேரும் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரம் வளவன், ஐயப்பன், தர்மா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளி-யம்மன் கோவில் பங்குனி பெருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. திருவிழாவின் முக்கிய
நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சேவாபாரதி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலத்--தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்
மஞ்சள் ஆடையுடன் முளைப்பாரி கரகம் எடுத்தும், பால் குடங்களை சுமந்தவாறும் ஊர்வலமாக சென்றனர். அப்போது செண்டை மேளம் முழங்க, காளி நடனம் மற்றும் கரகாட்ட நிகழ்ச்சிகள்
அங்கு களைகட்டியது. பின்னர் ஊர்வலமானது கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கே அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை
நிறைவேற்றினர். முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நாளை மாலை நடைபெறு-கிறது. இதில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 64 மீனவ கிராம மக்கள்
பூக்குழி இறங்குகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை - நன்னிலம்மெயின் சாலையில் திட்டச்சேரி பஸ் நிலையம் அமைந்துள்ளது.
இந்த பஸ் நிலையத்திற்கு திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், பனங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது-மக்கள் பல்வேறு தேவைக-ளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சாலை வழியே நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நன்னிலம்,வேலூர், மதுரை, சென்னை வரை செல்லும் பஸ்கள்
இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பஸ் நிலையம் சுற்றி தாழ்வாக இருப்பதால் உயரப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.
பணியின்போது பஸ் நிலையம் பின்புறம் இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை இடிக்கப்பட்டு மாற்று இடத்தில் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இந்த கழிவறையில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக மூடியைத் கிடைக்கிறது. இதனால் திட்டச்சேரி பஸ் நிலையம், வங்கிகள், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள்
கழிவறை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்-படவில்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கழிப்பறையை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டா-ரவடை ஊராட்சி மதகடித்-தெருவை சேர்ந்தவர்கள் கஜேந்திரன், சங்கீதா தம்பதியினர். இவர்களின் மகன் ரகுராமன் (வயது 15). இவர்
அடியக்கமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9&ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு 9.30 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கஜேந்திரன், சங்கீதா,
ரகுராமன் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ரகுராமன் சிறுநீர் கழிக்க வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். 10 மணி வரை வீட்டிற்கு திரும்-பாததால் சங்கீதா, கஜேந்திரன்
இருவரும் ரகுராமனை தேடினர்.அப்போது வீட்டில் இருந்து ஆடு கொட்டகைக்கு செல்லும் மின் வயர் காற்றில் அறுந்து கிடந்துள்ளது. அதனை அறியாமல் மிதித்த ரகுராமன் மின்சாரம்
தாக்கி மயங்கிக் கிடந்துள்ளார். அவரை அவரது பெற்றோர் மீட்டு மோட்டார் சைக்கிளில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அங்கு ரகுராமனை பரி சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். தகவலின்பேரில் திட்டச்சேரி போலீசார் ரகுராமனின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரையில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
அதேபோல் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்....இந்துக்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்கவே பாஜக மத பிரச்சினைகளை தூண்டிவிடுகிறது: குமாரசாமி






