என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் குரு பரிகார தளமாக விளங்கும் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தியே குரு பகவானாக தனி சன்னதியில் அமையப்பெற்று

     அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கக்-கூடிய இந்த கோவிலில் இன்று அதிகாலை 4.16 மணி அளவில் குரு பெயர்ச்சி விழா

    நடைபெற்றது. கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்தார்.முன்னதாக குருபகவா--னுக்கு பால், சந்தனம், பன்னீர் பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து குரு பகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்-னிட்டு திரளான பக்தர்-கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    நாகையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகம் எதிரில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கட்டணக் கொள்ளையைக் கண்டித்தும், கல்வி கட்டணம் கட்டாத மாணவ- மாணவிகள் மீது அடக்குமுறையை ஏவி

    இடையூறு செய்து தற்கொலைக்கு தூண்டும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க கோரியும், மாணவி தற்கொலை செய்துகொள்ள காரணமான கல்வி நிறுவனத்திடமிருந்து

    ரூ.2 கோடி இழப்பீடு பெற்று அவரது குடும்பத்திற்கு வழங்க கோரியும் இந்த மக்கள் கட்சி நகர தலைவர் பிரதீப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து வளர்ச்சி

    கழக மாநில பொருளாளர் சுரேஷ், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் விஜ-யேந்திர சுவாமிகள், இந்து மக்கள் கட்சி ஒன்றியபொதுச் செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்து மகா சபா மாவட்ட தலைவர் விவேக் வரவேற்புரையாற்றினார். அகில பாரத இந்து வளர்ச்சி கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் பரவை சோமசுந்தரம், அகில பாரத இந்து மகா சபா

    மாநில செயலாளர் கோவை கார்த்திகேயன்,இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சிவசேனா கட்சி தஞ்சாவூர் கோட்ட பொறுப்பாளர் குட்டி சிவகுமார் ஆகியோர் கோரிக்கைகளை

    வலியுறுத்தி பேசினர். முடிவில் அகில பாரத இந்து மகா சபா ஒன்றிய செயலாளர் செந்தில்-குமார் நன்றி கூறினார்.

    வலிவலம் இருதய கமலநாதசுவாமி கோவிலில் 40 ஆண்டுக்கு பிறகு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலத்தில் பிரசித்தி பெற்ற மனத்துணைநாதர் உடனுறை மாழையொண்கண்ணி அம்பிகை, இருதய கமலநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்

    40 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா காட்சி நடைபெற்று

    வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவன்-பார்வதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் வசந்த மண்டபத்திற்கு

    எழுந்தருளினார். அங்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வினைதொடர்ந்து, சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.பின்னர் மாலை மாற்றும் வைபவமும் காப்புக்கட்டு வைபவமும் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறுகிறது.
    நாகை அருகே அரசு கொள்முதல் நிலைய பூட்டை உடைத்து 125 நெல்மூட்டைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அகர ஒரத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் சன்ன ரகம் மற்றும் மோட்டா ரக 6 ஆயிரம் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலைபார்க்கும் காவலாளி நேற்று இரவு விடுப்பு எடுத்து விட்டு சென்று விட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள் 2 லாரியில் நள்ளிரவில் அங்கு வந்தனர். பின்னர் கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் மூட்டைகளில் 125 மூட்டைகளை திருடி லாரியில் ஏற்றிகொண்டு தப்பி சென்றனர். இன்று காலை நெல் கொள்முதல் நிலைய பூட்டு உடைக்கப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் பருவகால உதவியாளர் பாக்யராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாக்யராஜ் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நெல் மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். 

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் 38ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்க--ளுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன்

     ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மாவட்ட செயலாளர் வேல்கண்ணன்,

    சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தமிழரசி, மாவட்ட இணைச்செயலாளர் செல்வராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வி, ஒன்றிய பொருளாளர்

     உஷா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    ஆதமங்கலம் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் 8000 நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை அருகே ஆதமங்கலத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணி கடந்த 5-ம் தேதி முடிவுற்ற

     நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கியுள்ளது. 

    இரண்டு தினங்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்யும் மழையினால் நெல் மூட்டைளை மூடுவதற்கு போதுமான தார்ப்பாய் இல்லை எனவும் இருக்கும் தார்பாய்கள் கிழிந்த

    நிலையில் உள்ளதால் நெல் மூட்டைகள் மழையில் நனைகின்றது எனவும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

    சாட்டியகுடி மாவூர்சாலையில் பொதுப்பணித்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணி 3 இடங்களில் நடைபெறுவதால் தற்காலிக மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதையில் கனரக

    வாகனங்-கள் செல்லும் அளவிற்கு சாலை அமைக்கப்படா-ததால் கொள்முதல் நிலையத்திற்கு வாகனம் வரவில்லை என சுமைதூக்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    மாற்றுப்பாதையாக நாகலூர் வழியாக செல்லும்போது மின்சார கம்பிகள் வாகனத்--தின் மீது உரசுவதால் பொதுமக்கள் வாகனத்தை இயக்க அனுமதி மறுக்கின்றனர்.

    அங்குள்ள நெல் மூட்டைகளை எடுக்க மாவூர் சென்று திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலை வழியாக எடுத்துச் செல்ல வேண்டுமெனில் போக்குவரத்து செலவு அதிகரிப்பதால் வாகன

    ஓட்டுனர்கள் வர மறுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதமங்கலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை தனி கவனம் செலுத்தி நெல் மூட்டைகளை பாதுகாப்பாக

     குடோனுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா உம்பளச்சேரி- கரியாப்பட்டினம் வரை செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

    இச்சாலை வழியே உம்ப-ளச்சேரி, வாட்டாகுடி, மகராஜபுரம், தூளாசபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரியா-பட்டினம், வேதாரணியம் செல்ல இந்த சாலையை தான் பொதுமக்கள்

     பயன்படுத்தி வருகின்றனர். தினந்தோறும் இந்த சாலையில் நூற்றுக்கணக்கான வாக-னங்கள் சென்று வருகின்றன.தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. 

    மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்-களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.

    இரவு நேரங்களில் வாகனங்-களில் செல்பவர்கள் எங்கு பள்ளம் உள்ளது என தெரியாமல் கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இதனால் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 27 கடற்கரை கிராமங்களுக்கு 5000 தென்னை கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய-த்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்புடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், வேளாண் துறை இணை இயக்குனர் அக்கண்டராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மீன் வளர்ப்புடன் கூடிய தேனீ வளர்த்தல், 

    தென்னை, நெல் சாகுபடி இணைந்த வருவாய்பெருக்கக் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து

    மீன்குஞ்சுகளை ஒருங்கிணைந்த பண்ணையத்தில் விட்டு கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளுக்கான இடுபொருட்கள் எந்திரங்களையும் வழங்கினார்.கஜா புயலால் 27 கடற்கரை

     கிராமங்களில் சேதமடைந்த தென்னை வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்காக 5 ஆயிரம் தென்னை கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ-தாகவும், நாகை மாவட்டத்தில்

     80 கிராமங்களில் வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
    கடல் அட்டை இருப்பு குறித்து வனசரகர் அனந்தீஸ்வரன் சோதனை செய்தார். அப்போது 1060 கிலோ கடல் அட்டையில் 400 கிலோ கடல் அட்டை மாயமானது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை வனத்துறையினர் கடந்த 2020-ம் ஆண்டு அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் தடைசெய்யப்பட்ட பொருளான 1060 கிலோ கடல் அட்டை கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை மகாலட்சுமி நகரில் உள்ள வன உயிரின பாதுகாவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக 12 பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற நடவடிக்கைக்காக மீண்டும் கடல் அட்டை இருப்பு குறித்து வனசரகர் அனந்தீஸ்வரன் சோதனை செய்தார். அப்போது 1060 கிலோ கடல் அட்டையில் 400 கிலோ கடல் அட்டை மாயமானது தெரியவந்தது.

    இது குறித்து வனசரகர் அனந்தீஸ்வரர் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றிய நாகை காடம்பாடி பகுதியை சேர்ந்த தற்காலிக ஊழியர் கோவிந்தராஜ் திடீரென தலைமறைவாகி உள்ளார். இதனால் போலீசாருக்கு கோவிந்தராஜ் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

    அவரை பிடித்து விசாரித்தால் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்பதால் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தலைமறைவான கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யத்தில் உலக நன்மை வேண்டி பால்குடம் எடுத்து பெண்கள் வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலின் 55-ம் ஆண்டு கோடைத் தீர்த்த திருவிழா நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த 300 -க்கும்

    மேற்பட்ட பெண்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து உலக நன்மை வேண்டி பால் குடம் எடுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தர்குளம்

    மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பின்பு அம்மனுகு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவ-னங்களில் கடன் பெற்ற 18412 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும்

    விதமாக தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு 1.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    நாகை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் - 59, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்-2, வேதாரண்யம் உப்பு உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்- 1, வேதாரண்யம்

    வேளாண் உற்பத்திளார்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள்-1, வேதாரண்யம் ஊரகவளர்ச்சிவங்கி -1,கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் - 9 என மாவட்டத்தில் உள்ள மொத்த 73 கூட்டுறவு

    நிறுவனங்களில் கடன் பெற்ற 18,412 நபர்களுக்கு கடன் தொகை ரூ.5371.27 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்-கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.
    திருமருகலில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் வளவன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் ஐயப்பன் (20), தெட்சணாமூர்த்தி

    மகன் தர்மா (20), அருணாச்சலம் மகன் அருண்குமார் (20). அகிய 4 பேரும் மது அருந்தி போதையில் திரும ருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் சட்டை

    எடுக்க சென்றுள்ளனர். அங்கு போதையில் கடை ஊழியர்களிடம் 4 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கடைக்-காரர் கடையிலிருந்து வெளியே அனுப்பி உள்ளார். அப்போது

    அருகில் கடை வைத்துள்ள திருமருகல் முருகன் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் குருமூர்த்தி (33), பில்லாளி தெற்கு தெரு வடிவேலு மகன் சந்திரபோஸ் (28) ஆகிய இருவரும் அவர்களை

    சமாதானப்படுத்தி உள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் கட்டை, சேர் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிக் கொண்டனர்.

    இதில் காயமடைந்த சந்திரபோஸ், குருமூர்த்தி, அருண்குமார் ஆகிய 3 பேரும் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளனர்.

    இது குறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரம் வளவன், ஐயப்பன், தர்மா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இதுகுறித்து 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×