என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கீழையூரை சேர்ந்த நாகராஜன் (65) மற்றும் வெளிப்பாளையத்தை சேர்ந்த டேவிட் என்கிற டேவிட் ஜான்சன் ஆகிய இருவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது. 

    இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்.பரிந்துரையின்படி கலெக்டர் அருண் தம்புராஜ் 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    நாகை மாவட்டத்தில் மத்தி மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.
    நாகப்பட்டினம்

    தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும்  மத்தி மீன், கேரள மாநிலத்-திற்கு பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகதேவைப்படும்

    புரதச்சத்து நிறைந்த மத்தி மீனை விரும்பி சாப்பி-டுபவர்கள் அதிகம். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் பைபர் படகு மீனவர்களின் வலைகளில் அதிக

    அளவிலான மத்தி மீன்கள் பிடிபட்டுள்ளது. நாகை, நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், கல்லாறு, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்-களில் இருந்து மீன் பிடிக்க சென்ற பைபர் படகு

    மீனவர்களுக்கு மத்தி மீன் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், மீன்களின் விலை கடுமை-யாக குறைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து அதிக அளவு மத்தி மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும் கேரளாவிலும் மத்தி மீன்க--ளின் வரத்து அதிகமானதால்  தமிழகத்தில் விலை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள்

    கிலோ ரூ.100 ரூபாய் முதல் 130 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மத்தி மீன்களின் விலை தற்போது ஒரு கிலோ வெறும் ரூ.35 முதல் 45 வரை மட்டுமே விலை போவதாக கூறினார்கள்.

    5 மாதங்களுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமங்களில் பிடித்து வரப்பட்ட மத்தி மீன்கள் ஐஸ் வைத்து கேரளா மாநிலத்திற்கு ஏற்-றுமதி செய்யப்படும் பணிகள் தீவிரமாக

    நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால், கடும் நெருக்கடியில் சூழ்ந்து இருப்பதாக  தெரிவித்துள்ள மீனவர்கள், மத்தி மீன்களின் விலை குறைவால்

    எரிபொருள், ஐஸ், ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவு செய்த தொகை கூட மிஞ்சவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி கூட்டு திருப்பலி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்-தலப் பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித

    வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து கலை அரங்கத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை-வார்த்தை வழிபாடு, சிறப்பு கூட்டுத்

    திருப்பலிநிறைவேற்றப்பட்டது.சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை பேராலய அதிபர் இருதய-ராஜ் மற்றும் பங்கு தந்தைகள்முத்தமிட்டனர்.

    இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.

    கொரோனா அச்சம் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் இயேசுவின் சொரூபத்திற்கு பக்தர்கள் முத்தமிட பேராலயம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை அதிகாலை

    இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நாளில் சிறப்பு மன்றாட்டு, நற்கருணை வழிபாடுகள் நடைபெற உள்ளன.

    பசுமை துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என நாகையில் அமைச்சர் எ.வ. வேலு பேட்டியளித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூரில் புதிய தொடங்கப்-பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

    மருத்துவ கல்லூரியில் அடிப்படை கட்டமைப்புகள், வகுபபறைகள், ஆய்வுக் கூடங்களை ஆய்வு செய்த அவர், மாணவர்களுக்கு தேவை-யான உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை

    விரைந்து முடிக்க அதிகாரி-களுக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் வேலு நிருபர்களிடம் பேசுகையில்:-

    தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முழுமையாக மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக

    தெரிவித்த அவர், தமிழகம் சாலைப் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக இருப்பதால் கடந்த ஓராண்டில் 15 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக

    பெருமிதம் தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் 360 கோடி ரூபாயில் நாகப்பட்டினத்தில் பசுமை துறைமுகம் அமைக்கப்படும் என கூறி இதுவரை செயல்படுத்தாது

    குறித்த கேள்விக்கு. கடந்த ஆட்சியில் அறிவித்து கிடப்பில் போடப்பட்ட நாகப்பட்டினம் பசுமைதுறைமுகம் அமைப்பது அல்லது விரிவுபடுத்துதல் குறித்து முறையாக ஆய்வு செய்து அதனை

    நடைமுறைப்படுத்துவதற்கான நடவ-டிக்கை எடுக்கப்படுமென கூறினார்.

    மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை திட்டம் ரத்து என்ற செய்தி தவறானது எனவும், சாலை அமைக்கத் தேவையான இடங்களை கையகப்படுத்தி

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு டெண்டர் பணிகளும்நிறைவு பெற்று பணிகள் தொடங்க உள்ள நிலையில் இதுபோன்ற செய்தி தவறானது என தெரிவித்தார்.

    செல்வராஜ் எம்.பி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே ஆதலையூர் கிராமத்தில் ஆற்றங்கரையில் உள்ள வீடுகளை காலி செய்ய மறுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்,:

    நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களை நீதிமன்ற உத்தர-வுப்படி காலி செய்யும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதன்படி நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் கிராமத்தில் முடிகொண்டான் ஆற்றங்கரை அருகே வசிக்கும் 250 வீடுகளை 21 நாட்களில் காலி செய்ய பாசன பிரிவு உதவி பொறியாளர் 

    உத்தரவிட்டு நோட்டீஸ் ஒட்டியுள்ளார். 

    இந்த நிலையில் மாற்று இடம் வழங்க வேண்டியும், வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க கோரியும் கிராம மக்கள் ஆதலையூர் பகுதியில் திடீர் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஆற்றங்க-ரையில் வசிக்கும் பட்டா இருக்கும் நபர்களுக்கு நோட்டீஸ் வழங்காததை கண்டித்தும், மாற்று இடம் வழங்கி வீடுகள் கட்டித்தர வலியுறுத்தியும் கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

    100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் தங்களை காலி செய்ய அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகவும், பல லட்சம் ரூபாய் செலவிட்டு கட்டிய கான்கிரீட் வீடுகளை விட்டு எப்படி செல்வது என்றும் 

    கிராம மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

    குடிநீர் வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் என அனைத்தும் செலுத்தி வருவதாக வேதனை தெரிவித்துள்ள கிராம மக்கள், வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி மாற்று இடத்தில் வீடுகளை கட்டித்தர தமிழக 

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

    நாகையில் வீடுகளை காலி செய்ய அரசு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
    நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம் பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பரம்பரை டிரஸ்டிகளில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் வாரிசு உரிமை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 

    இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நாகூர் தர்கா இடைக்கால நிர்வா-கிகம் மூலம் நிர்வாகம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இடைக்கால நிர்வாகிகள் மீது நிதி முறைகேடு

    குற்றச்சாட்டு எழுந்ததால் நாகூர் தர்கா பொறுப்புகளை தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் ஒப்ப-டைக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிலைகள் கடந்த 6.4.2022 மீண்டும் நாகூர் பரம்பரை டிரஸ்டிகளியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.
     
    இதைத்-தொடர்ந்து தமிழக வக்பு வாரிய முதன்மை செயல் அதிகாரி வசீர் அஹ்மத் நாகூர் தர்கா டிரஸ்டிகளிடம் தர்கா நிர்வாகத்தை முறைப்--படி ஒப்படைத்தார். இதனை வரவேற்கும் வகையில்

    இஸ்லாமியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    நீர்நிலைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற கோரிய உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருமருகல் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதற்கு ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, இளைஞர்

    மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ், கட்சியின் ஒன்றிய பொரு-ளாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் குரு பரிகார தளமாக விளங்கும் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தியே குரு பகவானாக தனி சன்னதியில் அமையப்பெற்று

     அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கக்-கூடிய இந்த கோவிலில் இன்று அதிகாலை 4.16 மணி அளவில் குரு பெயர்ச்சி விழா

    நடைபெற்றது. கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்தார்.முன்னதாக குருபகவா--னுக்கு பால், சந்தனம், பன்னீர் பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து குரு பகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்-னிட்டு திரளான பக்தர்-கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    நாகையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகம் எதிரில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கட்டணக் கொள்ளையைக் கண்டித்தும், கல்வி கட்டணம் கட்டாத மாணவ- மாணவிகள் மீது அடக்குமுறையை ஏவி

    இடையூறு செய்து தற்கொலைக்கு தூண்டும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க கோரியும், மாணவி தற்கொலை செய்துகொள்ள காரணமான கல்வி நிறுவனத்திடமிருந்து

    ரூ.2 கோடி இழப்பீடு பெற்று அவரது குடும்பத்திற்கு வழங்க கோரியும் இந்த மக்கள் கட்சி நகர தலைவர் பிரதீப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து வளர்ச்சி

    கழக மாநில பொருளாளர் சுரேஷ், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் விஜ-யேந்திர சுவாமிகள், இந்து மக்கள் கட்சி ஒன்றியபொதுச் செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்து மகா சபா மாவட்ட தலைவர் விவேக் வரவேற்புரையாற்றினார். அகில பாரத இந்து வளர்ச்சி கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் பரவை சோமசுந்தரம், அகில பாரத இந்து மகா சபா

    மாநில செயலாளர் கோவை கார்த்திகேயன்,இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சிவசேனா கட்சி தஞ்சாவூர் கோட்ட பொறுப்பாளர் குட்டி சிவகுமார் ஆகியோர் கோரிக்கைகளை

    வலியுறுத்தி பேசினர். முடிவில் அகில பாரத இந்து மகா சபா ஒன்றிய செயலாளர் செந்தில்-குமார் நன்றி கூறினார்.

    வலிவலம் இருதய கமலநாதசுவாமி கோவிலில் 40 ஆண்டுக்கு பிறகு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலத்தில் பிரசித்தி பெற்ற மனத்துணைநாதர் உடனுறை மாழையொண்கண்ணி அம்பிகை, இருதய கமலநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்

    40 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா காட்சி நடைபெற்று

    வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவன்-பார்வதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் வசந்த மண்டபத்திற்கு

    எழுந்தருளினார். அங்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வினைதொடர்ந்து, சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.பின்னர் மாலை மாற்றும் வைபவமும் காப்புக்கட்டு வைபவமும் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறுகிறது.
    நாகை அருகே அரசு கொள்முதல் நிலைய பூட்டை உடைத்து 125 நெல்மூட்டைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அகர ஒரத்தூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் சன்ன ரகம் மற்றும் மோட்டா ரக 6 ஆயிரம் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலைபார்க்கும் காவலாளி நேற்று இரவு விடுப்பு எடுத்து விட்டு சென்று விட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள் 2 லாரியில் நள்ளிரவில் அங்கு வந்தனர். பின்னர் கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் மூட்டைகளில் 125 மூட்டைகளை திருடி லாரியில் ஏற்றிகொண்டு தப்பி சென்றனர். இன்று காலை நெல் கொள்முதல் நிலைய பூட்டு உடைக்கப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் பருவகால உதவியாளர் பாக்யராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாக்யராஜ் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நெல் மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். 

    ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் 38ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்க--ளுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன்

     ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மாவட்ட செயலாளர் வேல்கண்ணன்,

    சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தமிழரசி, மாவட்ட இணைச்செயலாளர் செல்வராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வி, ஒன்றிய பொருளாளர்

     உஷா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    ×