என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருமருகல் அருகே மத்தளங்குடி-பில்லாளியில் ஆபத்தான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சி மத்தளங்குடி, அனவாசநல்லூர், பில்லாளி கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    மேற்கண்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலை உள்ளது.இந்த சாலை 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை.மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாக பில்லாளி வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பயத்தாங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வந்தனர்.

    அதேபோல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். 

    அதேபோல் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த வழியாக சென்று திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.இந்த நிலையில் பில்லாளி செல்லும் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் ஜல்லிகற்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
    கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் தெப்போற்சவம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சாமி கோவில் அமைந்துள்ளது. 

    இது மாடக் கோவில் ஆகும். சமய குரவர்களால் பாடல் பெற்ற இவ்வாலயத்தில் சித்திரை விழா கடந்த 14ம் தேதி அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது

    நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக அட்சயலிங்க சுவாமி அம்பாளுடன் மின் விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    முன்னதாக சுவாமிகளுக்கு 11 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் மீனாட்சிசுந்தரம் மாவட்ட துணைத்தலைவர்கள் உலகநாதன், ராஜமாணிக்கம் மாவட்ட இணைச் செயலாளர்கள் வேதரத்தினம், வெங்கடாசலம் சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மதிவாணன், கிராம உதவியாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், ஒய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், வட்டச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப் படாத சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7800 வழங்க வேண்டும் மற்றும் பணியாளர்களை காப்பீட்டு திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும். 

    புதிய ஒய்வுதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிட வேண்டும்.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காப்பீட்டு நிலவை தொகை வழங்காமல் உள்ளது சிகிச்சைக்கான பெற்று நிலுவை தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
    நாகூரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.
    நாகப்பட்டினம்:

    ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்கள் பசித்திருந்து நோன்பு இருந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அடுத்த நாகூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.

    நோன்பின் மாண்பு குறித்து இஸ்லாமியர்களின் சொற்பொழிவுகளை கேட்ட மாற்று மதத்தினர் அவர்களோடு சேர்ந்து நோன்பு திறந்தனர். நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நாகை நகர்மன்ற துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் பங்கேற்றனர்.
    பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கவர்னராக நியமித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். பா.ஜனதா கட்சியினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப் படக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர். பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கவர்னராக நியமித்து வருகின்றனர்.

    அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு முயல்கிறது. அந்த அடிப்படையில்தான் எச்.ராஜாவை கேரள கவர்னராக நியமிக்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயை உதவி செய்துள்ளது. அந்த உதவி இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு உதவிகள் செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... ராஞ்சி பெண்ணிடம் நூதன மோசடி- ரூ.25 லட்சம் லாட்டரியில் வென்றதாக கூறி ரூ.3.45 லட்சம் அபேஸ்

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 89 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கு கோபூஜை, கஜபூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.

    பின்னர் மன்னம்பந்தல் வழியாக தருமபுர ஆதீனத்தை வந்தடைந்தார். அப்போது மன்னம்பந்தல் பகுதியில் கவர்னர் செல்லும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும், மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை கண்டித்தும், கவர்னரை திரும்பச் செல்ல வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனர். அப்போது கவர்னர் பார்வையில் போராட்டக்காரர்கள் இருப்பதை மறைக்கும் வகையில் காவல்துறை வாகனத்தை கொண்டு போலீசார் மறைத்தனர்.

    அப்போது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை சாலையில் எரிந்தும், வாகனங்கள் மீதும் கருப்பு கொடிகளை வீசி எரிந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த தமிழக கவர்னருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் தேசியகொடியை ஏந்தி வரவேற்பளித்தனர்.

    தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. மேற்பார்வையில் 2 வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் 1,850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 89 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

    இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், செம்பை ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் வேலு குபேந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன்குமார், தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 89 பேர் மீது சட்டவிரோதமாக கூட்டம் சேருதல், அதிகாரிகளின் உத்தரவை மீறி போராட்டம் நடத்தியது, முறையற்ற தடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் (143, 188, 341, 427, 511 ஆகிய பிரிவுகள்) மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மன்னம்பந்தல் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த போராட்டக்காரர்கள் அனைவரையும் போலீசார் இரவு விடுதலை செய்தனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் தங்கையன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய சங்க செயலாளர் பாபுஜி முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி கூட்டத்தில்

    பேசினார். கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், 2021-22 பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக

    வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர், இளைஞர்

    பெருமன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
    திட்டச்சேரியில் நாம் தமிழர் கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட மரைக்கான்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை தாங்கினார்.
     
    மாவட்ட தலைவர் அறிவொளி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்புகளை மாற்றியமைத்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும், நிதி கட்டமைப்பை மேம்படுத்தி

    கட்சியின் வளர்ச்சியடைய வைக்க வேண்டும், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கட்சியை ஒவ்வொரு நிர்வா-கிகளும் அயராது பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு

    தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
     
    இதில் தொகுதி செயலாளர் ஆதித்தன், தொகுதி தலைவர் ராஜேஷ், தொகுதி பொருளாளர் நாகராஜன், தொகுதி இணை செயலா-ளர்கள் வேல்ராஜ், மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிளை நிர்வாகி முத்துக்குமார் நன்றி கூறினார்.
    திருக்குவளை அருகே மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதூர் பழையங்குடியில் அமைந்-துள்ள நல்ல மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பால் காவடி, அலகு, மயில், செடில், தேர், ரத காவடி உள்ளிட்ட 500-க்கும் மேற்-பட்ட காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
     
    பல்வேறு கிராமங்களில் இருந்து காவடிகளை எடுத்து வந்த பக்தர்கள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க அரங்கேறிய காவடி

    ஆட்டத்தில் இளைஞர்களும் நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து பால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    தரங்கம்பாடி அருகே தொடர் மழையால் அழுகி, முளைக்க தொடங்கிய உளுந்து பயிருக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தரங்கம்பாடி:

    டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் உளுந்து பயிர் அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், தரங்கம்பாடி தாலுக்கா கிள்ளியூர் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கரில் மானாவாரி ஊடுபயிரான உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது, வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் 4 நாட்கள் பெய்த கோடை மழையினால் அறுவடை செய்த உளுந்து பயிர்களை விவசாயிகள் வயலிலேயே குவித்து தார்படுதா போட்டு மூடி வைத்தனர்.

    ஆனால் இந்த உளுந்து பயிரானது தொடர் மழையால் அழுகியும், முளைக்கவும் தொடங்கியுள்ளது. கடந்த சம்பா அறுவடையின்போது மழையால் அறுவடை பாதிக்கப்பட்டதாலும், தற்போது உளுந்து பயிர் அறுவடையிலும் மழையில் நனைந்து அழுகியதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

    அரசு வேளாண்துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மழையில் நனைந்து வீணாகிய எஞ்சிய உளுந்து பயிரை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
    மழையால் உளுந்து பயிர்கள் நாசமடைந்ததால் இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    நாகப்பட்டினம்:

    நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

    கூட்டத்துக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவருமான தனபால் தலைமை தாங்கினார். 

    கூட்டத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் உதவிகள், போராட்டம் நடத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  

    பின்னர் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் பருவம்தவறி 59 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததால் உளுந்து பயிர்கள் அனைத்துமே அழிந்து போய்விட்டது. தமிழக அரசு விவசாயிகளைப் பாதுகாப்போம் என்று சொன்னதுபோல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 

    மேலும் விவசாயிகளுக்கு உளுந்து பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். 

    காப்பீட்டு நிறுவனம் விளைச்சலே இல்லாதபோது குறைந்த பட்ச விளைச்சலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். 

    இது குறித்து வேளாண்துறை உரிய வகையில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், விளைச்சலை மதிப்பீடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாய சங்கங்களின் கூட்ட இயக்கம் சார்பில் வருகிற 20-ந் தேதி காலை 11 மணியளவில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    வேதாரண்யம் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட கிணறு திடீரென உள்வாங்கியதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறு ஒன்றை வெட்டினார். நேற்று முன்தினம் இரவு வரை அந்த கிணற்றை பயன்படுத்தியவர் அதிகாலையில் எழுந்து பார்த்த போது கிணற்றைக் காணவில்லை.

    இதுகுறித்து விவசாயி கந்தசாமி கூறுகையில், மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் ஊடுபயிராக கடலை சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. இதற்காக நான்காண்டு-களுக்கு முன்பு இந்த இடத்தில் கிணறு ஒன்றை வெட்டினேன்.
     
    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்து கிணறு அமைத்தேன். 50 ஆயிரம் செங்கற்கள் இதற்கு தேவைப்பட்டது. 20 அடி சுற்றளவும் 22 அடி ஆழமும் கொண்ட இந்த கிணற்றிற்கு அந்த கிணற்றை அமைக்க இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்தேன்.
     
    தண்ணீரும் நன்றாக ஊறியது.அதனை வைத்து சிறப்பாக விவசாயம் செய்து வந்தேன். ஆனால் நேற்று காலை பார்த்தபோது கிணறு பூமிக்குள் உள்வாங்கியிருந்தது.

    காரணம் என்னவென்று தெரியவில்லை. மண்ணும் சரிந்துவிட்டது. கிணறு எங்கே போனது என்று தெரியவில்லை. அதற்கு முதல் நாள் இப்பகுதியில் இடி விழுந்து சில வீடுகளில் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. 

    இடி விழுந்தது தான் கிணறு காணாமல் போனதற்கு காரணமா அல்லது நில நடுக்கமா? வேறு காரணங்களா என்பது தெரியவில்லை. இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.
    ×