என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
திருக்குவளை அருகே மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதூர் பழையங்குடியில் அமைந்-துள்ள நல்ல மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பால் காவடி, அலகு, மயில், செடில், தேர், ரத காவடி உள்ளிட்ட 500-க்கும் மேற்-பட்ட காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பல்வேறு கிராமங்களில் இருந்து காவடிகளை எடுத்து வந்த பக்தர்கள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க அரங்கேறிய காவடி
ஆட்டத்தில் இளைஞர்களும் நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து பால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Next Story






