என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் தெருமுனை பிரசாரக் கூட்டம்.
பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் தங்கையன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய சங்க செயலாளர் பாபுஜி முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி கூட்டத்தில்
பேசினார். கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், 2021-22 பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக
வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர், இளைஞர்
பெருமன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Next Story






