search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளுந்து பயிர்"

    • உளுந்து சாகுபடியின் போது கந்தகச் சத்து பற்றாக்குறையால் செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறம் காணப்படும்.
    • ஜிங்க் சல்பேட் கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை தெளிக்க வேண்டும்.

    உடுமலை:

    உளுந்து பயிரில் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையால் ஏற்படும் மகசூல் இழப்பை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் நர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனைமலை வட்டாரங்களில் உளுந்து, ஜூன் மற்றும் -ஜூலை மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது. உளுந்து சாகுபடியின் போது கந்தகச் சத்து பற்றாக்குறையால் செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறம் காணப்படும்.முதலில் புதிதாக வளர்ந்த இலைகள் பாதிக்கப்பட்டு படிப்படியாக முழு செடியும் நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். இதை நிவர்த்தி செய்ய கால்சியம் சல்பேட் கரைசலை இலைவழி தெளிப்பாக தெளிக்கவும்.

    துத்தநாக சத்து பற்றாக்குறையால் இளம் இலைகள் சிறியவையாகவும், கணுவிடைப்பகுதிகள் குறுகி இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நுனியில் கொத்தாக வளர்ந்து கொத்து இலை நோய் போல் காணப்படும்.ஜிங்க் சல்பேட் கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை தெளிக்க வேண்டும். போரான் சத்து பற்றாக்குறை இருந்தால் தண்டினுடைய மேல் கணுவிடை பகுதிகள் சிறுத்து இருக்கும். ரோஜா பூ இதழ் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கும்.வளர் முனைக்கு அருகில் இருக்கும் மேல் இலைகள், மஞ்சள் நிறமாகவும் சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

    இதற்கு போராக்ஸ், 0.2 சதவீதம் கரைசலை இரண்டு வார இடைவெளியில் இலை வழியாக தெளிக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் விவசாயிகள் நல்ல மகசூலை ஈட்டலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருவாரூர் மாவட்ட அளவில் 1 லட்சம் ஹெக்டரிலும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நெல்லுக்கு அறிமுகப்படுத்தியது.
    • சம்பா மற்றும் தாளடி நெல் குறைந்த அறுவடைக்குப்பின் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்திட விவசாயிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    நீடாமங்கலம்:

    குடவாசல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பயறு வகை பயர்களின் பரப்பினை மாநிலம் அளவில் 10 லட்சம் ஹெக்டரிலும், திருவாரூர் மாவட்ட அளவில் 1 லட்சம் ஹெக்டரிலும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நெல்லுக்கு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

    பின் பயறு வகை சாகுபடி என்ற திட்டத்தினை வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா மற்றும் தாளடி நெல் குறைந்த அறுவடைக்குப்பின் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்திட விவசாயிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    நெல்லுக்குப்பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் குடவாசல் வட்டாரத்தில் உளுந்து மற்றும் பயறு சாகுபடிக்கு இவ்வாண்டுக்கு இலக்காக 22913 ஏக்கர் பரப்பு நிர்ணயிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்திற்கு தேவையான உளுந்து விபிஎன்8, ஏடிடி5 மற்றும் பயறு சிஓ8 விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களான குடவாசல், கண்டிரமாணிக்கம், தென்கரை மற்றும் அய்யம்பேட்டை ஆகிய இடங்களில் இருப்பு வைக்கப்பட்டு எக்டருக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாட்களில் இடுப்பொருட்கள் செலவின்றி அதிக வருமானம் ஈட்டுவது மட்டுமின்றி பயறு வகை பயிர்களின் வேர்முடுச்சுகளில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் மண்ணில் தழைச்சத்து பெருகி அடுத்துப்பயிர் செழித்து வளர மிகவும் உதவுகிறது.

    ஆறிய வடிகஞ்சியுடன் 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை கலந்து விதை நேர்த்தி செய்து ஏக்கருக்கு 8 கிலோ வீதம் விதைக்கலாம், 2 சதவீதம் டி.ஏ.பி கரைசலினை பூக்கும் தருணத்திலும், 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

    இந்த தொழில்நுட்பங்களின் மூலம் 10 சதவீதம் கூடுதலாக விளைச்சல் ஏற்படுகின்றது.

    எனவே, விவசாயிகள் சம்பா அறுவடைக்கு பின்னர், உளுந்து பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×