search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green Beans"

    • பச்சைப் பயறு கொள்முதல் செய்யும் திட்டத்தை திருவள்ளுர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
    • ஒரு ஹெக்டேருக்கு 384 கிலோ வீதம் 1,200 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் ராபி பருவம் 2022-23-ல் பச்சைப்பயறு, சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட பச்சைப்பயறு அறுவடை தற்போது தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ், பச்சைப் பயறு கொள்முதல் செய்யும் திட்டத்தை திருவள்ளுர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து 3 விவசாயிகளுக்கு நெல் விளைபொருளுக்காக ரூ.5.10 லட்சம் மதிப்பில் பொருளீட்டுக் கடன் பெற்றதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளையும், 3 உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கப்படுவதற் கான அனுமதி ஆணை களையும், 2 விவசாயிகளுக்கு பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகளையும் அமைச்சர் வழங்கினார்.

    இதுகுறித்து அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ஒரு ஹெக்டே ருக்கு 257 கிலோ வீதம் 675.65 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப் பட்டது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தர குறியீட்டின் படி கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் ஒன்றுக்கு ரூ.4.80 வீதம் உயர்த்தப்பட்டு ரூ77.55 என்ற விலைக்கு தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் விவசாயிகளிடம் இருந்து பச்சைப்பயறு கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு ஹெக்டேருக்கு 384 கிலோ வீதம் 1,200 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப் பட்டுள்ளது.

    எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வரும் மே 29-ந் தேதிக்குள் தங்களின் ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன், திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர் சீனிராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • திருவாரூர் மாவட்ட அளவில் 1 லட்சம் ஹெக்டரிலும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நெல்லுக்கு அறிமுகப்படுத்தியது.
    • சம்பா மற்றும் தாளடி நெல் குறைந்த அறுவடைக்குப்பின் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்திட விவசாயிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    நீடாமங்கலம்:

    குடவாசல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பயறு வகை பயர்களின் பரப்பினை மாநிலம் அளவில் 10 லட்சம் ஹெக்டரிலும், திருவாரூர் மாவட்ட அளவில் 1 லட்சம் ஹெக்டரிலும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நெல்லுக்கு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

    பின் பயறு வகை சாகுபடி என்ற திட்டத்தினை வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா மற்றும் தாளடி நெல் குறைந்த அறுவடைக்குப்பின் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்திட விவசாயிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    நெல்லுக்குப்பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் குடவாசல் வட்டாரத்தில் உளுந்து மற்றும் பயறு சாகுபடிக்கு இவ்வாண்டுக்கு இலக்காக 22913 ஏக்கர் பரப்பு நிர்ணயிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்திற்கு தேவையான உளுந்து விபிஎன்8, ஏடிடி5 மற்றும் பயறு சிஓ8 விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களான குடவாசல், கண்டிரமாணிக்கம், தென்கரை மற்றும் அய்யம்பேட்டை ஆகிய இடங்களில் இருப்பு வைக்கப்பட்டு எக்டருக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாட்களில் இடுப்பொருட்கள் செலவின்றி அதிக வருமானம் ஈட்டுவது மட்டுமின்றி பயறு வகை பயிர்களின் வேர்முடுச்சுகளில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் மண்ணில் தழைச்சத்து பெருகி அடுத்துப்பயிர் செழித்து வளர மிகவும் உதவுகிறது.

    ஆறிய வடிகஞ்சியுடன் 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை கலந்து விதை நேர்த்தி செய்து ஏக்கருக்கு 8 கிலோ வீதம் விதைக்கலாம், 2 சதவீதம் டி.ஏ.பி கரைசலினை பூக்கும் தருணத்திலும், 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

    இந்த தொழில்நுட்பங்களின் மூலம் 10 சதவீதம் கூடுதலாக விளைச்சல் ஏற்படுகின்றது.

    எனவே, விவசாயிகள் சம்பா அறுவடைக்கு பின்னர், உளுந்து பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×