என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சி ஆலோசனை கூட்டம்
நாம் தமிழர் கட்சி கூட்டம்
திட்டச்சேரியில் நாம் தமிழர் கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட மரைக்கான்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் அறிவொளி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்புகளை மாற்றியமைத்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும், நிதி கட்டமைப்பை மேம்படுத்தி
கட்சியின் வளர்ச்சியடைய வைக்க வேண்டும், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கட்சியை ஒவ்வொரு நிர்வா-கிகளும் அயராது பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் தொகுதி செயலாளர் ஆதித்தன், தொகுதி தலைவர் ராஜேஷ், தொகுதி பொருளாளர் நாகராஜன், தொகுதி இணை செயலா-ளர்கள் வேல்ராஜ், மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கிளை நிர்வாகி முத்துக்குமார் நன்றி கூறினார்.
Next Story






