என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பசுமை துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
Byமாலை மலர்16 April 2022 8:29 AM GMT (Updated: 16 April 2022 8:29 AM GMT)
பசுமை துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என நாகையில் அமைச்சர் எ.வ. வேலு பேட்டியளித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூரில் புதிய தொடங்கப்-பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
மருத்துவ கல்லூரியில் அடிப்படை கட்டமைப்புகள், வகுபபறைகள், ஆய்வுக் கூடங்களை ஆய்வு செய்த அவர், மாணவர்களுக்கு தேவை-யான உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை
விரைந்து முடிக்க அதிகாரி-களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் வேலு நிருபர்களிடம் பேசுகையில்:-
தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முழுமையாக மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக
தெரிவித்த அவர், தமிழகம் சாலைப் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக இருப்பதால் கடந்த ஓராண்டில் 15 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக
பெருமிதம் தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் 360 கோடி ரூபாயில் நாகப்பட்டினத்தில் பசுமை துறைமுகம் அமைக்கப்படும் என கூறி இதுவரை செயல்படுத்தாது
குறித்த கேள்விக்கு. கடந்த ஆட்சியில் அறிவித்து கிடப்பில் போடப்பட்ட நாகப்பட்டினம் பசுமைதுறைமுகம் அமைப்பது அல்லது விரிவுபடுத்துதல் குறித்து முறையாக ஆய்வு செய்து அதனை
நடைமுறைப்படுத்துவதற்கான நடவ-டிக்கை எடுக்கப்படுமென கூறினார்.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை திட்டம் ரத்து என்ற செய்தி தவறானது எனவும், சாலை அமைக்கத் தேவையான இடங்களை கையகப்படுத்தி
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு டெண்டர் பணிகளும்நிறைவு பெற்று பணிகள் தொடங்க உள்ள நிலையில் இதுபோன்ற செய்தி தவறானது என தெரிவித்தார்.
செல்வராஜ் எம்.பி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூரில் புதிய தொடங்கப்-பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
மருத்துவ கல்லூரியில் அடிப்படை கட்டமைப்புகள், வகுபபறைகள், ஆய்வுக் கூடங்களை ஆய்வு செய்த அவர், மாணவர்களுக்கு தேவை-யான உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை
விரைந்து முடிக்க அதிகாரி-களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் வேலு நிருபர்களிடம் பேசுகையில்:-
தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முழுமையாக மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக
தெரிவித்த அவர், தமிழகம் சாலைப் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக இருப்பதால் கடந்த ஓராண்டில் 15 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக
பெருமிதம் தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் 360 கோடி ரூபாயில் நாகப்பட்டினத்தில் பசுமை துறைமுகம் அமைக்கப்படும் என கூறி இதுவரை செயல்படுத்தாது
குறித்த கேள்விக்கு. கடந்த ஆட்சியில் அறிவித்து கிடப்பில் போடப்பட்ட நாகப்பட்டினம் பசுமைதுறைமுகம் அமைப்பது அல்லது விரிவுபடுத்துதல் குறித்து முறையாக ஆய்வு செய்து அதனை
நடைமுறைப்படுத்துவதற்கான நடவ-டிக்கை எடுக்கப்படுமென கூறினார்.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை திட்டம் ரத்து என்ற செய்தி தவறானது எனவும், சாலை அமைக்கத் தேவையான இடங்களை கையகப்படுத்தி
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு டெண்டர் பணிகளும்நிறைவு பெற்று பணிகள் தொடங்க உள்ள நிலையில் இதுபோன்ற செய்தி தவறானது என தெரிவித்தார்.
செல்வராஜ் எம்.பி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X