என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சமாதான புறா பறக்கவிட்டனர்.
    • 110 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 41 லட்சத்து மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 7 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுகந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சமாதான புறா பறக்க விட்டனர். தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

    அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 110 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 41 லட்சத்து மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது.
    • முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றுமுதல் நாள் முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம், அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
    • மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சியில், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆசாத் மார்கெட் கட்டுமானப் பணி மற்றும் மகாலெட்சுமி நகரில் ரூபாய் 1.675 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை.

    ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஒருங்கிணைந்த அறிவுசார் மையம் கட்டும் பணியினையும், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 5.30 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் அக்கரைக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமானப் பணியினையும் நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

    நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர். இதேபோல நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகமும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முகப்பு பகுதி நேற்று முதல் 3 நாட்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து.
    • விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் 1525 வகை பாரம்பரிய மருத்துவம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டு அதனை சேகரித்து வைத்து உள்ளார்.

    தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது சிவரஞ்சனி சரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1525 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.

    அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து. அதனை அறுவடை செய்யது பாதுகாத்து வருகிறார்

    1525 வகையான நெல்மணிகளை ஆவணப் படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்கள அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வைத்துள்ளார் பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்படு அதனை காட்சிப்படுத்தி வைத்துள்ளார்இ ப்பணியை லாபநோக்கமின்றி சேவை மனப்பாண்மையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.

    இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுகிற வகையில் பாரம்பரிய வேளாண் முறைகளையும் இயற்கை உர பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தேரை பங்குத்தந்தை வின்சென்ட்–தேவராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
    • 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாலை நவநாள் ஜெபம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரத்தில் புனிதசெபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 51-வது ஆண்டு திருவிழாவானது கடந்த 4-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாலை நவநாள் ஜெபம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.தேரை பங்குத்தந்தை வின்சென்ட்–தேவராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் மின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் முன்னதாக மிக்கேல் சம்மன்சு தேரும், அடுத்து புனிதபாத்திமா அன்னை, சூசையப்பர், திருப்பூண்டி பங்குத்தந்தை வின்சென்ட்தேவராஜ், நாகை மறை மாவட்ட அதிபர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.மற்றும் செபஸ்தியார், கடை சியாக ஆரோக்கியமாதா தேர் சென்றது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது.

    தேரானது முக்கிய வீதிவழியாக சென்று பின்னர் ஆலயத்தை அடைந்தது. நேற்று காலை பங்குத்தந்தை தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து குழந்தைகளுக்கு ஞானஸ்தானம், புதுநன்மை வழங்கப்பட்டது. பின்னர் மாலை கொடி இறக்கம் நடைபெற்றது.

    இதில் புனித அன்னாள் சபை சகோதரிகள், புனித செபஸ்தியார் இளைஞரா நற்பணிமன்றம், ஆரோக்கிய ஆன்னை அன்பியம், புனிதசெபஸ்தியார் அன்பியம் மற்றும் பக்தர்கள் ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காதாரத்துறை, காவல்துறை, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 3 குழுக்களாக அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர்.
    • கைப்பற்றபட்ட கடைகளுக்கு ரூ.5000 வீதம் 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய, பழைய பேருந்து நிலையங்கள், பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 3 குழுக்களாக அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான்மசாலா, குட்கா மற்றும் காலாவதியான உணவுப பொருட்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பீலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பான முறையில் அழித்தனர். கைப்பற்றபட்ட கடைகளுக்கு ரூ.5000 வீதம் 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.

    • மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
    • கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ், தமிழ் முறைப்படி வேள்வி செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேயர் மடத்தில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. தமிழ் புலவர் காங்கேய சித்தருக்கு கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ் தமிழ் முறைப்படி வேள்விசெய்தார்.

    தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உபயத்தை பெருங்கடம்பனூரை சேர்ந்த நித்தியானந்தம், ஜெயகுமார் குடும்பத்தினர் செய்தனர்.

    மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    • நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மூவர்ண தேசியக்கொடி ஊர்வலத்தை பார்வையிட்டு மாணவ- மாணவிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.
    • மழலைகள் சுமந்து சென்ற மூவர்ண தேசிய கொடியின் ஊர்வலத்தை வழி நெடுகளிலும் நின்றிருந்த பொதுமக்கள் கண்டு வியந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சி சார்பில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அங்கு களைகட்டி வருகின்றன. இதைப்போல் நேற்று நாகப்பட்டினம் பால்பண்ணைசேரி இ.ஜி.எஸ் பிள்ளை சர்வதேச பள்ளி சார்பில் சுதந்திர தின விழாவின் மகத்துவத்தை மக்கள் அறிந்திடும் வகையில் 75 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நாகப்பட்டினம் அவுரித்திடலில் துவங்கிய கொடி ஊர்வல பேரணி தொடங்கி தொடர்ந்து பள்ளி மழலைகள் 75 அடி நீளம் கொண்ட மூவர்ண தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பால் பண்ணைச்சேரியில் அமைந்துள்ள இஜிஎஸ் பிள்ளை சர்வதேச பள்ளி வரை பேரணியாக சென்றனர்.

    அப்போது மழலைகள் சுமந்து சென்ற மூவர்ண தேசிய கொடியின் ஊர்வலத்தை வழி நெடுகளிலும் நின்றிருந்த பொதுமக்கள் கண்டு வியந்தனர். பின்னர் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மூவர்ண தேசியக்கொடி ஊர்வலத்தை பார்வையிட்டு மாணவ- மாணவிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.

    • அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்குபோதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டது.
    • திருமருகல் அரசுமேல்நிலை ப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில்போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையின் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா, குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருப்போரூர் பாலாஜி, கீழ்வேளுர் நாகைமாலி, பெருந்துறை ஜெயகுமார் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் எடுத்துக்கொண்டனர்.

    முதலமைச்சர் அறிவிப்பின்படி ஒருவார காலத்திற்கு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்க மாக அனைத்து பள்ளி களிலும் மாணவ ர்களுக்குபோதை ப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டது.

    இதை தொடர்ந்து திருமருகல் அரசுமேல்நிலை ப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை, அனைவரும் எடுத்து க்கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தி னையும் தொடங்கி வைத்தனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை காடம்பாடி பகுதி யில் பழைய ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் குப்பைகள் நிறைந்து நெருக்கடியாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வானுயர பறந்த கரும்புகை மண்டலத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் கருகி நாசமானது. தீ விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.
    • இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதவது,

    கடந்த 10ம்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.

    இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் அவர்களுக்கு உதவியாக இந்தியா பல்வேறு நிதி உதவிகள், பெட்ரோலிய பொருட்கள், மருந்து பொருட்களை வழங்கி உதவிகரமாக உள்ளது.

    இப்படிப்பட்ட சூழலிலும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்கிறது. இது தொடர்பாக எந்த அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி அந்த மீனவர்களையும், படகுகள், மீன்பிடி வலைகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கையின் தற்போதைய சூழலை வைத்து கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×