1250 பாரம்பரிய நெல் விதைகளை ஆவணப்படுத்திய பெண்ணுக்கு விருது 1 லட்சம் ரொக்கப்பரிசு

தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து.விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
சிவரஞ்சனி.
சிவரஞ்சனி.
Published on

வேதாரண்யம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் 1525 வகை பாரம்பரிய மருத்துவம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டு அதனை சேகரித்து வைத்து உள்ளார்.

தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது சிவரஞ்சனி சரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1525 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.

அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து. அதனை அறுவடை செய்யது பாதுகாத்து வருகிறார்

1525 வகையான நெல்மணிகளை ஆவணப் படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்கள அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வைத்துள்ளார் பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்படு அதனை காட்சிப்படுத்தி வைத்துள்ளார்இ ப்பணியை லாபநோக்கமின்றி சேவை மனப்பாண்மையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுகிற வகையில் பாரம்பரிய வேளாண் முறைகளையும் இயற்கை உர பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com