search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை நகராட்சியில் மேம்பாட்டு பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு
    X

    மழைநீர் வடிகால் பணியை ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு

    நாகை நகராட்சியில் மேம்பாட்டு பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு

    • பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
    • மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சியில், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆசாத் மார்கெட் கட்டுமானப் பணி மற்றும் மகாலெட்சுமி நகரில் ரூபாய் 1.675 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை.

    ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஒருங்கிணைந்த அறிவுசார் மையம் கட்டும் பணியினையும், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 5.30 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் அக்கரைக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமானப் பணியினையும் நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×