search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.50 ஆயிரம் மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    ஆய்வாளர்கள் திடீர் சோதனை

    ரூ.50 ஆயிரம் மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • காதாரத்துறை, காவல்துறை, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 3 குழுக்களாக அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர்.
    • கைப்பற்றபட்ட கடைகளுக்கு ரூ.5000 வீதம் 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய, பழைய பேருந்து நிலையங்கள், பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 3 குழுக்களாக அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான்மசாலா, குட்கா மற்றும் காலாவதியான உணவுப பொருட்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பீலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பான முறையில் அழித்தனர். கைப்பற்றபட்ட கடைகளுக்கு ரூ.5000 வீதம் 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.

    Next Story
    ×