search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saint Sebastian"

    • தேரை பங்குத்தந்தை வின்சென்ட்–தேவராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
    • 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாலை நவநாள் ஜெபம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரத்தில் புனிதசெபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 51-வது ஆண்டு திருவிழாவானது கடந்த 4-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாலை நவநாள் ஜெபம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.தேரை பங்குத்தந்தை வின்சென்ட்–தேவராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் மின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் முன்னதாக மிக்கேல் சம்மன்சு தேரும், அடுத்து புனிதபாத்திமா அன்னை, சூசையப்பர், திருப்பூண்டி பங்குத்தந்தை வின்சென்ட்தேவராஜ், நாகை மறை மாவட்ட அதிபர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.மற்றும் செபஸ்தியார், கடை சியாக ஆரோக்கியமாதா தேர் சென்றது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது.

    தேரானது முக்கிய வீதிவழியாக சென்று பின்னர் ஆலயத்தை அடைந்தது. நேற்று காலை பங்குத்தந்தை தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து குழந்தைகளுக்கு ஞானஸ்தானம், புதுநன்மை வழங்கப்பட்டது. பின்னர் மாலை கொடி இறக்கம் நடைபெற்றது.

    இதில் புனித அன்னாள் சபை சகோதரிகள், புனித செபஸ்தியார் இளைஞரா நற்பணிமன்றம், ஆரோக்கிய ஆன்னை அன்பியம், புனிதசெபஸ்தியார் அன்பியம் மற்றும் பக்தர்கள் ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×