search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cash prize"

    • பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.
    • சாகித்ய அகாடமி விருதுடன் ரூ.1,00,000 வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கௌரவமான விருது. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இலக்கியத் தகுதியின் மிகச் சிறந்த புத்தகங்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

    சாகித்ய அகாடமியானது 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி இந்திய அரசால் இலக்கிய உரையாடல், வெளியீடு மற்றும் ஊக்குவிப்புக்கான மைய நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆங்கிலம் உட்பட 24 இந்திய மொழிகளில் இலக்கிய விருதாக சாகித்ய அகாடமி வழங்கப்படுகிறது.

    இந்த விருதை தமிழில் பல எழுத்தாளர்கள் ஒவ்வொரு வருடமும் பெறுகிறார்கள். கல்கி, பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எஸ்.செல்லப்பா, பிரபஞ்சன் மற்றும் பல தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளனர்.

    மேலும், சாகித்ய அகாடமி விருதுடன் சேர்த்து 2009-லிருந்து ரொக்கப் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக பரிசுத் தொகையில் மாற்றம் இல்லாமல் அதே ரூ.1,00,000 வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, சாகித்ய அகாடமி விருதுடன் வழங்கப்படும் பரிசுத் தொகையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • பத்மஸ்ரீ நிறுவனம் வழங்கியது
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பெயிண்டர்களின் குழந்தைகளை தேர்வு செய்து ஆண்டு தோறும் 12 பேருக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது.

    புதுச்சேரி:

    மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பத்மஸ்ரீ என்ற நிறுவனம் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுவை மாநிலங்களில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தரமான பெயிண்ட் பிரஷ், ரோலர், மற்றும் ஓவிய பிரஷ்களை விற்பனை செய்து வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பெயிண்டர்களின் குழந்தைகளை தேர்வு செய்து ஆண்டு தோறும் 12 பேருக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது.

    அதுபோல் இந்த ஆண்டு பிளஸ் -2 தேர்வில் 600-க்கு559 மதிப்பெண் பெற்ற புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த பெயிண்டர் ரங்கநாதன் என்பவரின் மகள் விஜயலட்சுமிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இத்தொகையை புதுவை முத்தியால் பேட்டையில் அமைந்துள்ள ப்ளூ எண்டர்பிரைசஸ் உரிமையாளர் கோபால கிருஷ்ணன், பத்மஸ்ரீ நிறுவனத்தின் மேலாளர் சீனுவாசன் மற்றும் புதுவை முகவர் சிவராமன் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட பெயிண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம்.
    • தைவானில் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.

    தைவான்:

    பிரபலமான சுற்றுலாத்தலம் ஒன்று சுற்றுலாப்பயணிகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெகுமதிகளை வழங்க உள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது...

    பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம்... ஆனால் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.

    சுற்றுலாப்பயணிகளைக் கவரும் விதமாக தைவான் சுமார் 5 லட்சம் பேருக்கு பணம் அல்லது தள்ளுபடி ஊக்கத் தொகையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் 60 லட்சம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ள தைவான், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை இருமடங்காக்க முடிவு செய்துள்ளது.

    அதன்படி, 5 லட்சம் சுற்றுலாப்பயணிக்கு 13 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கமும், 90 ஆயிரம் சுற்றுலா குழுக்களுக்கு 54 ஆயிரம் ரூபாயும் தைவான் அரசு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவா்களுக்கான வள்ளலாா் என்கிற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைப்பெற்றது.
    • இதில் கலந்து ெகாண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வள்ளலாா் 200 என்கிற மாநிலப் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

    திருஅருட்பிரகாச வள்ளலாா் வருவிக்கவுற்ற 200-ஆம் ஆண்டுத் தொடங்குவதையொட்டி தமிழக அரசின் சாா்பிலும், சன்மாா்க்க சங்கங்களின் சாா்பிலும் பெருமளவிலான நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகின்றன.

    அதன் முன்னோட்டமாக சன்மாா்க்க சங்கங்களின் சாா்பாக, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சன்மாா்க்க மன்றத்துடன் இணைந்து மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் முதல் கட்டமாக, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தஞ்சாவூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கான வள்ளலாா்- 200 என்கிற பொதுத் தலைப்பில் பல்வேறு உள்தலைப்புகளில் பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இதில் 20 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைச் சோ்ந்த 122 மாணவா்கள் கலந்து கொண்டனா். துணைவேந்தா் திருவள்ளுவன் தொடங்கி வைத்த இப்போட்டியில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா் வாசுதேவன் முதல் பரிசாக ரூ. 5,000-ம், நாகப்பட்டினம் ஈ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவா் தினேஷ்பாபு இரண்டாம் பரிசாக ரூ. 3,000-ம், திருச்சி புனித சிலுவைக் கல்லூரி மாணவி மஞ்சுஸ்ரீ மூன்றாம் பரிசாக ரூ. 2,000-ம் பெற்றனா்.

    நிறைவு விழாவில் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பெயரன் கவிஞா் நிரஞ்சன் பாரதி வள்ளலாரும் பாரதியாரும்' என்ற தலைப்பில் பேசினாா்.

    பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன், வடலூா் தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தின் பொதுச் செயலா் வெற்றிவேல், அருள் சித்தா கோ் மருத்துவா் அருள் நாகலிங்கம், சத்திய ஆய்விருக்கை பொறுப்பாளா் மஞ்சுளா, முனைவா் சங்கரராமன், தமிழ்ப் பல்கலைக்கழகச் சன்மாா்க்க மன்ற ஒருங்கிணைப்பாளா் குறிஞ்சிவேந்தன், துணை ஒருங்கிணைப்பாளா்கள் தனலட்சுமி, ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து.
    • விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் 1525 வகை பாரம்பரிய மருத்துவம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டு அதனை சேகரித்து வைத்து உள்ளார்.

    தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது சிவரஞ்சனி சரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1525 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.

    அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து. அதனை அறுவடை செய்யது பாதுகாத்து வருகிறார்

    1525 வகையான நெல்மணிகளை ஆவணப் படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்கள அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வைத்துள்ளார் பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்படு அதனை காட்சிப்படுத்தி வைத்துள்ளார்இ ப்பணியை லாபநோக்கமின்றி சேவை மனப்பாண்மையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.

    இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுகிற வகையில் பாரம்பரிய வேளாண் முறைகளையும் இயற்கை உர பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
    கரூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டப்பிரிவின் சார்பில் முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி கரூர் தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளை கரூர் மாவட்ட கல்வி அதிகாரி கனகராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. 10, 15, 20 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

    போட்டிகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் ஆர்வத்துடன் இலக்கை நோக்கி சென்றனர்.இந்த போட்டிகளில் மொத்தம் 78 மாணவர்களும், 62 மாணவிகளும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி புண்ணியமூர்த்தி செய்திருந்தார். 
    ×