என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை அருகே கூட்டுறவு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஓய்வு பெற்ற செயலாளர் அழகுசுந்தரம் உறுப்பினர் கல்வி மற்றும் சேர்க்கை குறித்து எடுத்துரைத்தார்.

    மதுரை

    மதுரை கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகம் மற்றும் மதுரை கூட்டுறவு ஒன்றியம் இணைந்து கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வி முகாமை மதுரை அருகே உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடத்தியது.

    பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் அருள் பிரகாசம் வரவேற்றார்.

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜீவா, கூட்டுறவுச் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை எடுத்துரைத்துரைத்தார். கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகத்தின் இயக்குநர் தர்மராஜ் கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    மதுரை கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு பெற்ற செயலாளர் அழகுசுந்தரம் உறுப்பினர் கல்வி மற்றும் சேர்க்கை குறித்து எடுத்துரைத்தார்.

    • திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
    • 15 தினங்களுக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியை யொட்டி மதுரை- விருதுநகர் நான்குவழிச்சாலை செல்கிறது.

    நெடுஞ்சாலை உயரமானதால் ஓமியோபதி மருத்துவ கல்லூரி வளாகம் தாழ்வானது. இதனால் மழைக்காலங்களில் மறவன்குளம் கண்மாய் நிரம்பி குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போதெல்லாம் கல்லூரி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    கடந்தாண்டு பெய்த தொடர்மழையால் ஓமியோபதி கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழந்ததால் மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் 2 மாதத்திற்கு மேல் வகுப்புகள் நடந்தன.

    இந்த ஆ ண்டும் தற்போது உரப்பனூர் கண்மாய், மறவன்குளம் கண்மாய் உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றியுள்ள கண்மாய்கள் நிரம்பி உள்ள நிலையில் குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீ்ர் வர தொடங்கி உள்ளது.

    இதனால் திருமங்கலம் ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக புகுந்து வந்தது. இன்று காலை கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து இன்று மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறையின் வெளியிலேயே பாடம் நடத்தப்பட்டது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் கூறுகையில், வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் வகுப்புகளை நடத்த முடியவில்லை. நாளை முதல் 15 தினங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 2, 3, 4-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும், கிளினிக் வகுப்புகளும் நடைபெறும்.

    கிளினிக் வகுப்புகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஓமியோபதி மருத்துவ மனையில் நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். 15 தினங்களுக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.

    • திருமங்கலம் அருகே பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அமர்நாத். இவரது மனைவி காயத்ரி (வயது 30) சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் உறவினர் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்ரி திருமங்கலத்திற்கு வந்தார். அவர் கள்ளிக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்று விட்டு, மீண்டும் திருமங்க லத்திற்கு அரசு டவுன் பஸ்சில் திரும்பி வந்தார்.

    தான் அணிந்திருந்த நகை களை பாதுகாப்புக்காக கழற்றி பைக்குள் வைத்தி ருந்தார். இந்தநிலையில் திருமங்கலம் பஸ் நிலை யத்தில் இறங்கியபோது அவரது பை திறந்திருந்தது. உள்ளே பார்த்தபோது, பையில் வைத்திருந்த 7½ பவுன் தங்கச்செயினை காணவில்லை.

    யாரோ மர்ம நபர்கள் ஓடும் பஸ்சிலேயே காயத் ரியின் பையில் இருந்த தங்கச்செயினை நைசாக திருடிச்சென்று 

    • திருமங்கலம் அருகே தோட்டத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • முகவரி கேட்பது போல் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வம். இவர் பால்பண்ணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உசிலம்பட்டி பிரதான சாலையில் இருக்கிறது.

    நேற்று மாலை அந்த தோட்டத்தில் தங்களது மாடுகளை தெய்வத்தின் மனைவி செல்வராணி (வயது 52) கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஒரு முகவரியை கூறி, அதற்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்டனர்.

    அவர்களுக்கு செல்வராணி பதில் கூறிக்கொண்டிருந்த போது, அந்த நபர்கள் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து சித்தப்பட்டி போலீஸ் நிலையத்தில் செல்வராணி புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்துச்சென்ற 3 வாலிபர்களை தேடி வருகின்றனர். நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டுபிடிக்க அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • மதுரை ஆரப்பாளையம் வைகை கரை சாலையில் அன்னதானம் நடத்த எப்படி அனுமதித்தார்கள் என்று பொதுமக்கள் வினா எழுப்பி உள்ளனர்.
    • இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மதுரை

    தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியாக விளங்கும் மதுரை மாநகராட்சியில் மத்திய-மாநில அரசுகள் வழங்கும் நிதி மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1100 கோடி ரூபாய் மதிப்பில் பாலங்கள் அமைத்தல், பஸ் நிலையங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    அதில் மதுரை நகரில் ஓடும் வைகையாற்றின் இருபுறமும் ரூ. 380 கோடியில் நவீன சாலை அமைக்கும் பணியும் ஒன்று. இந்த திட்டத்தில் 80 சதவீத பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளன. அதனால் நகர் பகுதியில் இருந்து 4 வழிச்சாலைக்கு எளிதாக சென்றடையலாம் என நினைத்தது நடக்கவில்லை.

    பழைய குயவர்பாளையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வைகை கரை பகுதிகளிலும் இத்திட்டத்தின் கீழ் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் பேச்சியம்மன் படித்துறை, ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு சாலை பணிகள் முழுமையடைய வில்லை.

    மேற்கண்ட பகுதிகளில் ஒர்க்‌ஷாப்கள் அதிகம் என்பதால் அங்கு பழுதுக்கு வரும் வாகனங்களை இந்த சாலையில் நிறுத்திச் செல்கின்றனர். இதனால் வாகனம் நிறுத்துமிடமாக வைகை கரை சாலை மாறி வருகிறது. மேலும் அந்தப்பகு தியைச் சேர்ந்த சிலர் மாட்டு கொட்டகையாகவும் மாற்றியுள்ளனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.

    இதுபோன்ற இடையூறுக ளால் இந்த திட்டம் முழுமையாக முடியாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கிறது. இந்த சாலை திட்டத்திற்கான நோக்கம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் ஆரப்பாளையம் அருகே உள்ள வைகை தென்கரை சாலையில் அன்னதான பந்தல் போட்ட வினோதம் நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று அன்னதானம் நடைபெற்றது. இதற்காக யாருடைய அனுமதியும் இல்லாமல் பலகோடி மதிப்பில் போடப்பட்ட சாலையை முழுமையாக ஆக்கிரமித்து ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மதுரையில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்பவர்களை பாய்ந்து பிடித்து அபராதம் வசூலிக்கும் போலீசார் சாலை விதிகளை மீறிவிட்டதாக சாதாரண மக்களிடம் ஆயிரக்கணக்கில் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஆனால் சாலையையே ஆக்கிரமித்து அன்னதானம் நடத்த எப்படி அனுமதித்தார்கள் என்று பொதுமக்கள் வினா எழுப்பி உள்ளனர்.

    போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ரூ. 380 கோடியில் போடப்பட்ட வைகை கரை சாலை திட்டம் கேள்விக் குறியாகி உள்ளது.

    இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், நகரில் உள்ள கோவில்களில் திருவிழா நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சி மற்றும் பதவிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைக்கின்றனர். இதனால் விழா நடத்துவோர் விதிகளை மீறலாம் என்ற தொணியில் இஷ்டத்திற்கு சாலைகளை மறித்து மேடை அமைப்பது, மின் கம்பத்தில் மின்சாரம் திருடுவது, சாலைகளை தோண்டி கட்சிக்கொடிகளை நடுவது போன்ற செயல்கள் நடந்து வருகிறது. இத னால் அதிகாரிகளும், போலீசாரும் எதுவும் செய்யமுடியாமல் மவுனம் காத்து வருகின்றனர். யாரும் கேட்காததால் இதுபோன்ற விதிமீறல்கள் மதுரையில் தொடர்ந்து நடந்து வருவது வேதனைக்குரியது என்றனர்.

    சாலையில் பந்தல் அமைக்கப்பட்ட பகுதி மேயர் இந்திராணியின் சொந்த வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    • அகில இந்திய போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம் பிடித்தார்.
    • அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மத்திய பிரதேச மாநிலம், பூனே நகரில் 71-வது அகில இந்திய அளவிலான போலீசாருக்கான ஆணழகன் போட்டி நடந்தது. தமிழகம் சார்பில் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் சிவா கலந்து கொண்டார்.

    இவர் 60 கிலோ எடை பிரிவில் மணிப்பூர், உத்தரகாண்ட் வீரர்களை தோற்கடித்து முதலிடம் பெற்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் 2019-ம் ஆண்டு நடந்த போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் சிவா முதல் பரிசு பெற்றார். அதன் பிறகு கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் போட்டி நடக்கவில்லை. 2022-ம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டியில் மதுரை சிவா கலந்து கொண்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய ஆணழகன் போட்டியில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற மதுரை போலீஸ்காரர் சிவாவுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி (வயது 23). இவருக்கும், சாப்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (27) என்ப வருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது ஜெகதீஸ்வரியின் பெற்றோர் 25 பவுன் நகைகள், ரூ. 2½ லட்சம் ரொக்கப்பணம் வரதட்ச ணையாக கொடுத்துள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் அவர் பணி காரணமாக அமெரிக்கா செல்ல இருந்தார். ஆகவே அவர் தனது மனைவியை சாப்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, அமெரிக்கா சென்று விட்டார். மாமனார் மற்றும் மாமியாருடன் ஜெகதீஸ்வரி வசித்து வந்தார்.

    அப்போது அவரிடம் ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகதீஸ்வரி கணவர் வீட்டில் இருந்து பேரையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனைத்தொடர்ந்து செல்வகுமார் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட தொல்லை தந்ததாக தனது கணவர் குடும்பத்தினர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் ஜெகதீஸ்வரி புகார் செய்தார்.

    அதன் பேரில் செல்வகுமார், அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள்.
    • சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் பவுர்ணமி பூஜைக்காக இன்று முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.

    இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அனுமதி வழங்கப்படும்.

    தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த மூன்று பிரதோஷங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமிக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததாலும் தொடர்மழை அறிவிப்பு காரணமாகவும், நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறி சென்ற சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்திருந்தனர்.

    இந்நிலையில் தற்போது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் பவுர்ணமி பூஜைக்காக இன்று முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    • வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிளை வழிமறித்து சாவியை பிடுங்கி தகராறு செய்தனர்.

    மதுரை

    மதுரை அன்சாரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோசப் லியோன் (40). வங்கி ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் மகபூப்பாளையம் வாய்க்கால் கரைக்கு வந்தார். குழந்தை மாரியம்மன் கோவில் அருகே, குடிபோதையில் இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சாவியை பிடுங்கி தகராறு செய்தனர்.

    இதை ஆரோக்கிய ஜோசப் லியோன் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இதில் தொடர்பு டைய குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தி ல்குமார் உத்தரவிட்டார்.

    தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரசாத் ஆலோசனையின்பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அடங்கிய தனிப்படை அமைக்க ப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி எல்லீஸ் நகர் சலீம் மகன் முஸ்தபா (24), மகபூப்பா ளை யம், கோவில் பிள்ளை காலனி பொன்ராஜ் மகன் மணிமுத்து (24), எஸ்.எஸ். காலனி ஜோதி மகன் டேவிட் குமார் (24), அன்சாரி நகர் நூருதீன் சசுலி மகன் மவுலி ஆகியோரை கைது செய்த னர்.

    • மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
    • கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்’ என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    மதுரை

    மதுரை கே.கே. நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    அதில் 'மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம், செராமிக் பற்கள் கட்டுதல், காக்ளியர் இம்பிளான்ட் ஆகிய சிகிச்சைகள் நடைமுறையில் உள்ளதா? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.

    அதற்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் கொடுத்து உள்ள உள்ள பதிலில், "மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை. இருந்த போதிலும் அங்கு விரைவில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளது.

    இது தவிர மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செராமிக் பற்கள் கட்டுதல், காது-மூக்கு- தொண்டை சிகிச்சை பிரிவில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் குழந்தை இல்லா தம்பதி யர் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இதனால் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதி யாகவும் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு சில குடும்பத்தை விவகாரத்து வரை கொண்டு சென்று விடுகிறது.

    எனவே 'எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்' என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை நன்கு புரிந்து கொண்ட தனியார் மையங்கள், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்கின்றன. எனவே அங்கு பணக்காரர்களுக்கு மட்டுமே குழந்தையை பாக்கியம் கிட்டும் என்ற நிலை உள்ளது.

    தமிழகத்தில் 155 தனியார் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மதுரையில் மட்டும் 11 மையங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இல்லை.

    எனவே மதுரை அரசினர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்படி செய்தால் குழந்தை இல்லாத ஏழை- எளிய தம்பதிகளும் இங்கு வந்து இலவசமாக சிகிச்சை பெற இயலும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கார்த்திகை தேரோட்டம் நடந்தது.
    • நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.



    தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்-தெய்வானை.

     திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலை யில் தங்கமயில் , தங்க குதிரை , வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுப்பிரமணியசாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தேரோட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கட்டுப்பாடு களுடன் நடந்தது. கொரோனா பரவல் தடை நீக்கப்பட்ட பின் இன்று நடந்த கார்த்திகை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காலை 11.30 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்த ருளினர். அதனைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் எழுப்ப பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்ப ரங்குன்றம், மதுரை திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருப்பரங்குன்றத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    கார்த்திகை தீபத்திரு நாளான இன்று மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு அதன் பின் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் திருப்பரங்குன்றம் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    சரியாக மாலை 6 மணிக்கு மலை மேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் குவிந்தனர். மகாதீபம் ஏற்றப்பட்ட பின் வீடுகளில் தீபம் ஏற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பனை கொளுத்தப்படும். இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை (7-ந் தேதி) தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.

    கார்த்திகை திருவிழாவை யொட்டி மலை மற்றும் ரத வீதிகளில் நூற்றுக்க ணக்கான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.


    • தி.மு.க.- விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
    • அலெக்ஸ், சகோதரர் ஜெயக்குமார், சதீஷ்குமார், சதீஷ் சகோதரர் மற்றும் சிறுத்தை ராஜா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வைத்தியநாதபுரம், கங்காணி சந்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி. சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் எஸ்.எஸ்.காலனி பழைய போலீஸ் நிலையம் அருகில், கட்சிக்கொடியேற்ற முயன்றனர்.

    இதற்கு அதே பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கினர். இது தொடர்பாக சதீஷ்குமார், எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ரமேஷ் (48), மணிகண்டன், கார்த்திக், அவரது சகோதரர் மற்றும் சிலரை தேடி வருகிறார்.

    இதே வழக்கில் ராஜீவ்காந்தி நகர், ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ், சகோதரர் ஜெயக்குமார், சதீஷ்குமார், சதீஷ் சகோதரர் மற்றும் சிறுத்தை ராஜா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×