என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்ணிடம் நகை பறிப்பு
- திருமங்கலம் அருகே தோட்டத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- முகவரி கேட்பது போல் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வம். இவர் பால்பண்ணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உசிலம்பட்டி பிரதான சாலையில் இருக்கிறது.
நேற்று மாலை அந்த தோட்டத்தில் தங்களது மாடுகளை தெய்வத்தின் மனைவி செல்வராணி (வயது 52) கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஒரு முகவரியை கூறி, அதற்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்டனர்.
அவர்களுக்கு செல்வராணி பதில் கூறிக்கொண்டிருந்த போது, அந்த நபர்கள் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து சித்தப்பட்டி போலீஸ் நிலையத்தில் செல்வராணி புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்துச்சென்ற 3 வாலிபர்களை தேடி வருகின்றனர். நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டுபிடிக்க அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்