என் மலர்tooltip icon

    மதுரை

    • பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர்
    • மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாளான இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

    மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான இன்று பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளில் அனுப்பப்பட்டனர்.

    பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர்.

    இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அரவிந்த் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. கொடியேந்தி வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி, மணிமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    • துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழகத்தினர் என பெரும் திரளானோர் பங்கேற்க வேண்டுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    மதுரை

    மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள், அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடபட்டிமணிமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை (17-ந்தேதி) வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று விலை உயர்ந்த கார், மோட்டார் பைக், தங்கக்காசுகள் என பல்வேறு பரிசுப் பொருட்களை சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் வழங்கி பாராட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலங்கா நல்லூர் வருகைதர உள்ளார். இதற்காக இன்று (16-ந் தேதி) விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 7 மணியளவில் வருகை தர உள்ளார்.

    எனவே வரலாறு காணாத வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்கும் வகையில் தி.மு.க.வினர் கையில் இருவண்ண கொடியேந்தி எழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமாயும், இந்த மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட கழகத்தினர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழகத்தினர் என பெரும் திரளானோர் பங்கேற்க வேண்டுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ் குடியிருப்புக்குள் லாரியை நிறுத்தி பைப்புகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 30 இரும்பு பைப்புகள் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை திடீர் நகர் போலீஸ் குடியிருப்பில் இரும்பு பைப்புகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. மர்ம நபர்கள் 30 இரும்பு பைப்புகளையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து கான்டிராக்டர் பாண்டி, திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் லோகேசுவரி வழக்குப் பதிவு செய்தார். போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அப்போது போலீஸ் குடியி ருப்புக்குள் லாரியில் இரும்பு பைப்புகளை எடுத்து செல்வது தெரிய வந்தது.

    அந்த லாரியின் பதிவெண் பற்றிய விவரம் தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அவனியாபுரம் எம்.எம்.சி காலனியில் பதுங்கி இருந்த வாலிரை பிடித்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 30 இரும்பு பைப்புகள் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.

    இரும்பு பைப்புகளுடன் லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், பிடி பட்ட வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் ஆந்திர மாநிலம், குண்டூர், சிரங்கி பாலத்தை சேர்ந்த தும்மா மார் ரெட்டி (28) என்பது தெரியவந்தது. இவர் வேலை பார்க்கும் நிறுவனம், மதுரையில் புதைவட கம்பிகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    அந்த நிறுவனத்துக்கு இரும்பு பைப்புகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரி கட்டுவதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இரும்பு பைப்புகள் கிடைக்க வில்லை. மதுரையில் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள், புதைவட கம்பிகள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு கம்பெனியில் உள்ள இரும்பு பைப்புகளை திருடுவது என்று அந்த வாலிபர் முடிவு செய்தார். அவர் லாரியை எடுத்துக் கொண்டு திடீர்நகர் போலீஸ் குடியிருப்புக்குள் லாரியை கொண்டு வந்து பைப்புகளை நைசாக திருடி சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் ‘வீலிங்’ செய்து செல்போனில் படம் எடுத்த 10 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
    • 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடியோ காமிரா பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெக நாதன் ஆலோசனையின் பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர்.

    சொக்கிகுளம், வல்லபாய் மெயின் ரோட்டில் வாலிபர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்தும், அதிவேகமாக வாகனங்களை இயக்கியும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடியோ காமிரா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மேற்கண்ட 10 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி ஆசிரியர் தெருவை சேர்ந்த பிச்சைபாண்டி மகன் மதன் (21), அவரது சகோதரர் கார்த்திக் (20), பழனிகுமார் மகன் தினேஷ்குமார் (24), இளங்கோவன் மகன் செல்லப்பாண்டி (22), உசிலம்பட்டி ஆனந்தா நகர் சுரேஷ் (26), அனுப்பானடி, கணேஷ் நகர் செல்வராஜ் மகன் ஹேமபிரபு(24), மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை சாகுல் ஹமீது மகன் முகம்மது இம்ரான் (19), நாகூர் கனி மகன் முகமது ஆசிக் (19), மாத்மா காந்தி நகர் கண்ணன் மகன் லோகேஸ்வரன் (19) கிருஷ்ணாபுரம் காலனி நயினார்ராஜ் மகன் ரமணா (19) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • நெல்லை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.
    • பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது.

    அலங்காநல்லூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3-வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

    அதன்படி நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில் 280 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த போட்டியில் 28 காளைகளை அடக்கிய மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் முதலிடத்தை பிடித்தார்.

    அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 17 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

    13 காளைகளை அடக்கி 3-ம் இடம் பெற்ற விளாங்குடி பாலாஜிக்கு பசு மாடு வழங்கப்பட்டது. இதே போல் போட்டியில் சிறப்பாக விளையாடிய காத்தனேந்தல் பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவரின் காளை முதலிடத்தை பிடித்தது. அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் 2-ம் இடம் பிடித்த காளையின் உரிமையாளரான வில்லாபுரம் கார்த்திக் என்பவருக்கு வாஷிங்மிஷினும், 3-ம் இடம் பிடித்த காளையின் உரிமையாளரான அவனியாபுரம் முருகனுக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 900 காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்துவிடப்பட உள்ளன.

    தொடர்ந்து நெல்லை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. காளைகள் அனைத்தும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

    மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளில் அனுப்பப்பட்டனர்.

    அதுதவிர வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தனர். தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர்.

    பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர். இந்த ஆண்டு ஆன்லைன் முறைப்படி வழங்கிய டோக்கன் முறையே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் சிறந்த காளைக்கு முதல் பரிசாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் மோட்டார் சைக்கிள் வழங்கப்படுகிறது. சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து அண்டா முதல் தங்க நாணயம் வரை பரிசாக பெற்று சென்றனர். காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு ஜல்லிக்கட்டு களத்தில் தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பேரூராட்சி சார்பில் பார்வையாளர்கள் அமர்வதற்காக பாதுகாப்பான முறையில் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    மேலும் இந்த ஆண்டு அதிகமாக கேலரி அமைக்கப்பட்டு அதிகளவில் பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டிருந்தது. காயமடைந்த வீரர்களை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி.பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சிவபிரசாத், பாஸ்கரன் முன்னிலையில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 29 துணை சூப்பிரண்டுகள், 8 கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 82 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1992 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்க்க பாலமேடு பேரூராட்சி மற்றும் விழா குழு சார்பில் ஆங்காங்கே அகன்ற திரை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் போட்டியில் சீருடை மாற்றி அணிந்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 14 மாடுபிடி வீரர்கள் சிக்கினர். அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 12 மணி வரை ஜல்லிக்கட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நான்கு சுற்றுகள் முடிவில் 15 காளைகளை பிடித்து மணி என்பவர் முதலிடத்திலும், 11 காளைகளை பிடித்து ராஜா என்பவர் 2-வது இடத்திலும், 9 காளைகளை பிடித்து வாஞ்சிநாதன் மற்றும் அரவிந்த்ராஜ் ஆகியோர் 3-வது இடத்திலும் இருந்தனர்.

    அரவிந்த்ராஜ் காயம் காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    • திருமங்கலம் அருகே உள்ள முனியாண்டி கோவில் விழாவில் திரளான பெண்கள் மலர் தட்டு சுமந்து ஊர்வலம் வந்தனர்.
    • இதனைத் தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் 56-வது ஆண்டு பூஜை விழா நடந்தது.

    முனியாண்டி சுவாமி பூஜை விழா ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளில் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டும் முனியாண்டி விலாஸ் உணவக உரிமையாளர்கள் கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்றுகூடினர்.

    ஆயிரக்கணக்கான பெண்கள் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்ய மலர் தட்டுக்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமர்ந்தனர். இதனைத் தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது.

    இன்று இரவு கிராமத்தைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு சைவ உணவு அன்னதானமாக வழங்குவதுடன் நாளை (17-ந்தேதி) 100 ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு சமைக்கப்பட்ட அசைவ உணவை அன்ன தானமாக அனைவருக்கும் வழங்குவார்கள்.

    • திருமங்கலம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.
    • இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் வேங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜா. மின்வாரிய ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். தற்போது டி. கல்லுப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றினார்.

    இரவு பணி என்பதால் டி.கல்லுப்பட்டி செல்வதற்காக திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் ஏறி கல்லுப்பட்டிக்கு சென்றுள்ளார். பஸ்சில் இடமில்லாததால் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.

    அந்த பஸ் திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் உள்ள டி.புதுப்பட்டியை அடுத்த தனியார் மருத்து வமனை அருகில் உள்ள வளைவில் திரும்பும் போது படிக்கட்டில் அமர்ந்திருந்த ராஜா எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தி பார்த்த போது ராஜா தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் நகராட்சியில் சமத்துவபொங்கல் விழா நடந்தது.
    • நகர் மன்றத்தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் பொங்கலிட்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகர்மன்ற அலுவலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முகப்பு வாசலில் அடுப்பு வைக்கப்பட்டு புதிய பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. நகர் மன்றத்தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் பொங்கலிட்டனர். துணைத்தலைவர் ஆதவன்அதியமான், ஆணையாளர் டெரன்ஸ்லியோன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

    கவுன்சிலர்களுக்கு பொங்கல்பானை, கரும்பு உள்ளிட்டவைகளை நகர்மன்றத்தலைவர் ரம்யாமுத்துக்குமார், திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர் வழங்கினர். சமத்துவ பொங்கல் திருவிழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் வீரக்குமார், பெல்ட்முருகன், சின்னசாமி, திருக்குமார், ரம்ஜான்பேகம், சங்கீதா, மங்களகவுரி, முத்துக்காமாட்சி, ராஜவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விறுவிறுப்பாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கிய வாலிபருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.
    • சிறந்த காளையின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர், மண்டல தலைவர்கள் சுவிதா விமல், முகேஷ் சர்மா, புவனேஸ்வரி சரவணன் ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, புதூர் பூமிநாதன் மற்றும் ராஜ் சத்யன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், எஸ்ஸார்கோபி, மேற்கு யூனியன் சேர்மன் வீரராகவன், ஈஸ்வரன், கவுன்சிலர் கருப்புசாமி டி.ஆர்.ஓ. பிர்தவுஸ் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்ய ப்பட்ட 280 மாடுபிடி வீரர்களும் 11 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 737 காளைகளும் அவிழ்க்கப்பட்டது.

    10சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 3 காளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர்.

    விதவிதமான பெயர்க ளில் அவிழ்க்க ப்பட்ட காளைகள் வீரர்க ளுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது.

    இதேபோன்று மிரட்டிய காளைகளையும் மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசுகளை பெற்று சென்றனர். போட்டியின் போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் உற்சாகபடுத்தினர்.

    போட்டியின் போது திறம்பட விளையாடி 28 காளைகளை அடக்கிய மதுரை சோலைஅழகுபுரம் பகுதியை சேர்ந்த விஜய்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.7லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.

    17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரரான மதுரை அவனியாபுரம் கார்த்திக்கு 2-வது பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் மோட்டார் சைக்கிளும், 13 காளைகளை அடக்கிய 3-வது மாடுபிடி வீரரான விளாங்குடி பாலாஜிக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

    இதேபோன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளை களான காத்தனேந்தல் பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவரது காளை முதலிடம் பிடித்தது. அதன் உரிமையாளருக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிளும், 2-வது சிறந்த காளையான வில்லாபுரம் கார்த்தி என்பவரது காளைக்கு வாஷிங்மெஷின் பரிசும், 3-வது பரிசாக மதுரை அவனியாபுரம் லோடுமேன் முருகன் என்பவரது காளைக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் போட்டியின் போது ஆயிரக்கணக்கான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்ப ட்டிருந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையா ளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள், சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7.45 மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 5மணி வரை நடைபெற்றது.

    போட்டியின் முடிவில் சிறந்த 3 மாடுபிடி வீரர்களுக்கும், காளை களின் உரிமையாளர் களுக்கும் பரிசுகோப்பை களும், பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன.

    போட்டியில் மாடு குத்தியதில் மாடுபிடி வீரர்கள், பார்வை யாளர்கள், 3சிறுவர்கள் காளை உரிமையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 61 பேர் காயம டைந்தனர். அவர்களில் சிறுவர், போலீசார் உள்ளிட்ட 11பேர் சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • பல்வேறு உயர்ந்த பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
    • சிறந்த மாடுபிடி வீரருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    மதுரை :

    உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் தொடங்கியது.

    மதுரை -பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்ததும் வாடிவாசல் வழியாக முதல் காளைகள் பாய்ந்து வந்தது.

    சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக காரும், சிறந்த காளைக்கு இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

    மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும் 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் 9 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 வீரர்கள் பங்கேற்பார்கள்.

    போட்டி தொடங்கும் முன் காளைகளுக்கான ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனையும், வீரர்களுக்கு மருத்துவ சோதனையும் நடந்தது.

    16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளாக நடத்தப்பட்டது
    • அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்தார். அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் விஜய். அவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது.

    அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப்பிடித்தார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கரவாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு மூன்றாம் பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.

    விஜய் மூன்றாம் முறையாக முதல் பரிசு பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2020, 2021ம் ஆண்டுகளிலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

    காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    • அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
    • பிற்பகல் நிலவரப்படி இந்த ஜல்லிக்கட்டில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

    மதுரை:

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9ம் சுற்று நிறைவில் மொத்தம் 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் இருக்கிறார். அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி அவிழ்த்த காளையை மாடுபிடி வீரர் விஜய் அடக்கிய நிலையில், தான் பெற்ற பரிசை மாணவியிடமே வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    பிற்பகல் நிலவரப்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 45 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    ×