என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரளான பெண்கள் மலர் தட்டு சுமந்து ஊர்வலம்
    X

    மலர் தட்டு சுமந்து வந்த பெண்கள்.

    திரளான பெண்கள் மலர் தட்டு சுமந்து ஊர்வலம்

    • திருமங்கலம் அருகே உள்ள முனியாண்டி கோவில் விழாவில் திரளான பெண்கள் மலர் தட்டு சுமந்து ஊர்வலம் வந்தனர்.
    • இதனைத் தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் 56-வது ஆண்டு பூஜை விழா நடந்தது.

    முனியாண்டி சுவாமி பூஜை விழா ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளில் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டும் முனியாண்டி விலாஸ் உணவக உரிமையாளர்கள் கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்றுகூடினர்.

    ஆயிரக்கணக்கான பெண்கள் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்ய மலர் தட்டுக்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமர்ந்தனர். இதனைத் தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது.

    இன்று இரவு கிராமத்தைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு சைவ உணவு அன்னதானமாக வழங்குவதுடன் நாளை (17-ந்தேதி) 100 ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு சமைக்கப்பட்ட அசைவ உணவை அன்ன தானமாக அனைவருக்கும் வழங்குவார்கள்.

    Next Story
    ×