search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் விஜய் தொடர்ந்து முதலிடம்
    X

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் விஜய் தொடர்ந்து முதலிடம்

    • அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
    • பிற்பகல் நிலவரப்படி இந்த ஜல்லிக்கட்டில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

    மதுரை:

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9ம் சுற்று நிறைவில் மொத்தம் 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் இருக்கிறார். அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி அவிழ்த்த காளையை மாடுபிடி வீரர் விஜய் அடக்கிய நிலையில், தான் பெற்ற பரிசை மாணவியிடமே வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    பிற்பகல் நிலவரப்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 45 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×