என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
    • போலீசார் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று கோச்சடை-மேலக்கால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அங்கு 2 மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர். மோட்டார் சைக்கிள்களில் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சதாசிவம் நகர் தேவி கருமாரியம்மன் கோவில் தெரு, பழனி மகன் ரிஷிகேஷ்(23), அண்ணா நகர் ராமகிருஷ்ணன் மகன் பிரசன்னா(23), தாசில்தார் நகர், வ.உ.சி தெரு குதூப்முகமது மகன் முகமது ஆனஸ்(22) ஆகியோரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

    • ராமேசுவரம் கோவில் சிவராத்திரி விழாவில் கரு. கருப்பையா பட்டிமன்றம் நாளை நடக்கிறது.
    • மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.

    மதுரை

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கோவை சூலூர் சித்த மருத்துவர் கரு.கரு. கருப்பையாவின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து இரவு 8மணிக்கு ''தமிழர் தந்தை'' சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா நடுவர் பொறுப்பில், மானாமதுரை பேராசிரியர் திருமாவளவன், தூத்துக்குடி வக்கீல் சாந்தா பங்கேற்கும் ''நகைச்சுவை பட்டிமன்றம்'' நடக்கிறது.ராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஆயிரவைசிய முத்தாலம்மன் கோவில் சிவராத்திரி விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியாக சிறப்பு பட்டிமன்ற நடுவர், மடப்புரம் விலக்கு கரு.கருப்பையாவின் ''ஜோதிட சொற்பொழிவு'' 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    • வாகன பதிவு எண் எழுதுவதில் விதிமீறல்; மதுரையில் 1,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
    • ஒரே நாளில் ரூ.35ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிக மான வாகனங்கள் இயக்கப்படுகிறது. அவற்றுக்கான வாகன பதிவெண் பலகையில் எழுத்துக்கள் இப்படித்தான் இடம்பெற வேண்டும் என்று மோட்டார் வாகனச்சட்டம் வரையறுத்துள்ளது.

    அதன்படி 70 சிசி-க்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களின் முன்புறம், 3.0 மிமீ உயரம்- 5 மி.மீ தடிமன்- 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் மற்றும் எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    அதேபோல வாகனங்க ளின் பின்புறம் 35 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகளும், 40 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் 65 மி.மீ உயரம், 10 மி.மீ தடிமன், 10 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் அமைய வேண்டும்.

    சொந்த வாகனமாக இருந்தால் வெள்ளை பலகையில் கறுப்பு நிறத்திலும், வணிக வாகனமாக இருந்தால் மஞ்சள் பலகையில் கறுப்பு நிறத்திலும் எழுத்துகள் இருக்க வேண்டும். அவை தெளிவாக இருப்பது கட்டாயம். ஆனால் மதுரை மாவட்டத்தில் வலம் வரும் பெரும்பாலான வாகனங்களின் பதிவு எண் பலகையில், எண் கணிதப்படி ராசியான எண்ணை பெரிதாகவும் மற்றவற்றை சிறியதாகவும் எழுதுகின்றனர்.

    தமிழ் ஆர்வலராக காட்டிக் கொள்ள, தூய தமிழில் பதிவெண் எழுதுகின்றனர்.

    அடுத்தபடியாக கட்சி சின்னம், கத்தி, வீச்சரிவாள், துப்பாக்கி, சினிமா நடிகர்கள் மற்றும் சுவாமி ஆகிய படங்கள் ஒட்டப்படுகிறது. அரசு அதிகாரிகள் பணியாற்றும் துறையை எழுதுகின்றனர். பதிவெண்ணில் முதல் 3 இலக்கம் 0 ஆக இருந்தால், அதைச்சேர்த்து எழுதாமல் 4-வதாக உள்ள எண்ணை மட்டும் பெரிதாக எழுது கின்றனர். 8055 என்ற எண்ணை BOSS என்று எழுதுகின்றனர்.

    மோட்டார் வாகனச் சட்டத்தில் வழங்கப்பட்ட வரன்முறைகளைத் தாண்டி பதிவெண் பலகையில் இடம்பெறும் கூடுதலான எழுத்து கூட விதிமீறல் தான். அதன்படி முதல் முறை என்றால் ரூ.500 அபராதம் விதிக்க முடியும்.

    அபராதம் என்பதற்கும் மேலாக விபத்து நேரும் பட்சத்தில் பதிவெண் தெளிவாக இருந்தால் மட்டுமே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, பாதிப்பை ஏற்படுத்திய நபர் பற்றிய விபரம் தெரியவரும். ஆனால் வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை கண்டு கொள்வது இல்லை. பதிவெண் போர்டை விளம்பரம்- அறிவிப்பு பலகையாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளும் விதிவிலக்கு அல்ல.

    எனவே வாகன பதிவுஎண் பலகையில் விதிகளை மீறி பதிவு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி மதுரை மாநகரில் போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், செல்வின் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் வாகன பதிவு எண் பலகை அதிரடி சோதனை கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    அதன்படி இதுவரை 1699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகர் தல்லாகுளம் சரகம் ஆகிய பகுதிகளில் நேற்று போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரே நாளில் 735 வாகனங்கள் சிக்கின. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையில் மட்டும் ஒரே நாளில், ரூ. 35 ஆயிரம் அபராதத்தொகை வசூலாகி உள்ளது.

    அடுத்தபடியாக தகுதிச்சான்று பெற வருவோர் வாகனங்களில் இதுபோன்ற விதிமீறல் இருந்தால் சான்று வழங்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் பிப்ரவரி 9-ந் தேதி அன்று அனுசரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.இதையடுத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் கலெக்ட்ர் அனீஷ்சேகர் தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபா, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், துணை ஆணையர் லிங்கம்,, உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மலர்விழி மற்றும் கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், "ONE STOP CRISIS TEAM" உறுப்பினர்கள் ஆகியோர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு, பொது மக்கள் அதிகம் கூடும். இடங்களான கலெக்டர் அலுவலக வளாகம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், கடைவீதிகள் மற்றும் ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முன்னதாக 30.1.2023 முதல் 4.2.2023 வரை வருவாய் கோட்டாட்சியர்களின் தலைமையில் தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள், கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களால் செங்கல் சூளைகள் மற்றும் அரிசி ஆலைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், பொது இடங்கள், ெரயில்வே மற்றும் பஸ் நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கும் வகையிலும் காட்டிவைக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள். தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்க ளிடையே கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு வாசகம் மற்றும் உதவி எண் குறித்து தற்போதைய செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் எவரேனும் பணிக்கு அமர்த்தப்பட்டது கண்டறியப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கையுடன், 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • மத்திய சிறை நூலகத்துக்கு நீதிபதி புத்தகங்கள் வழங்கினார்.
    • இதுகுறித்து பொது மக்களுக்கு உதவும் வகையில் 0452-2360031 தொலைபேசி எண்ணும் தரப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நூலகம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக பலர் புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு சுமார் 1 லட்சம் புத்தகங்களை நன்கொடையாக பெறுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறை டி.ஐ.ஜி. பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இலக்கியம், கவிதை, நாவல், புராணம் போன்ற பல்வேறு புத்தகங்களை நன்கொடையாக பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரத்யேக ஸ்டால் அமைக்கப்பட்டு புத்தகங்கள் அன்பளிப்பாக பெறப்பட்டன. சிவகங்கை புத்தக கண்காட்சியில் கலெக்டர் உதவியுடன் பொது மக்களின் பங்களிப்பாக 1000 புத்தகங்கள் வந்து சேர்ந்தது. ராமநாதபுரம் புத்தக கண்காட்சியில் சிறப்பு ஸ்டால்கள் மூலம் புத்தகங்கள் பெறப்பட்டு வருகிறது.

    மதுரை கூடல்நகரை சேர்ந்த 92 வயது முதியவர் பாலகிருஷ்ணன் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக வழங்கினார். ஈரோடு பகுதியைச் சேர்ந்த இலஞ்சி சமூக நல அமைப்பைச் சேர்ந்த ஜானகி சுமார் 1000 புத்தகங்களை மதுரை சிறை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மதுரை மத்திய ஜெயின் நூலகத்தில் இதுவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

    மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்க விரும்புவோர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருது நகர் மாவட்ட கிளைச்சிறைகளிலும் நேரடியாக கொண்டு வந்துதரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொது மக்களுக்கு உதவும் வகையில் 0452-2360031 தொலைபேசி எண்ணும் தரப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மத்திய சிறை நூலகத்துக்கு மதுரை மாவட்ட நீதிபதி ஏ.கே.கே. ரஜினி ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வழங்கியுள்ளார். இது குறித்து நீதிபதி ரஜினி கூறுகையில், மதுரை மத்திய சிறை நூலகத்துக்கு முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சிறைவாசிகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு மேலும் புத்தகங்கள் பெற்று வழங்கப்படும் என்றார்.

    • ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாககூறி ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரிடம் ரூ. 34 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது.
    • உதவுவது போல் நடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பழைய பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் கேசவன்(வயது62). ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரான இவர் தாதம்பட்டி மந்தையில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுத்துதருமாறு கூறினார். அதற்கு அந்த வாலிபர், கேசவனிடம் அவரது ஏ.டி.எம்.கார்டை வாங்கி கொண்டு ஏ.டி.எம்.மையத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர், பணம் வரவில்லை என்று கூறி, வேறொரு ஏ.டி.எம். கார்டை கேசவனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    அதனை கவனிக்காமல் கேசவன் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் பாஸ் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது பாஸ் புத்தகத்தை பதிவு செய்தபோது, வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.34 ஆயிரத்து 481 எடுக்கப்பட்டது தெரியவந்தது.

    பணம் எடுத்து தருவதாக ஏ.டி.எம்.கார்டை வாங்கி சென்ற வாலிபர், தன்னுடைய கணக்கில் இருந்து பணத்தை எடுத்திருப்பதை அறிந்த கேசவன் அதிர்ச்சி அடைந்தார். அதுபற்றி அவர்

    வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) மாயாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கேசவனின் வங்கி கணக்கில் இருந்து நைசாக பணத்தை எடுத்து கொண்டு தப்பிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே 14 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.
    • தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.கோபாலபுரத்தை சேர்ந்தவர் மார்கழி வாசகன் (வயது41). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் தனது 43-க்கும் மேற்பட்ட ஆடுகளை சம்பவத்தன்று தனது வீட்டு அருகே உள்ள கொட்டத்தில் அடைத்துள்ளார். அங்கு ஆடுகளுக்கு கழனி தண்ணீர் வைத்துள்ளனர். கழனி தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் 14 ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி இறந்துவிட்டது

    இதனால் அதிர்ச்சியடைந்த மார்கழிவாசகன் இச்சம்பவம் குறித்து வில்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆடுகள் எப்படி இறந்தது? தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

    • திருமங்கலம் கோர்ட்டில் நாளை சிறப்பு லோக் அதாலத் நடக்கிறது.
    • மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் நாளை (11-ந்தேதி) சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் நலன்கருதி நடைபெறும் இந்த சிறப்பு லோக் அதலாத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்த மனுக்களையும், திருமங்கலம் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல்நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், பிற கோரிக்கைள் தொடர் பாகவும் உடனடியா தீர்வு காண மனுசெய்து உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம்.

    • இரட்டை ரெயில்பாதை பணிக்காக மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வரையில் இரண்டாவது அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

    திருமங்கலம்

    மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வரையில் இரண்டாவது அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த பணிகள் திருமங்கலம் வரையில் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து தற்போது திருமங்கலம்-மதுரை இடையே பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இதன் ஒருபகுதியாக திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ பகுதியில் 2-வது தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஏராளமான மின்கம்பங்களை மாற்றி அமைக்கும்படி ெரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்தது.

    இதனை தொடர்ந்து சிட்கோ பகுதியில் 2-வது அகல ெரயில் பாதையையொட்டியுள்ள மின்கம்பங்கள் மின்சார வயர்களை எதிர்ப்புறம் இடம்மாற்றம் செய்யும் பணிகளில் மின்வாரியம் ஈடு பட்டுள்ளது.

    இந்த பகுதியில் 2-து அகல ெரயில் பாதையையொட்டி இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அனைத்தும் மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக்ள கூறுகையில் 2-வது அகல ெரயில்பாதையும் மின்சார ெரயில் செல்வதற்கு தகுந்தாற் போல் மின்கம்பிவயருடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே சிட்கோ தொழிற்சாலைகளுக்கான மின்சார டிரான்ஸ்பார்மரும், மின்சார கம்பங்களும் இருந்தன.

    உயர் மின்அழுத்தம் உள்ள ெரயில்வே மின்பாதையின் அருகே மின்சார வயர்கள் மின்கம்ப ங்கள் இருக்கக்கூடாது என்பதால் சாலையின் எதிர்ப்புறம் அவற்றை மாற்றும் 

    • சமுதாய கூடம் கட்டித்தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஊரின் மையபகுதியில் போதிய இட வசதி உள்ளதால் சமுதாயக்கூடம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட. நரிமேடு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    முல்லையாறு பிரிவு பாசன கால்வாய் கரை யோரம் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு செல்ல போதிய அகலமான சாலை இல்லாத நிலையில் இது வரை பஸ் வசதிகள் இன்றி மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். வெளியூர் பயணத் தேவை களுக்கு மோட்டார்சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாக னங்களை கிராம மக்கள் பயன்படுத்தி வரும்நிலை உள்ளது.

    கிராமத்தினர் காதணி விழா மற்றும் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளை நடந்த அங்கு மண்டபங்கள் இல்லை. இதனால் கிராம மக்கள் வாடிப்பட்டி அல்லது சோழ வந்தான் நகர் பகுதிக்கு சென்று மண்டபங்களை வாடகைக்கு பிடித்து விசேஷங்களை நடத்தும் நிலை உள்ளது. இதனால் கால விரயமும் செலவும் ஏற்படுகின்றது. இதுகுறித்து நரிமேடு கிராம மக்கள் கூறுகையில், இங்கிருந்து வெளியூர் செல்ல மினிபஸ் வசதி கூட இல்லாததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரமுள்ள நாச்சிகுளம் அல்லது வாடிப்பட்டிக்கு நடத்து சென்றுதான் பஸ் ஏறி வெளியூர்களுக்கு சென்று வருகின்றோம்.

    இந்த நிலையில் வீடுகளில் நடக்கும் விஷேச நிகழ்ச்சிகளுக்காக உறவினர்கள் அழைத்து வெளியூர்களூக்கு சென்று தனியார் மண்டபத்தில் அதிக வாடகை பணம் கொடுத்து விசேஷங்களை நடத்தி வருகின்றோம்.

    ஊரின் மையபகு தியில் போதிய இட வசதி உள்ளதால் சமுதாயக்கூடம் கட்டிதர மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • கோவில் திருவிழாக்கள், கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக்கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம்.
    • உரிய உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து 3 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் மாதவாலயம் பகுதியை சேர்ந்த சையத் அலி பாத்திமா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் மாதவாலயம் கிராமத்தில் வசித்து வருகிறேன்.

    எனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி கடையால் எங்கள் குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    கிராம பஞ்சாயத்து தரப்பில், மாட்டிறைச்சி கடை வைத்திருப்பவர், ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் பெற்றுள்ளார். ஆனால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நீதிபதி, உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி ஆடு, பன்றி ஆகியவற்றை வெட்ட அனுமதிக்கக்கூடாது. கோவில் திருவிழாக்கள், கிராம பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக்கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம்.

    மேலும் இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பின் உரிய உரிமம் பெறாமல், மாட்டிறைச்சி கடை நடத்தி வருவதாக உள்ளாட்சி தரப்பு வக்கீல் கூறியுள்ளார். எனவே உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • மதுரை மத்திய சிறையில் உள்ள போலீஸ்காரர் வெயிலுமுத்துவுக்கு கடந்த 3 நாட்களாக மூச்சு திணறல் பாதிப்பு இருந்து வருகிறது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேரும் போலீசார் தாக்கியதில் இறந்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த அப்போதைய சாத்தான் குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் முதல்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அடுத்தபடியாக 400 பக்க குற்றப்பத்திரிகை கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 104 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள போலீஸ்காரர் வெயிலுமுத்துவுக்கு கடந்த 3 நாட்களாக மூச்சு திணறல் பாதிப்பு இருந்து வருகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

    சிறையில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×