என் மலர்
கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார கிராமங்களில், கொரோனா அதிகளவில் பரவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று போச்சம்பள்ளி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர், கொரோனா அறிகுறியுடன் போச்சம் பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்காமல் கிருஷ்ணகிரி அல்லது தருமபுரி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு வெளியே அனுப்பினர். இதை கண்டித்து அந்த நபர் போச்சம்பள்ளி நான்கு சாலை சந்திப்பில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது :
இங்கு மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். கூடுதலாக மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். இங்கு, 45 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் குறைந்த நபர்கள் கிருஷ்ணகிரி, பர்கூரில் உள்ள சிறப்பு முகாம்களில் தான் சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 300 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளின் நிலைமை பரிதாபமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் இலங்கை அகதிகள் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 145 குடும்பங்கள் உள்ளன. இதில், 528 பேர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசித்து வருபவர்களில் கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மட்டும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 32 பேர் அகதிகள் முகாமிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, இந்த அகதிகள் முகாமினை தடை செய்யப்பட்ட பகுதியாக வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த முகாமை சேர்ந்தவர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது,, புதிய நபர்கள் உள்ளே வரவும் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முகாமிற்கு செல்லக்கூடிய பகுதிகள் அடைக்கப்பட்டு, போலீசாரும் நுழைவு பகுதியில் கண்காணிப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் அக்கா, தங்கைகள் 3 பேர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தங்கைகள் இருவரும் பெங்களூரு தனியார் மருத்துவமனையிலும், அக்கா ஓசூர் தனியார் மருத்துவமனையிலும் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களில், அடுத்தடுத்து 3 பேரும் உயிரிழந்தனர். மூத்த அக்காவின் மகளான, (38 வயது) தனியார் வங்கி மேலாளர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு நேற்று பலியானார். ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






