என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் அக்கா, தங்கைகள் 3 பேர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தங்கைகள் இருவரும் பெங்களூரு தனியார் மருத்துவமனையிலும், அக்கா ஓசூர் தனியார் மருத்துவமனையிலும் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களில், அடுத்தடுத்து 3 பேரும் உயிரிழந்தனர். மூத்த அக்காவின் மகளான, (38 வயது) தனியார் வங்கி மேலாளர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு நேற்று பலியானார். ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






