என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் அக்கா, தங்கைகள் 3 பேர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தங்கைகள் இருவரும் பெங்களூரு தனியார் மருத்துவமனையிலும், அக்கா ஓசூர் தனியார் மருத்துவமனையிலும் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த இரு வாரங்களில், அடுத்தடுத்து 3 பேரும் உயிரிழந்தனர். மூத்த அக்காவின் மகளான, (38 வயது) தனியார் வங்கி மேலாளர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு நேற்று பலியானார். ஒரே குடும்பத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


    Next Story
    ×