என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கெலமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி மரணம்

    கெலமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலத்தை அடுத்த முகளூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிஎல்லப்பா (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை பசு மாடுகளை ஜெ.காருப்பள்ளி அருகே உள்ள ஏரியில் மேய்க்க விட்டுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மின் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி லட்சுமம்மா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்தீபன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கூலித் தொழிலாளி முனி எல்லப்பா உடலை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×