என் மலர்
செய்திகள்

கைது
மத்தூர் அருகே பேக்கரி மாஸ்டரை தாக்கிய 2 பேர் கைது
மத்தூர் அருகே பேக்கரி மாஸ்டரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே மேட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 38). இனிப்பு கடையில் மாஸ்டராக உள்ளார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21), மணிகண்டன் (21) ஆகிய 2 பேரும் சிவலிங்கத்துடன் தகராறு செய்து அவரை தாக்கினார்கள். இது குறித்து சிவலிங்கம் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விக்னேஷ், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story






