என் மலர்
கிருஷ்ணகிரி
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மில்லத் நகரை சேர்ந்த மாதேஷ். இவரது மகள் ஜீவிதா (வயது16). இவர் சூளகிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக ஜீவிதா காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவர், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் தனக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவிட்டது என்று நினைத்து ஜீவிதா மனவேதனை அடைந்து வந்தார். மேலும் தொடர்ந்து கொரோனா பயத்தில் ஜீவிதா மன உளைச்சலுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது தாய், சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள், மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதேபோல் கர்நாடகாவில் இருந்தும் மதுபாட்டில்கள் கிருஷ்ணகிரி வழியாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாநில எல்லைகளில் மதுவிலக்கு மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் அஞ்செட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வேப்பலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரபு (வயது 28), பெருமாள் (29), ராஜ்குமார் (29), சக்திவேல் (21) என்பதும், விற்பனைக்காக கர்நாடகாவில் இருந்து மதுபாக்கெட்டுகளை தர்மபுரிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 384 மதுபாக்கெட்டுகள், பாட்டில்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று மாலை மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து 1,444 மதுபான பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்கள், மோட்டார் சைக்கிளில் வந்த திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த பள்ளலப்பள்ளியை சேர்ந்த சதாசிவம் (36), பெரிய கண்ணாளப்பட்டியை சேர்ந்த ரவி (40), கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலேகுளியை சேர்ந்த அரவிந்த் (28), பெங்களூரு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 1,444 மதுபாக்கெட்டுகள், 2 கார்கள், மோட்டார் சைக்கிளும் பறிமுதல்செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலகில் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த சண்முகம் கடந்த 25.3.2020 அன்று மரணம் அடைந்தார். அவரது மகன் விமல்ராஜ் என்பவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் வளர்ச்சி பிரிவில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து மரணம் அடைந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் சீனிவாசன் என்பவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் கிருஷ்ணகிரி உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.
வேப்பனப்பள்ளி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து பணி காலத்தில் இறந்த சுப்பிரமணியின் மனைவி வள்ளிக்கு கருணை அடிப்படையில் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல கலெக்டர் அலுவலக சத்துணவு பிரிவில் டிரைவராக பணியாற்றிய ராஜேந்திரன் பணி காலத்தில் இறந்தார். இதையொட்டி அவரது மகன் ரோகேஷ் கணபதிக்கு வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் 4 பேருக்கும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார். அப்போது பணி காலத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்குஅறிவுரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் இள வயதினர், வயதானவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்பும் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா 2-வது அலையே கட்டுக்குள் வராத நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பனஹள்ளி அருகே உள்ள ஜேடுகொத்தூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 3ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.






