என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    உத்தனப்பள்ளி அருகே மரத்தில் கார் மோதியது. இதில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் கணவர்- மகன் படுகாயம் அடைந்தனர்.
    ராயக்கோட்டை:

    திருப்பூரை சேர்ந்தவர் டைலர் யுவராஜ் (வயது 34). இவர், தன்னுடைய மனைவி சிந்து (28), 3 வயது மகன் அஸ்வின் பிரசாந்த் ஆகியோருடன் நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து ஓசூருக்கு காரில் வந்தனர்.

    அதிகாலை 5 மணி அளவில் உத்தனப்பள்ளியை அடுத்த துப்புகானப்பள்ளி அருகே வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

    காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி டைலர் யுவராஜ், அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிந்து பரிதாபமாக இறந்தார்.

    டைலர் யுவராஜ், அவருடைய மகன் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கொரோனா பயம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மில்லத் நகரை சேர்ந்த மாதேஷ். இவரது மகள் ஜீவிதா (வயது16). இவர் சூளகிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக ஜீவிதா காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவர், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் தனக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவிட்டது என்று நினைத்து ஜீவிதா மனவேதனை அடைந்து வந்தார். மேலும் தொடர்ந்து கொரோனா பயத்தில் ஜீவிதா மன உளைச்சலுடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது தாய், சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை, ஓசூரில் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தேன்கனிக்கோட்டை:

    தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள், மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதேபோல் கர்நாடகாவில் இருந்தும் மதுபாட்டில்கள் கிருஷ்ணகிரி வழியாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாநில எல்லைகளில் மதுவிலக்கு மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் அஞ்செட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வேப்பலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரபு (வயது 28), பெருமாள் (29), ராஜ்குமார் (29), சக்திவேல் (21) என்பதும், விற்பனைக்காக கர்நாடகாவில் இருந்து மதுபாக்கெட்டுகளை தர்மபுரிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 384 மதுபாக்கெட்டுகள், பாட்டில்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று மாலை மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து 1,444 மதுபான பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்கள், மோட்டார் சைக்கிளில் வந்த திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த பள்ளலப்பள்ளியை சேர்ந்த சதாசிவம் (36), பெரிய கண்ணாளப்பட்டியை சேர்ந்த ரவி (40), கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலேகுளியை சேர்ந்த அரவிந்த் (28), பெங்களூரு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 1,444 மதுபாக்கெட்டுகள், 2 கார்கள், மோட்டார் சைக்கிளும் பறிமுதல்செய்யப்பட்டன.
    பணி காலத்தில் இறந்த சுப்பிரமணியின் மனைவி வள்ளிக்கு கருணை அடிப்படையில் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலகில் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த சண்முகம் கடந்த 25.3.2020 அன்று மரணம் அடைந்தார். அவரது மகன் விமல்ராஜ் என்பவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் வளர்ச்சி பிரிவில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து மரணம் அடைந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் சீனிவாசன் என்பவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் கிருஷ்ணகிரி உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.

    வேப்பனப்பள்ளி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து பணி காலத்தில் இறந்த சுப்பிரமணியின் மனைவி வள்ளிக்கு கருணை அடிப்படையில் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல கலெக்டர் அலுவலக சத்துணவு பிரிவில் டிரைவராக பணியாற்றிய ராஜேந்திரன் பணி காலத்தில் இறந்தார். இதையொட்டி அவரது மகன் ரோகேஷ் கணபதிக்கு வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

    இவர்கள் 4 பேருக்கும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார். அப்போது பணி காலத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்குஅறிவுரை வழங்கினார்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 453 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் 45 வயது பெண், 38 வயது பெண், 50 வயது பெண், 55 வயது ஆண் ஆகியோரும், போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் 47 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே நேற்று மாவட்டத்தில் கொரோனாவால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 453 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 35 ஆயிரத்து 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31 ஆயிரத்து 605 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 307 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை போலீசார் என்.கொத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் பணம் வைத்து சூதாடிய கொத்தூர் லோகேஷ் (வயது 36), வரதராஜ் (24), பென்னாகரம் மணிவண்ணன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் இள வயதினர், வயதானவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்பும் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா 2-வது அலையே கட்டுக்குள் வராத நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பனஹள்ளி அருகே உள்ள ஜேடுகொத்தூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

    இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 3ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவியின் கழுத்தை தாலி கயிற்றால் இறுக்கி கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிப்பட்டியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது31). லாரி டிரைவர். இவரது மனைவி ரஞ்சிதா (28). இவர்கள் 2 பேரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு பவ்யா (7) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி மகன் இறந்து விட்டான்.

    இதனிடையே ரஞ்சிதாவுக்கும், தர்மபுரி மாவட்டம் அரூரில் கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த அமல்ராஜ், மனைவி ரஞ்சிதாவை கண்டித்தார். ஆனாலும் ரஞ்சிதா தங்கராஜுடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரஞ்சிதா வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமல்ராஜ் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் ரஞ்சிதா கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் ரஞ்சிதா, கள்ளக்காதலன் தங்கராஜ் வீட்டில் இருப்பதாக அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அமல்ராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரஞ்சிதாவை தனது வீட்டிற்கு அழைத்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டின் பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கள்ளக்காதல் மற்றும் அவர்களுக்கு இருந்த கடன் பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த அமல்ராஜ் தனது கையால் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்தார். மேலும், தாலி கயிற்றாலும் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் நிலைகுலைந்த ரஞ்சிதா மயங்கி விழுந்தார். இதையடுத்து தங்கராஜ் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இரவில் வீட்டுக்கு வந்த அவர், மதுபோதையில் படுத்து தூங்கி விட்டார்.

    நேற்று காலை அக்கம்பக்கத்தினர் அமல்ராஜை எழுப்பி, ரஞ்சிதா வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து அமல்ராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் ரஞ்சிதாவை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டையில், அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனை தாக்கியதாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த காரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது 65), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் கோவிந்தராஜ் (45). இவர் இருதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை வெங்கட்ராஜூம், அவரது மகன் கோவிந்தராஜூம் அருகில் உள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்தில் கடைக்கு மாத்திரைகள் வாங்க சென்றுள்ளனர். அப்போது வெங்கட்ராஜ் வீட்டின் அருகே வசிக்கும் சிவண்ணா, மஞ்சுநாத் ஆகிய இருவரும் நிலத்தகராறு சம்பந்தமாக வெங்கட்ராஜ் மற்றும் கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சிவண்ணாவும், மஞ்சுநாத்தும் சேர்ந்து ஆசிரியர் கோவிந்தராஜை தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் அரசு மருத்துமனையில் இருந்தபோது சிவண்ணாவும், மஞ்சுநாத்தும் மருத்துவமனையின் உள்ளே சென்று இரும்பு ராடு கொண்டு கோவிந்தராஜையும் அவரது தந்தை வெங்கட்ராஜையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் கோவிந்தராஜூக்கு தலை, மார்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதேபோல வெங்கட்ராஜ்க்கும் காயங்கள் ஏற்பட்டது.

    இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனை தாக்கிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் உத்தனப்பள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளியை சேர்ந்த பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் என்கிற பதி தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க. பற்றியும், முன்னாள் தலைவர் கருணாநிதி பற்றியும் அவரது பிறந்தநாளில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துப்பதிவு செய்ததாக சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உள்பட சிலர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பத்மநாபன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் உத்தனப்பள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஒன்றிய தலைவர் வினோத், மாவட்ட பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் முருகன், அம்மன் சுரேஷ், சீனிவாசன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருணாநிதி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பா.ஜனதா பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). இவர் சூளகிரி தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் உத்தனப்பள்ளி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் ஜல்லிக்கட்டு பத்மநாபன் என்கிற பத்மநாபன் (42) என்பவர் இருந்து வருகிறார். அவர் பா.ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

    இந்தநிலையில் மறைந்த முதல்- அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நேரத்தில், அவரது புகைப்படங்களை தவறாக சித்தரித்து, பத்மநாபன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்து கேட்டபோது அவர் என்னை மிரட்டினார். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

    அதன் பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரித்து பா.ஜனதா பிரமுகர் ஜல்லிக்கட்டு பத்மநாபன் என்கிற பத்மநாபனை கைது செய்தார். அவர் மிது ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் பத்மநாதன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், உத்தனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, நேற்று சமூக இடைவெளியை கடைபிடித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பத்மநாதன், கைது செய்யப்பட்டதற்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதையடுத்து ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    தளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி அருகே கல்கேரி கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 45). தொழிலாளி. இவரது மகன் எஸ்வந்த் (18). குடிப்பழக்கத்திற்கு அடிமையான கிரீஷ் வேலைக்கு செல்லாமல் மகனிடம் பணம் வாங்கி அதையும் குடித்து செலவழித்து வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று கிரீஷ் குடிப்பதற்கு பணம் வேண்டும் என கேட்டு எஸ்வந்திடம் தகராறு செய்துள்ளார். ஆனால் எஸ்வந்த் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் பணம் கிடைக்காத விரக்தியில் இருந்த கிரீஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×