search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தளி அருகே தொழிலாளி தற்கொலை

    தளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி அருகே கல்கேரி கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 45). தொழிலாளி. இவரது மகன் எஸ்வந்த் (18). குடிப்பழக்கத்திற்கு அடிமையான கிரீஷ் வேலைக்கு செல்லாமல் மகனிடம் பணம் வாங்கி அதையும் குடித்து செலவழித்து வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று கிரீஷ் குடிப்பதற்கு பணம் வேண்டும் என கேட்டு எஸ்வந்திடம் தகராறு செய்துள்ளார். ஆனால் எஸ்வந்த் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் பணம் கிடைக்காத விரக்தியில் இருந்த கிரீஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×