என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ கோரிக்கை
    • ஒரு மூட்டை சிமெண்டின் விலை 300 முதல் 320 ரூபாய் என்ற விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

    மார்த்தாண்டம்,அக்.14-

    தமிழக காங்கிரஸ் கட்சி யின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிமெண்ட் விலை மூடை ஒன்றுக்கு 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், கட்டுமானத் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. நாட்டின் பொருளா தார வளர்ச்சியில் விவ சாயத்திற்கு அடுத்த படியாக தொழிலாளர்களின் வாழ்வில் பெரும் பங்கு வகிப்பது கட்டுமானத் துறை யாகும். கட்டுமான தொழிலில் சிமெண்டின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த 7 நாட்களுக்கு முன்பு சிமெண்ட் மூடை ரூ.300 முதல் ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் செயற்கையான முறையில் சிமெண்ட் தட்டுப்பாட்டை உருவாக்கி அதிரடியாக தாறுமாறாக விலையை உயர்த்தி உள்ளனர். இதன் மூலம் சிமெண்ட் மூடை ஒன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது மூடை ரூ.450 வரை விற்பனை செய்யப்படு கிறது.

    இதற்கு முன்பு எல்லாம் சிமெண்ட் ஒரு மூடைக்கு 10 ரூபாய் தான் அதிகரிக்கும். ஆனால் தற்போது சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் எதுவும் விலை உயராத நிலையில் சிமெண்ட் விலை உயர்த்தப் பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இந்த விலை உயர்வால் குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் காங்கிரீட் வீடுகள் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் இலவச வீடு திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளும், வங்கிக்கடன் உதவி பெற்று வீடு உள்ளிட்ட கட்டிடப்பணி கள் செய்து வருவோரும், ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலை எடுத்து செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் குமரி மாவட்டத் தில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவில் ஒரு மூட்டை சிமெண்டின் விலை 300 முதல் 320 ரூபாய் என்ற விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆகவே சிமெண்டை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் 150 ரூபாய் வரை உயர்த்தபட்டுள்ள சிமெண்ட் விலை உயர்வை குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு ஒரு குழுவை ஏற்படுத்தி அக்குழுவினர் கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரமாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க அறிவுரை
    • பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட வேளாண்மை, பொதுப் பணித்துறை, மீன்வ ளத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு செய் தார்.

    அதன் ஒரு கட்டமாக திருப்பதிசாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணையில் முதல் பருவத்தில் பயிரி டப்பட்ட அம்பை-16, டி.பி.எஸ்.5, கருங்குறுவை அறு வடை பணிகளையும் பார்வையிட்டார். தக்கை பூண்டு பயிரிடப்பட்ட பகுதிகளையும், 2-ம் பருவத்திற்கு தயார் நிலை யில் உள்ள நாற்றாங்காலை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் விதை சுத்தி கரிப்பு நிலையம், மாநில அரசு விதைப்பண்ணையில் சேகரித்து வைக்கப் பட்டுள்ள நெல் விதைகளை பார்வையிட்டதோடு, அவற்றை பாதுகாப்பாக வைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தரமான விதைகள், நாற்று கள் மற்றும் இடுபொருட்க ளை உற்பத்தி செய்து விவ சாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

    மாவட்டத்தின் வேளாண் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் வேளாண்மை தொழில் நுட்பங்களில் உறைவிடம் மற்றும் அறிவு மையமாக செயல்பட வேண்டும் என்றும், விவசாய முகாம்க ளி லும், வட்டார அளவிலும் விவசாயிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து கன்னியாகுமரி சென்ற கலெக்டர் ஸ்ரீதர், அங்கு சுற்றுலாத்துறையின் சார்பில் கதிரியக்க தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் ரூ.11.98 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு அய்யன் திருவள்ளுவர் சிலையில் செயல்படுத்தப்பட உள்ள பணிகள் குறித்து கேட்ட றிந்ததோடு, பணிகளை விரைந்து மேற்கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    கன்னியாகுமரி படகு துறையில் கூடுதல் படகு நிறுத்தும் தளம் அமைக்கும் பணிகளையும் கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், 80 மீட்டர் நீளத்திற்கு கூடுதலாக படகு அணையும் தளம் அமைப்பதற்கு தேவையான கான்கிரீட் பிளாக்குகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பணித்த ளத்தில் இவற்றை அமைக்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் தரமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் படகு தளம் அமைக்கும் பணி தற்போது 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்றும் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    • களியலில் 76.6 மில்லி மீட்டர் மழை பதிவு
    • பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளிலும் பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    களியல், ஆணைக் கிடங்கு, குழித்துறை, பூதப்பாண்டி, அடையா மடை மற்றும் அதன் புற நகர் பகுதிகளிலும் மழை பெய்தது. களியலில் அதிகபட்சமாக 76.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது.

    விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்ப தற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு அணைக்கும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டி ருப்பதையடுத்து அணையில் இருந்து மீண்டும் பாச னத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.16 அடியாக இருந்தது.

    அணைக்கு 1150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.80 அடியாக உள்ளது. அணைக்கு 584 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றாறு- 1 அணை யின் நீர்மட்டம் 15.38 அடியாக உள்ளது. அணைக்கு 269 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.48 அடியாக வும், பொய்கை நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத் துறையாறு நீர்மட்டம் 37.73 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணை நீர்மட்டம் 16.60 அடியாக உள்ளது. மாவட்டம் முழு வதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 59.2, பெருஞ்சாணி 21.2, சிற்றார்-1 24.2, சிற்றார்-2 22.4, பூதப்பாண்டி 1.2, களியல் 76.6, குழித்துறை 17.8, புத்தன் அணை-21.2, சுருளோடு 13.6, தக்கலை 8.2, பாலமோர் 41.6, மாம்பழத்துறையாறு 2.8, திற்பரப்பு 63.7, அடையா மடை 4.2, ஆணைக்கிடங்கு 3.

    • மகாளய அமாவாசையயொட்டி இன்று அதிகாலை 4-30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.
    • கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாளய அமாவாசை இன்று கடை பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள். அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள்.

    அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பைபுல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டு விட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். மகாளய அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் மாலை வரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தார்கள்.

    மகாளய அமாவாசையயொட்டி இன்று அதிகாலை 4-30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற பூஜைகள் நடந்தது.

    மகாளய அமாவாசையையொட்டி காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. வடக்கு பிரதான நுழைவு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    மகாளய அமாவாசையையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும் இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதன் பிறகு அத்தாழபூஜை யும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • சாவுக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.
    • வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி சுகிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றி குலசேகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டிய தாக பரமசிவம் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட் டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள் மருத்துவ மாணவி சுகிர்தா சாவுக்கு நீதி கேட்டு இன்று போராட்டம் நடத்துவதாக கூறினார்கள். இதையடுத்து நாகர்கோ வில் கலெக்டர் அலுவல கத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஏராள மான மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.பின்னர் கலெக்டர் அலுவல கம் எதிரே ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் முகமது முபிஸ் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் சந்துரு,எட்வின்பிரைட், ரெதீஸ், ரகுபதி,மேரி ஸ்டெல்லா பாய் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை மாதர் சங்க மாநில நிர்வாகி உஷா பாசி தொடங்கி வைத்தார்.மருத்துவ மாணவி சுஜிர்தா சாவில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டு வந்து, சம்பந்தப் பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவில் வளாகத்தை கழுவி சுத்தம் செய்தனர்

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா 24-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடு கள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், சமய உரை போன்ற பல் வேறு நிகழ்ச்சிகள் நடக்கின் றன.

    10-ம் திருவிழாவான 24-ந்தேதி அம்மன் பாணா சுரனை வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 1-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாகர்கோ வில் அருகே உள்ள இருளப்பபுரம் பிரசன்ன பார்வதி பசுபதீஸ்வரர் கோவில் பெண் சிவனடியார்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் உழவாரப்பணி யில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்அம்மன் கொலு விருக்கும் கொலுமண்டபம், 24 மணி நேரமும் அணையா விளக்கு எரிந்துகொண்டி ருக்கும் வாடா விளக்கு மண்டபம், கொடிமர பிரகாரம், மூலஸ்தான கருவறை முன்பு உள்ள மண்டபம், உள்பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் அனைத்து சன்னதி பகுதி களிலும் இந்த உழவாரப்பணி நடந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் சிவனடி யார்கள் கோவில் முழுவதும் தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்தனர். இந்த உழவாரப்பணி நடந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார்
    • நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி. பிரதீபா பணிகளை தொடங்கி வைத்தார்.

    இரணியல்:

    நெய்யூர் பேரூராட்சி 12-வது வார்டு கொடுமுட்டி சந்திப்பு முதல் சானல்கரை வரை சாலை சிமெண்ட் தளம் அமைக்க ரூ.9 லட்சமும், 6-வது வார்டு இலந்தவிளை குருசடி முதல் இலந்தவிளை அங்கன்வாடி வரை செல்லும் சாலை கருந்தளம் அமைக்க ரூ.7 லட்சமும் என ரூ.16 லட்சத்திற்கான சாலை வளர்ச்சி பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் தொடக்க விழா அந்தந்த பகுதிகளில் நடந்தது.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா முன்னிலையில், நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி. பிரதீபா பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், நிர்வாகிகள் ஜெரோம்பெனடிக்ட் மற்றும் ஊர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிக்கை
    • உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள மூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த சுகிர்தா என்ற மாணவி தற்கொலை செய்வதற்கு தூண்டிய டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதற்கு காரணமான டாக்டர்களை போலீசார் கைது செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தி வரு கிறது. கல்லூரி நிர்வாகம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதிய விடுப்பு கொடுத்தும், போதிய கவுன்சிலிங் கொடுத்தும் வரும் காலங்களில் இத்த கைய சம்பவங்கள் நடை பெறுவதை தவிர்க்க வழிவகுக்க வேண்டும். மேலும் போலீசார் குற்றம் செய்தவர்கள் தப்பிக்காத அளவுக்கு பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியான லூர்துமாதா தெருவில் உள்ள சானல் ரோட்டில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆனி ரோஸ்தாமஸ், ஆட்லின் சேகர், அரசு ஒப்பந்ததாரர் சுதாபாஸ்கர், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், புனிதன், புஷ்பராஜ், சகாயம், நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

    நாகர்கோவில்:

    வல்லன்குமாரன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    பின்னர் மேலகிருஷ்ணன் புதூர் அரசு நடுநிலைப்பள்ளி யிலும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டோம். சுகாதாரமான ஆய்வு உணவு வழங்கப்படுகிறதா என்ப தை பார்வை யிட்டோம். குமரி மாவட்டத்தில் 325 அரசு பள்ளிகளில் 28,330 மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகிறார்கள். காலை உணவு திட்டம் வழங்கப்படும் பள்ளிகளில் பணம் வாங்குவதாக இது வரை எந்த புகாரும் இல்லை.

    அப்படி வாங்குவதாக புகார் வந்தால் சம்பந்தப் பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் கடத்தப்படுவதில் எந்த ஒரு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமவளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று கலெக்டர் தடை விதித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு மீண்டும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த வழக்கை நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் சந்திப்போம்.சபாநாயகர் சட்டப்பேர வையில் மரபுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியின் போது சந்தர்ப் பத்திற்கு ஏற்றார் போல பலமுறை மரபு மீறிய செயல்களை செய்துள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு ஒருபோதும் மரபுகளை மீறியது இல்லை என்பதே வரலாறு. மோடி பொறுப்பேற்ற பின்பு வழக்கத் திற்கும், நாட்டின் நடைமுறைகளுக்கும் மாறாக எதிர் கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீது அம லாக்கத் துறை சோதனை நடத்தப்படு கிறது. அமலாக்கத்துறை சோதனைகளில் 0.5 சதவீதம் மட்டுமே அம லாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த புள்ளி விபரங்களே அமலாக்கத்துறையின் தவறை காட்டுகிறது.

    அமலாக்கத்துறையின் சோதனை என்பது தனிப்பட்ட நபரின் பெயரை களங்கப்படுத்தும் செயல். ஜெகத்ரட்சகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என்பது இப்போது நடப்பது இல்லை. பல ஆண்டுகள் நடந்துள்ளது. அவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். சாதாரணமாக கைவிடப் பட்ட திட்டங்களை எந்த அரசும் திரும்ப தொடங்கியதாக சரித்திரம் இல்லை. ஆனால் குமரியில் நான்கு வழிச்சாலை பணி கள் கைவிடப்பட்டும் உடனடியாக தொடங்கி துரிதப்படுத்தியுள்ளோம். விரைவில் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், முதன்மை கல்வி அதிகாரி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
    • தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே கண்டன்விளை மட விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருக்கு அதே பகுதியில் 7 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

    அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி தரக்கோரி கல் குளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்தை பரீசிலித்த கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி தரிசு நிலமாக மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகதீஸ்வரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    ஜெகதீஸ்வரி அந்த பணத்துடன் கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த துணை தாசில்தார் ருக்மணியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் துணை தாசில்தார் ருக்மணியை கையும் களவுமாக பிடித்தனர்.

    பிடிபட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள துணை தாசில்தார் ருக்மணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ருக்மணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ருக்மணியை இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    நீதிபதி அவரை வருகிற 26-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து துணை தாசில்தார் ருக்மணி தக்கலை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த லஞ்ச விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துணை தாசில்தார் ருக்மணி கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    • மாணவியின் தந்தை சிவகுமார் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • வழக்கு சம்பந்தமாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    திருவட்டார்:

    தூத்துக்குடி வி.இ. ரோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகள் சுகிர்தா (வயது 27). சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த சுகிர்தா, குமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி கல்லூரி மாணவி தனது அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். அதில், பேராசிரியர் டாக்டர் பரமசிவன் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், பிரித்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும், தன் மரணத்துக்கு இவர்கள் 3 பேரும் தான் காரணம் என்று எழுதியிருந்தார்.

    இது குறித்து மாணவியின் தந்தை சிவகுமார் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனது மகள் சுதிர்தா மரணத்துக்கு காரணமான 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்று புகார் மனு கொடுத்து இருந்தார். அதன் பேரில் குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    ஆனால் விசாரணையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்ததை தவிர, மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பயிற்சி டாக்டர் ஹரிஷ் தலைமறைவாக சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்தது ஆனால் அவரை இங்கு கொண்டு வந்து விசாரிப்பதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர் விடுமுறையில் வந்தபோது விசாரிக்கலாம் என்று போலீசார் மழுப்பலாக சென்றனர்.

    இதனால் மருத்துவ மாணவி சாவு வழக்கை சி.பி.சி.ஜ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், பா.ம.க., நாம் தமிழர்கட்சி, கம்யூனிஸ்ட் லெனிஸ்ட், மாதர் சங்கம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பு, முன்னாள் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் மருத்துவ மாணவி சுகிர்தா மரணத்திக்கு தொடர்புடைய பேராசிரியர் பரமசிவம், பயிற்சி டாக்டர் ஹரிஷ், பிரீத்தி ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணை முடியும் வரை அவர்களின் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×