search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி
    X

    வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 1-ம் திருவிழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நேற்று தொடங்கியது. 1-ம் திருவிழாவான நேற்று மாலை நாதஸ்வர கச்சேரியும், தொடர்ந்து ஆன்மீக அருள் உரையும் நடந்தது. இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசை கச்சேரி நடந்தது.

    பின்னர் 9 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக் கப்பட்ட யானை முன்சென்றது. நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் கெங்கா ஜூவல்லர்ஸ் அதிபர்கள் பகவதியப்பன், கெங்காதரன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, வணிகவரி மற்றும் விற்பனை ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    2-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்கா ரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

    மாலை 6 மணிக்கு ஆன்மீக அருளுரையும், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. 8 மணிக்கு வணிக வரித்துறை சார்பில் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    Next Story
    ×