search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை
    X

    ஜேன்சன் ராய்

    அ.தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

    • ஜேன்சன் ராய் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. மேலமைப்பு பிரதிநிதியாக இருந்து வந்தார்.
    • தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ஜேன்சன் ராய் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளம் சங்கர் படிப்பக தெருவைச் சேர்ந்தவர் ஜேன்சன் ராய் (வயது 52). இவர் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. மேலமைப்பு பிரதிநிதியாக இருந்து வந்தார். இவர் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் நேவிஸ் ராஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் அலறியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும் மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களும் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி செல்வராணி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×