என் மலர்
கன்னியாகுமரி
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
நாகர்கோவில் ::
அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செய லாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப ட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் சேவியர் மனோகரன், துணைச் செயலாளர் சுகுமாரன், மாணவரணி செயலாளர் மனோகரன், மாநில நிர்வாகிகள் சந்துரு, ராணி, இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன், இளை ஞர் அணி செயலாளர் ஜெயசீலன், வர்த்தக அணி செயலாளர் சந்திரன், வடிவை மகாதேவன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், ஜெஸீம், பொன் சுந்தரநாத், தினேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ், மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, முரு கேஸ்வரன், ஜெய கோபால், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆறு முகராஜா, மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்சன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் ஐயப்பன், டாஸ்மார்க் தொழிற்சங்க செயலாளர் மணிகண்டன், குருந்தன் கோடு ஒன்றிய செயலாளர் ராதாகிரு ஷ்ணன், அண்ணா தொழி ற்சங்க செயலாளர் வைகுண்ட மணி, போக்கு வரத்து மண்டல செயலாளர் விஜயகுமார், முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தங்கப்பன், ரயிலடி மாத வன், தொழிலதிபர் தேவ ராஜ், முன்னாள் நகர பாசறை செயலாளர் பகவத்சிங், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரபீக், ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுகிர்தாவின் பெற்றோர் மற்றும் அவரது தம்பியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவம் வீட்டில் சோதனை செய்தனர்.
நாகர்கோவில்:
குலசேகரம் பகுதியில் உள்ள மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுகிர்தா (வயது 27) என்பவர் முதுகலை மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா கடந்த 10-ந்தேதி ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாகவும் பயிற்சி டாக்டர்கள் ப்ரீத்தி, ஹரிஷ் ஆகியோர் மனதளவிலும் டார்ச்சர் கொடுத்ததாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம், ப்ரீத்தி, ஹரிஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும் பேராசிரியர் பரமசிவம் உள்பட 3 பேரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் பரமசிவத்தை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் பின்னர் விசாரணையை தொடங்கினார்கள்.
மூகாம்பிகா கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவரது செல்போன் மற்றும் லேப்-டாப்பை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஹரிஷ், ப்ரீத்தியை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஹரிசுக்கு மதுரை ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொரு பயிற்சி டாக்டரான ப்ரீத்தியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். எனவே அவரை பிடிக்க போலீசார் கும்பகோணம் விரைந்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுகிர்தாவின் பெற்றோர் மற்றும் அவரது தம்பியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 40 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவம் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு விலை உயர்ந்த 2 மதுபாட்டில்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது எங்கிருந்து வாங்கியுள்ளார் என்பதும் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜெயில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் பரமசிவத்தை காவல் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்கிறார்கள். மேலும் முன்ஜாமின் பெற்றுள்ள ஹரீஸிடம் விசாரணை நடத்தவும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். அவர் சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் ஹரிசின் முன் ஜாமினை ரத்து செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்கின்றனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- கன்னியாகுமரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அழகப்பபுரம் பேரூராட்சிக்குட்பட்ட தெற்கு பகவதிபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர், கோரிக்கை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டில் இருந்து ரூ12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணி முடிவடைந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கே.டி. உதயம் வட்டார தலைவர் கால பெருமாள், பேரூராட்சி தலைவி அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆன்றோ ஆண்ட்ரூஸ், திட்டக்குழு உறுப்பினர் ஆதிலிங்கபெருமாள், கன்னியாகுமரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விஜய்வசந்த் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார்.
- கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
வைக்கலூர் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து செல்லப்பட்ட வீடு மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார்.

இந்த நிகழ்வில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
- மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.
மார்த்தாண்டம் :
கருங்கல் பாலூரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்க லாம் பிறந்த நாள் கொண்டா டப்பட்டது. பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர் முன்னிலை வகித்தார்.சிறுவயதில் தமிழ் வழி கல்வி பயின்று விண்வெளி துறையில் சாதனைகள் படைத்த அப்து ல்கலாமின் பொன்மொழிகள், கவிதை, சிறப்புரை துணுக்கு முதலான பல நிகழ்ச்சிகள் காலை கூடுகையில் நடை பெற்றன. அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்துல்கலாம் போல் வேடமணிந்து வந்த மாண வர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.
இந்தியாவின் ஏவுகணை யின் நாயகன் அப்துல்க லாமின் படைப்புகளை நினைவு கூறும் வகையில் மழலையர்களின் படைப்பு களான ராக்கெட் கண்காட்சி மழலையர்களால் விளக்க வுரையுடன் நடத்தப்பட்டது. மேலும் மழலையர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.
- பிடித்தம் செய்த தொகையை திரும்பி வழங்க கோரிக்கை
- கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக 92 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து சேமிப்பு நிதி மற்றும் மருத்துவ படியை பிடித்தம் செய்து வந்தனர். அந்த நிதியை ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் திரும்பி வழங்க கோரி இன்று காலை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து "திடீர்"என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் துப்புரவு பணிக்காக பயன்படுத்தும் மண்வெட்டி, கூடை மற்றும் உபகரணங்களை கையில் வைத்திருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழி லாளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்த சேமிப்பு நிதி மற்றும் மருத்துவ படியை திரும்பி வழங்கு வதற்கான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- தாசில்தார் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் உடன்பாடு
- கனரக வாகனத்தில் இருந்து பாறாங்கல் விழுந்த விவகாரம்
பூதப்பாண்டி :
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முறையான அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் செல்லும் கனரக லாரிகளால் விபத்துகளும், சாலை சேதமும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10 சக்கரங்களுக்கு மேலான கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தடை விதித்தார்.
ஆனால் லாரி உரிமை யாளர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவுக்கு அவகாசம் பெற்றனர். இதனை தொடர்ந்து கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் மீண்டும் செல்லத் தொடங்கின.
கடந்த வாரம் இறச்சகுளம்-களியங்காடு வழியாக ஒரு கனரக வாகனம், கனிமவளங்களை ஏற்றிச் சென்றது. அப்போது அந்த லாரியில் இருந்து பெரிய பாறாங்கல் சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சாலையில் அப்போது யாரும் இல்லாததால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. அதே நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை போலீசாரதும் அதிகாரிகளும் சமரசம் செய்தனர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தன். இதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதிகாரிகள் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இன்று காலை தோவாளை தாசில்தார் வினைதீர்த்தான் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறச்சகுளம்-களியங்காடு சாலையில் இரு வழியாகவும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளதாகவும், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் அந்த வழியாகச் செல்லும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் செல்ல தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக 15 நாட்களில் முடிவு செய்வது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அவர்கள் கூறுகையில்,15 நாட்களில் உறுதியான முடிவு காணப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
- சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார்
- கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திரு மலை திருப்பதி தேவஸ்தா னத்தின் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி நேற்று இரவு ஒரே நேரத்தில் 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார்கள். இந்த பரத நாட்டியத்தில் கலந்து கொண்ட நடன பெண் கலை ஞர்களுக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் கேமதர் ரெட்டி, கோவில் சேவகர்கள் ஜெய ராம், கண்ணன், நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் சிவகு மார் மற்றும் திருமலை திருப்பதி தேவ ஸ்தான விஜி லென்ஸ் அதிகாரி விஷ்ணு ராம், கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடித்து செல்வதாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது
குளச்சல் :
குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்பட குகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.
கட்டுமரம்,வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.இந்த மீனவ ர்கள் தூண்டிலை பயன்ப டுத்தி மீன் பிடிக்கி ன்றனர்.இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த கட்டுமங்கள் தடை செய்யப்பட்ட 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடித்து செல்வதாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது என்றும், மீன்கள் உற்பத்தி பாதிக்க ப்படுகிறது என்றும், இதனால் கட்டுமர மீனவ ர்களின் வாழ்வ தாரம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை கண்டித்து குளச்சலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.
இதில் பாதர் தாமஸ் கொச்சேரி மீன் பிடி தொழிலாளர்கள் யூனியன் உள்பட குளச்சல் 4 சங்கங்கள் மற்றும் கொட் டில்பாடு,சைமன்காலனி ஆகிய ஊரை சேர்ந்த கட்டுமர மீனவர்களும் கலந்து கொண்டனர்.மீன் பிடிக்க செல்லாத கட்டு மரங்கள் மணற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.
- விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
- ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடிமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு பகுதியான அஞ்சுகூட்டு விளை அருந்ததியர் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில்இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடிமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநா தன்,பேரூராட்சி 15- வது வார்டு கவுன்சிலர் பூலோகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி பாராளு மன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் சாம் சுரேஷ்குமார், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், முன்னாள் பேரூரா ட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வயல் வழியில் வெள்ளம் செல்கிறது.
குழித்துறை :
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு, ஒருநூறாம்வயல், கற்றுவா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழையும், கனமழையும் பெய்து வருவதால், நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.இதனால் ஆறுகள், கால்வாய்கள், குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பிரதான, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குமரியில் உள்ள பிரதான அணை களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1,சிற்றாறு -2 ஆகிய அணைகள் முழு கொள்ள ளவை எட்டி வருகிறது.மேலும் அதிக அளவில் வெள்ளம் வெளியே ற்றப்பட்டு வருகிறது.
இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.இந் நிலையில் சிதறால் மலை கோயிலை அடுத்த திக்குறிச்சி ஏலா பகுதியில் 40 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாழை மரச்சீனி, தென்னை ஆகியவை மூழ்கியுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வயல் வழியில் வெள்ளம் செல்கிறது. இதனால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- போலீசார் அதிரடி நடவடிக்கை
- தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
தக்கலை :
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று மாலை பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமன்பறம்பு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 29) மற்றும் சடையமங்கலம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (45) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்தனர். இருவரும் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சிக்கவும் அவர்களை போலீசார் பிடித்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில் இவர்கள் இருவரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றது உறுதியானது. பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனர்.






