search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஒரே நேரத்தில் 100 பெண் கலைஞர்கள் பரத நாட்டியம்
    X

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஒரே நேரத்தில் 100 பெண் கலைஞர்கள் பரத நாட்டியம்

    • சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார்
    • கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திரு மலை திருப்பதி தேவஸ்தா னத்தின் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி நேற்று இரவு ஒரே நேரத்தில் 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார்கள். இந்த பரத நாட்டியத்தில் கலந்து கொண்ட நடன பெண் கலை ஞர்களுக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் கேமதர் ரெட்டி, கோவில் சேவகர்கள் ஜெய ராம், கண்ணன், நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் சிவகு மார் மற்றும் திருமலை திருப்பதி தேவ ஸ்தான விஜி லென்ஸ் அதிகாரி விஷ்ணு ராம், கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×