search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்
    X

    பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம்

    • அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
    • மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்க லாம் பிறந்த நாள் கொண்டா டப்பட்டது. பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர் முன்னிலை வகித்தார்.சிறுவயதில் தமிழ் வழி கல்வி பயின்று விண்வெளி துறையில் சாதனைகள் படைத்த அப்து ல்கலாமின் பொன்மொழிகள், கவிதை, சிறப்புரை துணுக்கு முதலான பல நிகழ்ச்சிகள் காலை கூடுகையில் நடை பெற்றன. அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்துல்கலாம் போல் வேடமணிந்து வந்த மாண வர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.

    இந்தியாவின் ஏவுகணை யின் நாயகன் அப்துல்க லாமின் படைப்புகளை நினைவு கூறும் வகையில் மழலையர்களின் படைப்பு களான ராக்கெட் கண்காட்சி மழலையர்களால் விளக்க வுரையுடன் நடத்தப்பட்டது. மேலும் மழலையர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×