search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் ரூ.12 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்
    X

    கன்னியாகுமரியில் ரூ.12 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடிமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு பகுதியான அஞ்சுகூட்டு விளை அருந்ததியர் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில்இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடிமைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநா தன்,பேரூராட்சி 15- வது வார்டு கவுன்சிலர் பூலோகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி பாராளு மன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் சாம் சுரேஷ்குமார், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், முன்னாள் பேரூரா ட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×