என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • அனுமதி பெறாமல் லாரி மூலம் ஜல்லி ஏற்றிக்கொண்டு வருவதாக கிடைத்தது.
    • லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேர்ந்த நாடு அருகே உள்ள கள்ள மேடு பகுதியில் இருந்து அனுமதி பெறாமல் லாரி மூலம் ஜல்லி ஏற்றிக்கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் விழுப்புரம் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் அருள்முருகன் சம்பவ இடத்திற்கு சென்றார். மேப்புலியூர் என்ற இடத்தில் லாரியை அவர் மடக்கி பிடித்தார். லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். லாரியை அங்கிருந்து எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.
    • 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த பெரியப்பட்டுபகுதியைச் சேர்ந்த அன்பரசன் (வயது 36). இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர். இவருக்கு பாணுப்பிரியா (29) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவியனூர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். பின்னர் 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இவரது மனைவி பாணுப்பிரியா நெல் அறுவடை இயந்திர உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் வேலைக்கு வரவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாணுப்பிரியா திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினார்
    • கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    உளுந்தூர்பேட்டை அருகே கிரிமேடு கிராமத்தில் வசிப்பவர் சந்திரலேகா (வயது 30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சந்திரலேகாவை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப டுத்தியதால் அவருடன் வாழாமல் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 2014-ல் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சந்திரலேகா புகார் அளித்தார். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் 2-ல் கடந்த 2015 முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கினை நீதிபதி வெங்கடேஷ்குமார் விசாரித்து வந்தார். இந்நிலையில் சந்தி ரலேகாவை வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்திய கோபாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதை யடுத்து கோ பாலகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.
    • நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு விவசாயி. இவரது மனைவி சித்ரா(53). இவர்களுக்கு பரசுராமன், கிருஷ்ணராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் சென்னையில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, மகன்களை பார்க்க சென்னைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று மதியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்த நிலையில் துணிமணிகள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 110 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை காணவில்லை.

    இதுபற்றி சின்ராசு வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கணவன்-மனைவி வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.43 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    மேலும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு ஊரக வாழ் வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக சுய உதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவி லான கூட்ட மைப்பு களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திருச்சியில் நடை பெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா வில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 329 மகளிர் சுய உதவி குழுக்க ளுக்கு வங்கி கடன் ரூ.12.20 கோடி மதிப்பீட்டிலும், 87 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் ரூ.82.06 கோடி மதிப்பீட்டில் என 416 மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கு ரூ.94.26 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணண், மாவட்ட ஊராட்சி குழுதலைவர் புவனேஸ்வரி பெருமாள், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கக திட்ட இயக்கு னர் சுந்தராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, இந்தி யன் வங்கி துணை பொது மேலாளர் (கடலூர்) கவுரி சங்கர்ராவ், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    • இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.
    • இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி சின்னபொண்ணு. இவருடைய கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.

    இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசாா் விசாரணை செய்து வருகின்றனர்.

    • எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட பகுதிகளில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது களமருதூர் பகுதி ஒரத்தூர் காலனி சேர்ந்தவர் தினேஷ் (வயது 18). கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    போலீசார் பார்த்தவுடன் அவர் ஓடத் தொடங்கினார். ஆனால், போலீசார் அவரை சிறிது தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்து கொண்டு வந்து உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதுபோல் தொடர்ந்து சம்பவங்களை ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உளுந்தூர்பேட்டை டிஎஸ்.பி. மகேஷ் எச்சரித்துள்ளார்.

    • ராமலிங்கம் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார்.
    • ரெயில்வே துறை ஊழியர் வீட்டில் இரும்பு பெட்டியில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் பணம் ஆகியவை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான இவர் எஸ்.ஒகையூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் ஒரு அறையில் ராமலிங்கமும் மற்றொரு அறையில் அவரது மாமியார் செல்லம்மாள் என்பவரும் படுத்து உறங்கினர். ராமலிங்கம் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார்.

    காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. அக்கம், பக்கம் தேடிப் பார்த்தபோது சுமார் 200 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதை அருகே இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பத்திரங்கள், பாண்டுகள் ஆகியவைகள் சிதறி கிடந்தது. மேலும், அதிலிருந்து சுமார் 18 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், செல்வராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    விசாரணையில் ராமலிங்கம் மகள் தேவி கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் தந்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் என நகைகளை வீட்டில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இரும்பு பெட்டியை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவில் கை வைக்காமல் சென்றனர். இதனால் பீரோவில் இருந்த நகை பாதுகாப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ரெயில்வே துறை ஊழியர் வீட்டில் இரும்பு பெட்டியில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் பணம் ஆகியவை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த ஒரு வாரமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நம்பிகுளம் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 35). இவரது மனைவி செண்பகம் (32). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கணவன் மனைவி இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கிறிஸ்மஸ் விடுமுறை காரணமாக கேரளாவில் இருந்து நம்பி குளத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி செண்பகத்தின் தலையில் குழவி கல்லை போட்டு பச்சை முத்து துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

    பச்சமுத்து வீட்டில் இருந்து ஓடுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் செண்பகம் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த எலவனாசூர் கோட்டை போலீசார் செண்பகத்தின் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    • இளந்தமிழன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
    • வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் இளந்தமிழன்(வயது30). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று இவர் மூங்கில்துறைப்பட்டு மரப்பட்டறை அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது22 ). இவர் சொந்த வேலை காரணமாக விழுப்புரம் சென்று விட்டு கெடிலம் எஸ்.எஸ்.வி பள்ளி வளாகம் வளைவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தகவல றிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தனி பிரிவு காவலர் மனோகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்த வாகனத்தை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறார்கள். 

    • முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கிய கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியந்தக்கா கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சிவகாமி(வயது37). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மனைவி அலமேலு(32) என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.சம்பவத்தன்று மாலை அலமேலுவும், அவரது கணவரும் சேர்ந்து சிவகாமியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாாின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலமேலு, தங்கதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    ×