என் மலர்
கள்ளக்குறிச்சி
- ராமலிங்கம் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார்.
- ரெயில்வே துறை ஊழியர் வீட்டில் இரும்பு பெட்டியில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் பணம் ஆகியவை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான இவர் எஸ்.ஒகையூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் ஒரு அறையில் ராமலிங்கமும் மற்றொரு அறையில் அவரது மாமியார் செல்லம்மாள் என்பவரும் படுத்து உறங்கினர். ராமலிங்கம் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார்.
காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. அக்கம், பக்கம் தேடிப் பார்த்தபோது சுமார் 200 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதை அருகே இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பத்திரங்கள், பாண்டுகள் ஆகியவைகள் சிதறி கிடந்தது. மேலும், அதிலிருந்து சுமார் 18 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், செல்வராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையில் ராமலிங்கம் மகள் தேவி கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் தந்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் என நகைகளை வீட்டில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இரும்பு பெட்டியை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவில் கை வைக்காமல் சென்றனர். இதனால் பீரோவில் இருந்த நகை பாதுகாப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ரெயில்வே துறை ஊழியர் வீட்டில் இரும்பு பெட்டியில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் பணம் ஆகியவை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த ஒரு வாரமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நம்பிகுளம் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 35). இவரது மனைவி செண்பகம் (32). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவி இருவரும் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கிறிஸ்மஸ் விடுமுறை காரணமாக கேரளாவில் இருந்து நம்பி குளத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி செண்பகத்தின் தலையில் குழவி கல்லை போட்டு பச்சை முத்து துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.
பச்சமுத்து வீட்டில் இருந்து ஓடுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் செண்பகம் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த எலவனாசூர் கோட்டை போலீசார் செண்பகத்தின் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
- இளந்தமிழன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
- வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் இளந்தமிழன்(வயது30). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று இவர் மூங்கில்துறைப்பட்டு மரப்பட்டறை அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த இளந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது22 ). இவர் சொந்த வேலை காரணமாக விழுப்புரம் சென்று விட்டு கெடிலம் எஸ்.எஸ்.வி பள்ளி வளாகம் வளைவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தகவல றிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தனி பிரிவு காவலர் மனோகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்த வாகனத்தை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறார்கள்.
- முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கிய கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
- சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே அரியந்தக்கா கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சிவகாமி(வயது37). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மனைவி அலமேலு(32) என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.சம்பவத்தன்று மாலை அலமேலுவும், அவரது கணவரும் சேர்ந்து சிவகாமியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாாின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலமேலு, தங்கதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- கள்ளக்குறிச்சி அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கவரைத் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 45) கூலிதொழி லாளி, இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று சோமண் டார்குடி பகுதியில் உள்ள தடிகார கோவில் அருகே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைசெய்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
- வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார்.
- தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் ஏழுமலை (வயது 43). இவர் இருசக்கர வாகனம் மூலம் புலி, பூண்டு வியா பாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனது உறவினர்களுடன் சேர்ந்த ஏழுமலையை தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே கிராமத்தை பாலாஜி என்ப வரது கிணற்றில் ஏழமலை பிணமாக மிதந்தார். அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி ஏழுமலை உடலை மீட்டனர். அதன் பின்னர்பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வியாபாரி ஏழுமலை எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.
- ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே காட்டுஎடையார் கிராமத்தில் ரேசன்அரிசி கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் கோபி, பாலாஜி, இளையபெருமாள் ஆகியோர் காட்டுஎடையார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் வடதொரசலூரை சேர்ந்த மணிகண்டன்(31) என்பதும் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளியூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண் டனை கைது செய்த போலீசார் , மினி லாரியுடன் ரேசன் அரிசி மூட்டைகளை ைகப்பற்றினர். பின்னர் அவை விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பாஷா மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு தேவ நகரை சேர்ந்தவர் பாஷா(50). மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் இருசக்கர வாக னத்தில பவுஞ்சிப்பட்டில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மூங்கில்துறைப் பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். இளையாங்கன்னி கூட்டு சாலை அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பாஷா ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காசிராமன் சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
- யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாக ராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராமன் (வயது 40). சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் தியாகராஜபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த காசிராமன் வீட்டை திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன.
அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 வெள்ளி குத்து விளக்கு உட்பட வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காசிராமன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கி ழமை) நடை பெற உள்ளது. இதன் காரணமாக சங்கரா புரம், பாண்டலம், வடசிறு வள்ளூர், வட செட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடை யாம்பட்டு, ஆருர், ராமராஜ புரம், அரசம்பட்டு, அர சராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க் குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.
- சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் சாலையில் நடந்து வந்தனர்.
- வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் இருந்தை கிரா மத்தைச் சேர்ந்த வர்கள் சவுரிமுத்து(வயது60), அமல்தாஸ்(52). இவர்கள் 2பேரும் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு மீண்டும் மடப்பட்டு நோக்கி சாலையில் நடந்து வந்தனர். அப்போது திருக்கோவிலூ ரிலிருந்து மடப்பட்டு நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 ேபரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சவரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.அமல்தாஸ் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.






