என் மலர்
காஞ்சிபுரம்
- கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
- உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் பகுதியில் சாலைகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும் , அச்சுறுத்தும் வகையிலும் சுற்றி திரிந்த ஏராளமான கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அப்போது வட்டாட்சியர் புவனேஸ்வரன், கவுன்சிலர்கள் கார்த்திக், குமரன், சங்கர் உடன் இருந்தனர்.
- தனி கோர்ட்டு வாசலில் வைத்து தனிப்படை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
- போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோமினிக். இவருடைய மகன் ஆல்பர்ட் (வயது 30). இவர் ஶ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்தார். இவர் அங்கு இருக்கக்கூடிய 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் எடுக்கும் பணி செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி எச்சூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகில் காலி இடத்தில் குடிசையில் ஆல்பர்ட் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி முகம் மற்றும் தலை பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் யார்? கூலி படை கும்பலா? அல்லது இவர்களுக்கு தொடர்புடைய நபர்களா? என போலீசார் தனி படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரனவ் (வயது 20), மண்ணிவாக்கம் ஆறுமுகம் (21), மேற்கு தாம்பரம் தினேஷ்குமார் (21) ஆகியோர் தாம்பரம் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் 3 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைவதற்கு செல்லும் தகவல் தனி படை போலீசாருக்கு கிடைத்தது. தனி கோர்ட்டு வாசலில் வைத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
3 பேரும் தாம்பரம் பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர்.
- குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. 2-வது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மூர்த்தியின் முதல் குழந்தை சக்திவேல் (வயது 3) தனது தாயை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை தனது மனைவி குள்ளம்மாள், மகள் சவுந்தர்யா (6) மற்றும் மூர்த்தியின் மகன் சக்திவேல் ஆகியோருடன் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்த பின் அவர்கள் அனைவரும் பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில கடந்த 8-ந்தேதி இரவு 8 மணியளவில் குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரை காணவில்லை.
இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்பேரில் காணாமல் போன 2 குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.
விசாரணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காணாமல் போன குழந்தைகளை அழைத்து செல்வதை போல் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடைபெற்ற தீவிர விசாரணையில் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் காஞ்சிபுரம் நகரத்தில் உளள பல்வேறு தெருக்கள், சந்துகள் வழியாக வாலாஜாபாத் தாலுகா அஞ்சூர் கிராமத்திற்கு அழைத்து சென்றது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் துரிதமாக அஞ்சூர் கிராமத்திற்கு சென்று அங்கு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.
குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன்(60) கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் தப்பியோடிய லட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
- பெண் ஒருவர் சிறார்களை அழைத்துச் செல்வது போல் சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது.
- பெண்மணியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் தாலுக்கா, வெங்கச்சேரி அடுத்த ஆதவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இருளர் சமுதாய கர்ப்பிணி பெண் காமாட்சி (வயது 28) என்பவருக்கு கடந்த செய்வாய் கிழமை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில், சுகப்பிரசவம் ஏற்பட்டது. காமாட்சியின் கணவர் மூர்த்தி , 4 வயது மகன் சக்திவேல் ,மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை, அவருடைய மனைவி குள்ளம்மா, அவருடைய 7 வயது மகள் சௌந்தர்யா ஆகியோர் காமாட்சிக்கு உதவிகள் செய்வதற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு நலப்பிரிவு பிரிவு அருகே தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி ஒருவர், மூர்த்தி, ஏழுமலை, குள்ளம்மா மற்றும் சிறார்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். செவ்வாய் கிழமை மாலை 7 மணி அளவில் சிறார்களை அழைத்துக் கொண்டு உணவு வாங்கி தருவதாக அந்த பெண்மணி அழைத்து சென்றார். சென்று வந்த பின்னர் அந்த பெண்மணி, மூர்த்தி என அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர்.
புதன் கிழமை காலை பிள்ளைகளை காணாததால் பதறி அடித்துக் கொண்டுபோய் , மனைவி காமாட்சி இடம் தகவல் கூறினர். காமாட்சி அங்குள்ள செவிலியர்கள் மூலமாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். அதன் பெயரில் விரைந்து வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் மூர்த்தி கூறும் போது, மூன்று நாட்களாக ஒரு பெண்மணி எங்களுடன் பழகினார். அவர்தான் என் பிள்ளைகளை கடத்திச் சென்று விட்டார் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மகப்பேறு நலப்பிரிவு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண்மணி சந்தேகத்துக்கடமான நிலையில் மகப்பேறு நலப்பிரிவு அருகே வந்து செல்வது கண்டறியப்பட்டது. அதில் அவருடைய முகம் சரியாக தெரியவில்லை. ரெயில்வே சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை சுற்றிலும் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள சுமார் 200 கேமராக்களை புதன் கிழமை மதியத்திலிருந்து காவல்துறையினர், ஆய்வு செய்தனர். பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கேமராக்களை ஆய்வு செய்த போது தான் ஒரு பெண்மணி இரண்டு சிறார்களையும் அழைத்து கொண்டு பேருந்து நிலையம் வழியாக ஆடிசன் பேட்டை வரை செல்லும் காட்சி கண்டறியப்பட்டது.
அந்த கேமரா புட் பேஜில் கடத்திய பெண்மணியின் முகம் சரியாக தெரியாததால் முகத்தை கண்டறியும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தபோது சிறார்களை கடத்திய அந்த பெண்மணியின் முகம் தெளிவாக காணப்பட்டது. அதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிறார்களை அழைத்துச் செல்வது போல் சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து பெண்மணியின் புகைப்படத்தை நேற்று இரவு காவல்துறையினர் வெளியிட்டனர். அக்காட்சிகளை கொண்டு சிறார்களை கடத்திய பெண்மணியை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையிலும், மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் தலைமையிலும், ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தல்காரியை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.
கடத்திய பெண்மணி பற்றிய விவரங்கள் தெரிந்தால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் : 044-27236111, 9498181232.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 949810026.
- பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது45), எலக்ட்ரீசியன். இவர், மோட்டார் சைக்கிளில் ஆயப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
- பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், உத்திரமேரூர் நெடுஞ்சாலையி்ல் உள்ள வெங்கடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.
இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி காமாட்சி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சியை பிரசவத்திற்காக மூர்த்தி 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.
காமாட்சியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் காமாட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மூர்த்தியும் அவரது 3 வயது மகன் சக்திவேலும் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் காமாட்சிக்கு உதவி செய்வதற்காக மூர்த்தியின் சகோதரர் அண்ணாமலையின் மனைவி குலாம்மாள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அவரது 6 வயது மகள் சவுந்தர்யாவும் உடன் வந்தாள்.
மூர்த்தியும், குலாம்மாளும் காமாட்சியை கவனித்து கொள்ள மருத்துவமனைக்குள் சென்ற நிலையில் சக்திவேலும், சவுந்தர்யாவும் மருத்துவமனை வளாகத்தில் விளையாடி பொழுதை போக்கினார்கள். இரவில் அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வராண்டாவில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மர்ம பெண் சக்திவேலுடனும், சவுந்தர்யாவுடனும் நெருங்கி பழகினார். அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையின் பல்வேறு இடங்களையும் சுற்றி காண்பித்தார். மூர்த்தியும், குலாம்மாளும் பேறு கால பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம பெண் சக்திவேல், சவுந்தர்யா இருவரையும் தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டார். இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்ததால் மூர்த்தியும் அந்த பெண்ணை நம்பிவிட்டார். நேற்று காலை அந்த மர்ம பெண்ணும், இரண்டு குழந்தைகளும் மாயமாகி இருந்தனர்.
இதையறிந்து மூர்த்தியும், குலாம்மாளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை வளாகம் முழுக்க தேடி பார்த்தனர். மர்ம பெண் பற்றி மருத்துவமனையில் விசாரித்தபோது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.
உணவு வாங்கி கொடுத்து பாசமாக கவனித்து கொண்ட அந்த மர்ம பெண் இரு குழந்தைகளையும் கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம பெண் பற்றி அறிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. சில சி.சி.டி.வி. கேமராக்கள் மட்டுமே இயங்கின. அதில் உள்ள காட்சிகளை பார்க்க முயற்சி செய்த போது மின்சார தடை காரணமாக பதிவுகள் அனைத்தும் அழிந்து போயிருப்பது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சி உதவிகள் கிடைக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சுற்றி வந்த மர்ம பெண் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அந்த பெண் திட்டமிட்டு குழந்தைகளுடன் பழகி கடத்தி சென்றிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்து உள்ளன. ஆனால் செவ்வாய்க்கி ழமை இரவு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளை கடத்திய மர்ம பெண் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த பெண் 2 குழந்தைகளையும் எங்கே கடத்தி சென்றிருப்பார் என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது.
- கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு ஊராட்சி பகுதியில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இங்கு நடந்த முதல்கட்ட அகழாய்வில் இந்த பகுதி கற்கால கருவிகளை தயார் செய்யும் இடமாக இருந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இதனை உறுதிப்படுத்த தற்போது 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் எம்.காளிமுத்து தலைமையில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணியின்போது பல்வேறு தொல் பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன. விளையாட்டு பொருட்கள், பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள் போன்ற பல பொருட்கள் கிடைத்து உள்ளன. இந்த நிலையில் தற்போது அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 42 பானை ஓடுகள் பல்வேறு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலானவை தென் தமிழ்நாட்டை சேர்ந்தவை. வட தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைப்பது அரிதானது என்றார்.
மேலும் இதுகுறித்து உதவி தொல்லியல் துறை அதிகாரியான ரமேஷ் கூறும்போது, "காஞ்சீபுரம் மற்றும் பட்டறை பெரும்புதூரில் மட்டுமே எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன. எனவே பானை ஓடுகளில் உள்ள கல்வெட்டு இந்த தளத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். தமிழ் மொழியின் தொன்மையை நிரூபிக்க இது முக்கியமானது ஆகும்" என்றார்.
- முசரவாக்கம் பகுதியில் அவ்வப்போது உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் மாறி மாறி ஏற்பட்டு வருகிறது.
- தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முத்துவேடு சாலை, கண்ணியம்மன் கோவில் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோழிப்பண்ணையின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கோழிப்பண்ணை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. கோழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் அவை தீயில் கருகி இறந்தன. சுமார் 3 ஆயிரம் கோழிகள் தீயில் சிக்கி இறந்ததாக தெரிகிறது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். கருகி இறந்து கிடந்த கோழிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசியது.
முசரவாக்கம் பகுதியில் அவ்வப்போது உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின் அழுத்தம் மாறி மாறி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோழிப்பண்ணையில் தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து குறித்து ராஜேந்திரன் கூறும் போது, உயர் மின்னழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து உள்ளது. தீயில் சிக்கி விற்பனைக்காக அனுப்ப வைக்கப்பட்டிருந்த அனைத்து கோழிகளும் கருகி இறந்து விட்டன. ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.
- வருகிற 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
- பல்வேறு திட்டங்கள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை உபயோகப்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.
மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகர் பகுதியில் வசிப்பவர் ராஜமாணிக்கம். இவர் ஸ்ரீபெரும்புதூர் பழைய இரும்பு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜாமணிக்கம் வீட்டை பூட்டி கொண்டு வெளியே சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.
- பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூரில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ -மாணவிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் அதிகம் பயணம் செய்து வருகிறார்கள்.
பணிமனையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் வரும் முதல் பஸ் உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காலை 7 மணி வரை இயக்கப்படவில்லை. இதனால் செங்கல்பட்டு, சென்னை தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ -மாணவிகள் தவித்தனர். காலை 7.20 மணியளவில் முதல் பஸ் பணிமனையில் இருந்து உத்திரமேரூர் பஸ் நிலையத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பாலமுரளி கிருஷ்ணா மீது போலீஸ் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு உள்ளது.
- பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டி. இவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு விஜயவாடா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், வரதட்சணை கொடுமை வழக்கு உள்ளது.
இதையடுத்து தலைமறைவாக இருந்து அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எத்தியோப்பியாவில் இருந்து வந்த பாலமுரளி கிருஷ்ணா நரஹரி ஷெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர்.






