என் மலர்
காஞ்சிபுரம்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தொட்டு உள்ளது. ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது. ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
இதையடுத்து ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தொட்டு உள்ளது. ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது. ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
இதையடுத்து ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 9 மாதங்களில் ரூ.3½ கோடி மதி்ப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டதாக 10 வழக்குகளில் ரூ.7.25 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, போதை பவுடர்கள் சிக்கியது.
ஆனால் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று வரை சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தல் பெருமளவு அதிகரித்து விட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் பன்னாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டு, சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த 9 மாதங்களாக சரக்கு விமானங்களில் போதை பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக நடந்துள்ளன.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 9 மாதங்களில் சுங்கத் துறை இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் போதை பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக 100 வழக்குகள் பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்குகளில் ஒரு பெண், கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனா். இந்த வழக்குகளில் ரூ.3 கோடியே 42 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
சமீப காலமாக போதை பொருள் கடத்தும் முக்கிய முனையமாக சென்னை விமான நிலையம் மாறி உள்ளது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னையை மையமாக வைத்து இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனா்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இளைஞா்கள் பெருமளவு போதைக்கு அடிமையாகி இருப்பதால் விற்பனை அதிகமாக இருப்பதும், கடத்தலுக்கு சென்னை மிகவும் வசதியாக இருப்பதுவும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் கூறும்போது, சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலை முழுமையாக தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் காரணமாக சமீபகாலமாக போதை பொருட்கள் கடத்தல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது. ஆன்-லைன் மூலம் வெளிநாடுகளில் சுலபமாக கிடைப்பதால் அவற்றை சரக்கு தபால் மூலம் கடத்திய சம்பவங்களே அதிகமாக நடைபெற்று உள்ளது என்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டதாக 10 வழக்குகளில் ரூ.7.25 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, போதை பவுடர்கள் சிக்கியது.
ஆனால் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று வரை சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தல் பெருமளவு அதிகரித்து விட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் பன்னாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டு, சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த 9 மாதங்களாக சரக்கு விமானங்களில் போதை பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக நடந்துள்ளன.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 9 மாதங்களில் சுங்கத் துறை இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் போதை பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக 100 வழக்குகள் பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்குகளில் ஒரு பெண், கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனா். இந்த வழக்குகளில் ரூ.3 கோடியே 42 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
சமீப காலமாக போதை பொருள் கடத்தும் முக்கிய முனையமாக சென்னை விமான நிலையம் மாறி உள்ளது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னையை மையமாக வைத்து இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனா்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இளைஞா்கள் பெருமளவு போதைக்கு அடிமையாகி இருப்பதால் விற்பனை அதிகமாக இருப்பதும், கடத்தலுக்கு சென்னை மிகவும் வசதியாக இருப்பதுவும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் கூறும்போது, சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலை முழுமையாக தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் காரணமாக சமீபகாலமாக போதை பொருட்கள் கடத்தல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது. ஆன்-லைன் மூலம் வெளிநாடுகளில் சுலபமாக கிடைப்பதால் அவற்றை சரக்கு தபால் மூலம் கடத்திய சம்பவங்களே அதிகமாக நடைபெற்று உள்ளது என்றனர்.
காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவன மேலாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே திம்மசமுத்திரம் பாலாஜி நகரில் வசிப்பவர் சண்முகப்பிரியன் (வயது 35). இவருக்கு சரண்யா என்ற மனைவியும், கிருத்திகா, தன்ஷிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சண்முகப்பிரியன் தனது குழந்தையின் மருத்துவ பரிசோதனைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத் துடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். சிகிச்சை முடிந்ததும் அங்குள்ள உறவினர் ஒருவர் வீட்டில் மனைவி, குழந்தைகளை தங்க வைத்துவிட்டு, அவர் பணிக்கு சென்று விட்டார்.
இதையடுத்து, தனது பணியை முடித்துவிட்டு மீண்டும் சென்னையில் உள்ள தனது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேற்றுமுந்தினம் திம்மசமுத்திரத்தில் உள்ள தனது வீட்டிற்குவந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து சண்முகப்பிரியன் பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.மோப்பநாய் சிறிது தூரம் சென்று நின்றது.
அதைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கொள்ளை நடந்த வீட்டின் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் அருகே திம்மசமுத்திரம் பாலாஜி நகரில் வசிப்பவர் சண்முகப்பிரியன் (வயது 35). இவருக்கு சரண்யா என்ற மனைவியும், கிருத்திகா, தன்ஷிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சண்முகப்பிரியன் தனது குழந்தையின் மருத்துவ பரிசோதனைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத் துடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். சிகிச்சை முடிந்ததும் அங்குள்ள உறவினர் ஒருவர் வீட்டில் மனைவி, குழந்தைகளை தங்க வைத்துவிட்டு, அவர் பணிக்கு சென்று விட்டார்.
இதையடுத்து, தனது பணியை முடித்துவிட்டு மீண்டும் சென்னையில் உள்ள தனது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேற்றுமுந்தினம் திம்மசமுத்திரத்தில் உள்ள தனது வீட்டிற்குவந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து சண்முகப்பிரியன் பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.மோப்பநாய் சிறிது தூரம் சென்று நின்றது.
அதைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கொள்ளை நடந்த வீட்டின் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
படப்பை அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் காசாம்பூ (வயது 60). இவருடைய மகள் துளசி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு துளசி, தனது தாயை பார்க்க நாவலூர் குடியிருப்புக்கு வந்தார்.
அப்போது வீட்டு சமையல் அறையில் தலையில் அடிபட்டு காசாம்பூ மயங்கிய நிலையில் நிலையில் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துளசி, உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
இந்த நிலையில், காசாம்பூவின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் ஷாலினி (25) என்பவர் அவரை கட்டையால் தாக்கி அவர் அணிந்திருந்த 3¾ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினியை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 621 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (வயது28), தஞ்சாவூரை சேர்ந்த அப்துல் வகாப் (49) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகள் 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 621 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சிறப்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹசன் மாலிக் (வயது 25), நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (31) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.48 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சிறப்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹசன் மாலிக் (வயது 25), நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (31) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.48 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
வேலை செய்த வீட்டில் கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து, 30 பவுன் நகையை திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரிடம் கடந்த 1½ ஆண்டுகளாக காரைக்குடி சாகவாயல் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 33) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு திடீரென அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.
இந்த நிலையில் தனது வீட்டில் 30 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி துரைப்பாக்கம் கண்ணகிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ரமேஷ்குமார் வீட்டில் ஏற்கனவே வேலை செய்து வந்ததால் சந்தேகத்தின்பேரில் திருப்போரூர் பகுதியில் இருந்த ராஜகோபாலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ரமேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராஜகோபால், கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து உள்ளே புகுந்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவரை போலீசார் கைது செய்தனர். அந்த நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ராஜகோபால் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரிடம் கடந்த 1½ ஆண்டுகளாக காரைக்குடி சாகவாயல் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 33) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு திடீரென அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.
இந்த நிலையில் தனது வீட்டில் 30 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி துரைப்பாக்கம் கண்ணகிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ரமேஷ்குமார் வீட்டில் ஏற்கனவே வேலை செய்து வந்ததால் சந்தேகத்தின்பேரில் திருப்போரூர் பகுதியில் இருந்த ராஜகோபாலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ரமேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராஜகோபால், கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து உள்ளே புகுந்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவரை போலீசார் கைது செய்தனர். அந்த நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ராஜகோபால் சிறையில் அடைக்கப்பட்டார்.
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டவுன் ஜமீன்கோட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் வாடகை வீட்டில் தங்கி திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் ஆஷிஷ் என்பவர் வீட்டுக்கு சென்றார். புத்தாண்டு கொண்டாடி விட்டு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மணிமங்கலம் வழியாக படப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
படப்பையை அடுத்த மலைப்பட்டு-சேத்துப்பட்டு கிராமத்திற்கு இடையே உள்ள காட்டுப்பகுதி அருகே வரும்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் ரஞ்சித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பூந்தமல்லி:
திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பூமாதேவன் (வயது 33). இவரது நண்பர் கார்த்திக் (33). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். குன்றத்தூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக இந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பூமாதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். கார்த்திக் பலத்த காயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதம்பாக்கத்தை சேர்ந்த அபிஷேக் (21) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே கஞ்சா கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக வந்த ஒரு மினி வேனை போலீசார் சைகை காட்டி நிறுத்தினார். வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் உரிய ஆவணங்களின்றி, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்தனர்.
அப்போது வேனில் 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையொட்டி காஞ்சீபுரம் செவிலிமேட்டை சேர்ந்த வேன் டிரைவர் சகாதேவன் (வயது 21), வெண்பாக்கத்தை சேர்ந்த முகமது அன்சாரி (21) மற்றும் 16 வயது சிறுவர்கள் 3 பேர், 17 வயது சிறுவன் என 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள், டிஜிட்டல் தராசு, 5 செல்போன்கள், ரூ.1060, கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு பேரிச்சம் பழத்துக்கு நடுவில் மறைத்து வைத்து கடத்திய ரூ.15 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமைகள் வந்திருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது பேரிச்சம் பழம் பெட்டிகள் இருந்தன.
அவற்றின் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அதில் ஒரு பாக்கெட்டை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் பேரிச்சம் பழங்களுக்கு நடுவே தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
ரூ.15 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமைகள் வந்திருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது பேரிச்சம் பழம் பெட்டிகள் இருந்தன.
அவற்றின் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அதில் ஒரு பாக்கெட்டை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் பேரிச்சம் பழங்களுக்கு நடுவே தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
ரூ.15 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பீமன்தாங்கள் மதுரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகிதாஸ் (வயது 47). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50). கட்டுமான பணி செய்து வந்தார். உறவினர்களான லோகிதாசும், செல்வமும் நேற்று மோட்டார் சைக்கிளில் பீமந்தாங்களில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது சென்னை நோக்கி சென்ற கார் லோகிதாஸ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இ்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த லோகிதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற செல்வம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வத்துக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான லோகிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.






