search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sriperumbudur accident"

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 15 பேர் மற்றும் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்றது. தண்டலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது அரசு பஸ் பின்னால் மோதியது.

    இதில் வேனில் இருந்த மாணவர் தர்‌ஷன் (10) படுகாயம் அடைந்தான். ஊழியர்கள் விவேக், ராமு, மணிகண்டன், அமல்ராஜ், லலிதா என்ற பஸ் பயணியும் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ள டி.வி.எஸ். குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேஷ் (35). இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கச்சிப்பட்டு பகுதியில் வந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே வெங்கடேஷ் இறந்து போனார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    ×