என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படப்பை அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண் கைது
Byமாலை மலர்4 Jan 2021 6:13 AM GMT (Updated: 4 Jan 2021 6:13 AM GMT)
படப்பை அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் காசாம்பூ (வயது 60). இவருடைய மகள் துளசி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு துளசி, தனது தாயை பார்க்க நாவலூர் குடியிருப்புக்கு வந்தார்.
அப்போது வீட்டு சமையல் அறையில் தலையில் அடிபட்டு காசாம்பூ மயங்கிய நிலையில் நிலையில் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துளசி, உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
இந்த நிலையில், காசாம்பூவின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் ஷாலினி (25) என்பவர் அவரை கட்டையால் தாக்கி அவர் அணிந்திருந்த 3¾ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X