search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    படப்பை அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண் கைது

    படப்பை அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் காசாம்பூ (வயது 60). இவருடைய மகள் துளசி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு துளசி, தனது தாயை பார்க்க நாவலூர் குடியிருப்புக்கு வந்தார்.

    அப்போது வீட்டு சமையல் அறையில் தலையில் அடிபட்டு காசாம்பூ மயங்கிய நிலையில் நிலையில் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துளசி, உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    இந்த நிலையில், காசாம்பூவின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் ஷாலினி (25) என்பவர் அவரை கட்டையால் தாக்கி அவர் அணிந்திருந்த 3¾ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினியை கைது செய்தனர்.
    Next Story
    ×