என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் அருகே கஞ்சா கடத்திய 6 பேர் கைது
Byமாலை மலர்1 Jan 2021 10:29 AM GMT (Updated: 1 Jan 2021 10:29 AM GMT)
காஞ்சீபுரம் அருகே கஞ்சா கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக வந்த ஒரு மினி வேனை போலீசார் சைகை காட்டி நிறுத்தினார். வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் உரிய ஆவணங்களின்றி, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்தனர்.
அப்போது வேனில் 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையொட்டி காஞ்சீபுரம் செவிலிமேட்டை சேர்ந்த வேன் டிரைவர் சகாதேவன் (வயது 21), வெண்பாக்கத்தை சேர்ந்த முகமது அன்சாரி (21) மற்றும் 16 வயது சிறுவர்கள் 3 பேர், 17 வயது சிறுவன் என 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள், டிஜிட்டல் தராசு, 5 செல்போன்கள், ரூ.1060, கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X