என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

    காஞ்சிபுரம்:

    மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல், தனியார் மயத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்றும், நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.

    அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பஸ்கள் அதிக அளவில் இயங்காததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 140 பஸ்கள் உள்ளன. இதில் 10 பஸ்கள் மட்டுமே காலையில் ஓடின இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர்.

    காஞ்சிபுரத்தில் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. போலீசார் வாகனங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பொதட்டூர் பேட்டை, பொன்னேரி ஆகிய 6 போக்குவரத்து பணிமனையில் மொத்தம் 223 அரசு பஸ்கள் உள்ளன. இதில் 80 பஸ்கள் மட்டுமே இயங்கியது. மாவட்டம் முழுவதும் 37 சதவிகிதம் அரசுப் பஸ்கள் மட்டுமே ஓடின.

    தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது.

    திருவள்ளூர் உழவர் சந்தை அருகே எ.ஐ.டி.யூ.சி மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர் குருமூர்த்தி, மண்டலத் தலைவர் சுந்தர் ராஜன், மாநில பொதுச்செயலாளர் அருண்பிரசாத், மாவட்ட செயலாளர் சீனிவாசன், ராஜேந்திரன், சண்முகம், முரளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர தாசன் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் வெங்கடேசன் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதேபோல் திருத்தணி நகராட்சி அலுவலம் முன் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டு பணிமனையில் மொத்தம் 84 அரசு பஸ்க்கள் உள்ளன. இங்கிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், சூனாம்பேடு, கடப்பாக்கம், செய்யூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர், சாலவாக்கம், வடக்குப்பட்டு, திருப்போர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    தொழிற்சங்கத்தினர் போராட்டத்தையொட்டி இன்று 3 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் காணப்பட்டது. இதேபோல் அனைத்து மின்சார ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பூந்தமல்லியில் மொத்தம் 149 பஸ்களில், 18-ம், குன்றத்தூரில் மொத்தம் உள்ள 29 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் காலையில் வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் லோடு ஆட்டோக்களில் பயணம் செய்து சென்றனர். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் பட்டதால் சிலர் நடந்தே சென்றனர்.

    பேருந்துகள் இயங்காததால் பெரும்பாலான பொதுமக்கள் தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயிலில் பயணித்தனர். இதனால் மின்சார ரெயிலில் வழக்கத்தை விட இன்று கூட்டநெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.

    தாம்பரம்:

    சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் பகுதியில் இருந்து அரசு பஸ் மூலம் வேலைக்கு செல்வது வழக்கம் இன்று பேருந்துகள் வேலைநிறுத்தம் காரணமாக தாம்பரம் பணிமனையில் இருந்து இயக்கப்பட வேண்டிய 186 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கியது. இதுபோல் குரோம்பேட்டையில் பணிமனையில் இருந்து 220 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் காலை 16 பஸ்கள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றமே அடைந்தனர்.

    இதனால் அவர்கள் அவ்வழியாக வரும் தனியார் பஸ்கள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன்களில் ஷேர் ஆட்டோக்கள் போன்றவற்றில் கட்டணங்கள் செலுத்தி கடும் சிரமத்துக்கு உள்ளாகி தங்களது அலுவலகங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வழக்கமாக அழைத்துச் செல்லும் போது பெறக் கூடிய கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக வசூலிக்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    பேருந்துகள் இயங்காததால் பெரும்பாலான பொதுமக்கள் தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயிலில் பயணித்தனர். இதனால் மின்சார ரெயிலில் வழக்கத்தை விட இன்று கூட்டநெரிசல் அதிகமாகவே காணப்பட்டது. நாளொன்றுக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களை பயன்படுத்திய நிலையில் இன்று பஸ்கள் இயங்காததால் பெரும்பாலான பொதுமக்கள் ரெயிலிலேயே பயன்படுத்த வேண்டி நிலை ஏற்பட்டதால் ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    அரசு பஸ்சை பயன்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி அடைந்தனர். இந்த கல்வி ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வில்லை என்றாலும் பள்ளி சீருடையில் அல்லது பள்ளி கல்லூரி அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தது.

    இதைப் பயன்படுத்திய ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். இன்று அரசுப் பஸ்கள் 5 சதவீத மட்டுமே இயங்கும் நிலையில் அரசுப் பஸ்சை பயன்படுத்தி பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் தங்களது பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். சிலர் பள்ளி கல்லூரிக்கு செல்லாமல் அவரவர் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 40). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி எழிலரசி. இவர்கள் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று லட்சுமிநாராயணனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவரது உறவினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவரது வீட்டில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, கதவை இரும்பு கம்பியால் உடைத்து, உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.90 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. போலீசார் தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
    காஞ்சிபும் மாவட்ட வனசரக அலுவலர் ராமதாஸ், வனக்காப்பாளர் ஆதித்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாலுச்செட்டிச்சத்திரம் போலீஸ்துறையினரிடம் இருந்து உத்தரபிரதேச மாநில கண்டெய்னர் லாரியையும், செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி வன இலாகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள தானிய வியாபாரிகள் சங்க வணிக வளாக எடை மேடை அருகே நேற்று அதிகாலை உத்தரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வளாகத்தின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    டிரைவர், கிளீனர் என யாரும் லாரியில் இல்லாததால் சந்தேகப்பட்ட நெல் மண்டி வியாபாரிகள் லாரியில் ஏறி பார்த்தபோது செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து தானிய வியாபாரிகள் சங்கத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 45 கிலோ எடை உள்ள 64 பாலீஸ் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் இருந்ததையடுத்து அவர் வன சரக துறையினருக்கு தகவல் அளித்தார்.

    அதன்பேரில் காஞ்சிபும் மாவட்ட வனசரக அலுவலர் ராமதாஸ், வனக்காப்பாளர் ஆதித்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாலுச்செட்டிச்சத்திரம் போலீஸ்துறையினரிடம் இருந்து உத்தரபிரதேச மாநில கண்டெய்னர் லாரியையும், செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி வன இலாகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

    இந்த செம்மரக்கட்டைகளை ஆய்வு செய்த பின்னரே இதனுடைய மதிப்பீடு என்ன என்று தெரிவிக்க இயலும் என்று கூறினார்.
    உத்திரமேரூர் அருகே தேள் கொட்டியதில் 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் லட்சிய கண்ணன் (வயது 3). கடந்த 20-ந்தேதி இரவு 9 மணி அளவில் வீட்டில் குழந்தை லட்சிய கண்ணன் விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டவுடன் குழந்தையின் அருகில் சென்று பார்த்தபோது குழந்தையை தேள் கொட்டியது தெரிந்தது. குழந்தையை உடனடியாக வாலாஜாபாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் குழந்தையை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு லட்சிய கண்ணன் பரிதாபமாக இறந்து போனான்.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில், கடனை உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி, 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 2 நகர கூட்டுறவு வங்கிகள், 3 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 29 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் என பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன்கள், விதை, உரங்கள், இடுபொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    மேலும் குறுகிய கால மற்றும் மத்திய கால வேளாண் கடன்கள் வழங்கப்படுகிறது.

    கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒரு குடும்பத்திற்கு 40 கிராமுக்கு உட்பட்ட நகைக் கடன்களை தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 93 கூட்டுறவு நிறுவனங்களில், நகைக் கடன் வழங்கி வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் கள ஆய்வு செய்யப்பட்டது. இதில் 40 கிராமிற்குட்பட்டு அடமானம் வைக்கப்பட்ட பொது நகைக்கடன்கள் 18 ஆயிரத்து 443 பயனாளிகளின் அசல் ரூ.58.08 கோடி மற்றும் வட்டி ரூ.5.62 கோடி தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:-

    “கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுய உதவிக்குழுக் களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் 31.3.2021-ல் நிலுவை நிற்கும் ரூ.2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுக்களுக்கு கடன்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு விரைவில் தள்ளுபடி வழங்கிட ஆவன செய்யப்பட உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில், கடனை உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு ஆண்டுக்கு ரூ.70 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை 11,149 விவசாயிகளுக்கு ரூ.67.20 கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பண்ணை சாரா கடன்கள், வீட்டு அடமானக் கடன், தொழில் முனைவோர் கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், தாட்கோ கடன், டாப்செட்கோ கடன், டாம்கோ கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டும், மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்காக கூட்டுறவு கணினி மயமாக்கப்பட்டு, விரைந்த சேவையினை அளித்து வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம். பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் லட்சுமி முருகன், நகர தி.மு.க. செயலாளர் சன்பிரண்ட் கே. ஆறுமுகம் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 51 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த மகாலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 51 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். மேயர் மகாலட்சுமி இதில் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். பெரும்பாலானோர் சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து இருந்தனர். 
    மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் மகாலட்சுமி, உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக மேயர் மகாலட்சுமி கூறும்போது, “காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்து உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    எனவே இனி வரும் நாட்களில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும்” என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
    காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்து உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த மகாலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 51 வார்டுகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

    மேயர் மகாலட்சுமி இதில் கலந்து கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். பெரும்பாலானோர் சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து இருந்தனர்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் மகாலட்சுமி, உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக மேயர் மகாலட்சுமி கூறும்போது, “காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்து உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    எனவே இனி வரும் நாட்களில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும்” என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கற்சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் தெரிந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஆற்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள பிடாரி கோயில் செல்லும் வழியில் உள்ள காவாங்கரையில் தலைகள் மட்டுமே தெரிந்தபடி கற்சிலைகள் புதைந்து இருந்தது.

    இதனை பொதுமக்கள் பத்திரமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்தனர். அந்த சிலையை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் ஆய்வு செய்தார்.

    அப்போது இந்த கற்சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் தெரிந்தது.

    மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையானது 4 அடி உயரத்தில் 3 அடி அகலத்தில் தனது மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் மூவரும் அமர்ந்தநிலையில் கரண்டமகுடத்துடன் கண்ணைக் கவரும் வகையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளுடன் காணப்படுகிறது.

    மூத்த தேவியின் வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட அவரது மகன் மாந்தன் கையில் ஆயுதத்துடனும், இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் வீற்றிருக்கிறார்கள்.

    மூத்த தேவி தலையின் வலப்பக்கம் தூய்மையின் அடையாளமான துடைப்பமும், வலப்பக்கம் அவரின் சின்னமான காக்கை கொடியும் உள்ளது.

    மூத்த தேவியுடைய தலையில் கரண்ட மகுடமும் காதில் பத்ர குண்டலமும் கழுத்தில் சரப்பளி ஆபரணமும் தோல்களில் வாகு வளையங்களும் கைகளில் வளையல்களும் பருத்த வயிறோடு விரிந்த கால்களும் இடையில் இருந்து பாதம் வரை நீண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையோடு புன்னகையான முகத்துடன் அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளிக்கிறது.

    தமிழகத்தில் தொண்டை மண்டலமாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமான மூத்த தேவி சிலைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த சிலையில் மூத்த தேவியினுடைய மகனும் மகளும் பெரிய உருவமாக அவருக்கு இணையாக காட்டப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.

    மூத்த தேவியின் இடக்கரம் தன்னுடைய மகள் மாந்தியின் இடையில் அணைத்த வண்ணம் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

    ஆற்பாக்கம் கிராமம் என்பது சைவம், வைணவம், பவுத்தம், சமணம் ஆகிய சமயங்கள் செழிப்புடன் வளர்ந்திருந்த ஊராகும். அந்த ஊரின் பழமையை பறைசாற்றும் வகையில் இந்த சிற்பம் அமைந்துள்ளது

    மூத்த தேவிக்கு தவ்வை ஜேஷ்டாதேவி என பல பெயர்கள் உண்டு. இவர் திருமாலின் மனைவியான லட்சுமி தேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களில் மற்றும் திருவள்ளுவர் அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

    பல்லவர் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்துள்ளது. இதனால் பல்லவர்கால ஆலயங்களில் வீற்றிருப்பார். சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த இந்ததெய்வம் வளமையின் அடையாளமாக குழந்தைப்பேறு தருபவளாக செல்வவளம் பெருக்குபவளாக போற்றப்பட்டாள்.

    நாளடைவில் மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போய் உள்ளது. இது பல்லவர்களின் இறுதிக் காலத்தை சார்ந்ததாகும்.

    காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக அவர்களது ஆட்சியின் கீழ் இருந்த நகரமாகும். எனவே இந்த மாவட்டம் முழுவதும் பல்லவர்களின் வரலாற்று எச்சங்கள் இன்றும் பல இடங்களில் காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஏரியில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிக அளவில் களியன் வாத்துக்கள் குவிந்து இருப்பது தெரிந்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிப்ரவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

    இது 15 மாவட்டங்களில் உள்ள 311 நீர்நீலைகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

    காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஏரியில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிக அளவில் களியன் வாத்துக்கள் குவிந்து இருப்பது தெரிந்தது.

    வனத்துறையினரின் ஏற்பாட்டில் தனியார் அமைப்பினர் தினந்தோறும் மேற்கொண்ட துல்லிய ஆய்வில் 12 தனித்தனி கூட்டங்களாக 2,100 களியன் வாத்துக்கள் பரந்தூர் ஏரியில் முகாமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பரந்தூர் ஏரி புதிய சரணாலயமாக மாறி உள்ளது.

    இது குறித்து தனியார் அமைப்பினர் கூறியதாவது:-

    பரந்தூர் ஏரியில் 2100 களியன் வாத்துக்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் புகைப்படங்களாக ஆதாரப்படுத்தி உள்ளோம்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்சமாக 20 அல்லது 30 எண்ணிக்கையிலேயே களியன் வாத்துக்கள் இருந்தன. ஆனால் இவை பரந்தூர் ஏரியில் 2,100 எண்ணிக்கையில் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. நன்னீர் அதிகம் இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிகிறது.

    எனவே இது போன்ற நீர்நிலைகளில் மாசுக்கள் கலப்பதையும், பறவைகள் வேட்டையாடப்படுவதையும் தடுத்தால் வாத்துக்கள் போன்ற பறவைகளை பாதுகாக்கலாம். இதற்கு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2015-ம் ஆண்டு இந்த வகை பறவைகள் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை பறவையாக சர்வதேச அளவில் பட்டியலிடப்பட்டன. களியன் வாத்துக்களுக்கு தலை, கழுத்து பகுதிகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். சிமெண்டு நிறத்தில் அலகு இருக்கும். மேற்கு ஐரோப்பாவில் இருந்து இனப்பெருக்கத்துக்காக இவை மத்திய ஆசியாவில் சைபீரிய பகுதிக்கு செல்லும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பெங்களூருவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்க சாவடி வழியாக பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு மினி லாரி டிரைவர் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை வேகமாக ஓட்டினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் துரத்தி சென்று மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் மினி லாரியில் மூட்டை, மூட்டையாக 6 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் சென்னை திருவேற்காடு பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

    இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை, பரமேஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த செல்வவிநாயகம்(வயது 33), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வேலு(50), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மோகன்(41), ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 6 டன் ரேஷன் அரிசியை காஞ்சிபுரம் குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நள்ளிரவு ருத்ர கோட்டி விமானத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி எழுந்தருளினார்கள். அவர்கள் 4 மாட வீதி வழியாக உலா வந்தனர்.
    காஞ்சீபுரம் ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 8-ந்தேதி பங்குனி மாத திருக்கல்யாண உற்சவம் கொடியேற் றத்துடன் தொடங்கியது.

    கடந்த 11 தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாக னங்களில் ஏகாம்பர நாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நேற்று அதிகாலை பங்குனி திருக்கல்யாண திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது நேற்று நள்ளிரவு ருத்ர கோட்டி விமானத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி எழுந்தருளினார்கள். அவர்கள் 4 மாட வீதி வழியாக உலா வந்தனர்.

    காஞ்சீபுரம் அனைத்து பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திரு விழா வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏகாம் பரநாதர் மற்றும் வள்ளி தேவயானை முருகன் உள் ளிட்டவர்களை வணங்கி னார்கள். மேலும் நள்ளிரவு 3 மணி வரை வாண வேடிக்கை நடைபெற்றது.
    ×