என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்துக்கான ஒப்புதலை பெற கவர்னரிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். ஆசிரியர்கள் இடமாறுதல் குறித்து மதுரை மற்றும் சென்னை ஐகோர்ட்டுகள் தீர்ப்புகளை வழங்கி உள்ளன. இந்த தீர்ப்புகளை ஒருங்கிணைத்து பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும். சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே தீர்ப்புக்கு பிறகே பணி நியமன ஆணை வழங்கப்படும். 2-ம் பருவத்துக்கான புத்தகங்கள் தேவையான அளவு உள்ளது. தற்போது கூடுதலாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிக்கூடம் திறப்பது குறித்து ஆராய தனிக்குழு அமைக்கப்படவில்லை. பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து ஆய்வு செய்யவே குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த குழுவின் பரிந்துரைப்படி மாணவர்கள் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஈரோடு சேனாதிபதிபாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது வட்டமாக அமர்ந்து சிலர் சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஈரோடு ரங்கம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூபதி (வயது 25), சக்திவேல் என்கிற லிங்கேஸ்வரன் (25) மற்றும் 19 வயது வாலிபர், திண்டல் தெற்கு பள்ளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.300 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தின் 3-வது தளத்தில் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன்கள் (பாய்லர்) உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனராக மகேஷ்பாண்டி பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வித தொழிற்சாலைகளில் உள்ள கொதிகலன்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து அதற்கு உறுதி சான்று வழங்கப்படும்.
இந்த சான்று வாங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு வருவதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீரென முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி, அலுவலக உதவியாளர் ஒருவர், டிரைவர், வெளி நபர் என 4 பேர் இருந்தனர். அலுவலகத்தின் கதவை மூடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1.65 லட்சம் சிக்கியது.
இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி அவரது உதவியாளர், கார் டிரைவர் என 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:-
இந்த சோதனை தொடர் புகாரின் பேரில் திடீரென நடத்தப்பட்டது. இதில் ரூ.1.65 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணத்தில் சில ஆயிரத்திற்கு மட்டும் உதவி இயக்குனர் கணக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை தவிர மீது உள்ள பணத்தை கைப்பற்றி உள்ளோம். கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியது தொடர்பாக அறிக்கை தயார் செய்து அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரி பணியாற்றும் தலைமை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.
அதன்பிறகு அத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் எங்களது அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தின் 3-வது தளத்தில் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன்கள் (பாய்லர்) உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனராக மகேஷ்பாண்டி பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வித தொழிற்சாலைகளில் உள்ள கொதிகலன்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து அதற்கு உறுதி சான்று வழங்கப்படும்.
இந்த சான்று வாங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு வருவதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப் புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீரென முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி, அலுவலக உதவியாளர் ஒருவர், டிரைவர், வெளி நபர் என 4 பேர் இருந்தனர். அலுவலகத்தின் கதவை மூடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1.65 லட்சம் சிக்கியது.
இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி அவரது உதவியாளர், கார் டிரைவர் என 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:-
இந்த சோதனை தொடர் புகாரின் பேரில் திடீரென நடத்தப்பட்டது. இதில் ரூ.1.65 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணத்தில் சில ஆயிரத்திற்கு மட்டும் உதவி இயக்குனர் கணக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை தவிர மீது உள்ள பணத்தை கைப்பற்றி உள்ளோம். கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியது தொடர்பாக அறிக்கை தயார் செய்து அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரி பணியாற்றும் தலைமை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.
அதன்பிறகு அத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் எங்களது அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி இயக்குனர் மகேஸ்பாண்டி மற்றும் எலவமலையை சேர்ந்த இடைத்தரகர் ராம்குமார் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும்.
அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தனித மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இதற்கிடையில் அந்தியூர் பகுதியை சேர்ந்த 53 வயது ஆண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந்தேதி அவர் இறந்தார்.
இதேபோல் ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 9-ந்தேதி உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 276 ஆக உயர்ந்தது.
அதேநேரத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 130 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 76 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 1,099 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.






