என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 101 ஆக உயர்வு - நேற்று ஒரே நாளில் 163 பேருக்கு தொற்று

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 101 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும்.

    அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தனித மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.

    இதற்கிடையில் அந்தியூர் பகுதியை சேர்ந்த 53 வயது ஆண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந்தேதி அவர் இறந்தார்.

    இதேபோல் ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 9-ந்தேதி உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 276 ஆக உயர்ந்தது.

    அதேநேரத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 130 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 76 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 1,099 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×