என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புது குய்யனூர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி செல்லமுத்து.
இவர்களுக்கு ஜீவானந்தம் (19) என்ற மகனும், பவித்ரா (15) என்ற மகளும் இருந்தனர். ஜீவானந்தம் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டும் பவித்ரா சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்சும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி ஜீவானந்தம் பவானிசாகர் பகுதியில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். பவித்ரா அண்ணன் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். இதனால் அண்ணன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இதையடுத்து விபத்தில் இறந்த ஜீவானந்தனுக்கு கடந்த 22-ந் தேதி 15-ம் நாள் காரியம் வீட்டில் நடந்தது.
இந்த நிலையில் அண்ணன் இறந்த சோகத்தில் மன வேதனையில் இருந்து வந்த பவித்ரா சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த தோட்டத்துக்கு பயன்படுத்தும் களைகொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமிகண்ணு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இருந்து கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார். அண்ணன் இறந்த சோகத்தில் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் புதுவடவள்ளி சமத்துவபுரம் பகுதியில் ரோந்து பணி சென்றார். அப்போது சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார்.
போலீசாரை பார்த்ததும் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்றனர். ஆனால் அவர் அதற்குள் வனப்பகுதிக்குள் தப்பி தலைமறைவானார்.
இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் டேங் கவரில் இருந்த ஒரு பையை சோதனை செய்தனர். அதில் வனவிலங்குகளை வேட்டையாடும் 7 அவுட்காய்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் அவுட் காயை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தப்பி ஓடியது புதுவடவள்ளி சமத்துவபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் ஜெயபாலன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கடம்பூர் இருட்டி பாளையம், எக்கத்தூர், பசுவனாபுரம் ஆகிய இடங்களில் ரோந்து சென்றனர்.
அப்போது அனக்கரை என்ற பகுதியில் போலீசார் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ரெங்கன் என்பவரது மகன் முருகேசன் (29) என்பவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார்.
இதையடுத்து போலீசார் அவரை விரட்டினர். அப்போது முருகேசன் அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவேன் என்று போலீசாரை பார்த்து மிரட்டி உள்ளார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அப்போது அவர் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை விரட்டவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும் அவுட்காய்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திடீரென மாயமானார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மாணவி மாயம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் மாணவியை பவானிசாகர் கணபதி நகர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் லோகேஷ்குமார் (25) என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் லோகேஷ்குமார் மற்றும் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடம் பற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் லோகேஷ் குமார் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






