என் மலர்tooltip icon

    ஈரோடு

    அண்ணன் இறந்த சோகத்தில் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புது குய்யனூர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி செல்லமுத்து.

    இவர்களுக்கு ஜீவானந்தம் (19) என்ற மகனும், பவித்ரா (15) என்ற மகளும் இருந்தனர். ஜீவானந்தம் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டும் பவித்ரா சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்சும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி ஜீவானந்தம் பவானிசாகர் பகுதியில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். பவித்ரா அண்ணன் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். இதனால் அண்ணன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதையடுத்து விபத்தில் இறந்த ஜீவானந்தனுக்கு கடந்த 22-ந் தேதி 15-ம் நாள் காரியம் வீட்டில் நடந்தது.

    இந்த நிலையில் அண்ணன் இறந்த சோகத்தில் மன வேதனையில் இருந்து வந்த பவித்ரா சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த தோட்டத்துக்கு பயன்படுத்தும் களைகொல்லி மருந்தை (வி‌ஷம்) எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமிகண்ணு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இருந்து கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார். அண்ணன் இறந்த சோகத்தில் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாட்டு வெடியை வீசி கொன்று விடுவேன் என்று போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் புதுவடவள்ளி சமத்துவபுரம் பகுதியில் ரோந்து பணி சென்றார். அப்போது சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார்.

    போலீசாரை பார்த்ததும் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்றனர். ஆனால் அவர் அதற்குள் வனப்பகுதிக்குள் தப்பி தலைமறைவானார்.

    இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் டேங் கவரில் இருந்த ஒரு பையை சோதனை செய்தனர். அதில் வனவிலங்குகளை வேட்டையாடும் 7 அவுட்காய்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் அவுட் காயை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் தப்பி ஓடியது புதுவடவள்ளி சமத்துவபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் ஜெயபாலன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கடம்பூர் இருட்டி பாளையம், எக்கத்தூர், பசுவனாபுரம் ஆகிய இடங்களில் ரோந்து சென்றனர்.

    அப்போது அனக்கரை என்ற பகுதியில் போலீசார் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ரெங்கன் என்பவரது மகன் முருகேசன் (29) என்பவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார்.

    இதையடுத்து போலீசார் அவரை விரட்டினர். அப்போது முருகேசன் அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவேன் என்று போலீசாரை பார்த்து மிரட்டி உள்ளார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போது அவர் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை விரட்டவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும் அவுட்காய்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 17 வயது பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திடீரென மாயமானார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவி மாயம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் மாணவியை பவானிசாகர் கணபதி நகர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் லோகேஷ்குமார் (25) என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் லோகேஷ்குமார் மற்றும் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடம் பற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் லோகேஷ் குமார் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சென்னிமலை காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புல்வெளிகள் மற்றும் செடி, மரங்கள் தீயில் கருகி சேதமானது.
    சென்னிமலை:

    சென்னிமலை காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புல்வெளிகள் மற்றும் செடி, மரங்கள் தீயில் கருகி சேதமானது. 

    சென்னிமலையை அடுத்த கவுண்டம் பாளையத்தில் காட்டுப் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் காய்ந்த புல்வெளி, செடி, கொடிகள் உள்ளன. 

    இதில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென வேகமாக கொளுந்துவிட்டு எரிந்தது. 

    இதைப்பார்த்த அருகில் உள்ள பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ வேகமாக பரவியது. 

    இதையடுத்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உடனடியாக  தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஆனால், தீ பிடித்த இடத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்ல அங்கு போதிய வழி இல்லாததால் புல்வெளியில் பிடித்த தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். 

    பின்னர் இலை, தழைகளை கொண்டு தீ மேலும் பரவாமல் முழுவ துமாக அணைத்தனர். 

    இந்த திடீர் தீ விபத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புல்வெளிகள் மற்றும் செடி, மரங்கள் தீயில் கருகி சேதமானது. 

    தீ எப்படி பிடித்தது என்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் யாரேனும் தீயை சரியாக அணைக்காமல் பீடி அல்லது ஏதாவது பொருளை அங்கு வீசினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.
    சென்னிமலை அருகே உள்ள கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 33 இடங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது. 

    அதேபோல் சென்னி மலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் வேளாண் பொருட்களை 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் இருப்பு வைக்கும் வகையில் குடோன் வசதி உள்ளது. 

    இங்கு தற்போது நெல் கொள் முதல் நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த கொள் முதல் நிலையத்தில் சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். 

    சென்னிமலை ஒன்றியத் துக்கு உட்பட்ட எக்கட்டாம் பாளையம், எல்லைக்கிராமம், பசுவபட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கின்றனர். 

    விவசாயிகளிடம் இருந்து நெல் 1 கிலோவுக்கு ரூ.20 ரூபாய் 60 பைசா வரை இங்கு கொள்முதல் செய்யப் படுகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறும் போது, வெப்பிலி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப் படும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கிறது. 

    இதற்காக விவசாயிகளிடம் இருந்து எந்த வித கட்டணமும் வாங்காமல் நெல் கொள்முதல் செய்கின்றனர்.

    நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு உதவியாக நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கும் பணியில் 15&க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களுக்கான கூலியை நாங் களே எங்கள் விருப்பம் போல் கொடுத்து விடுகிறோம். கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்வதற்கு ஆன்&லைனில் பதிவு செய்யும் முறையை பின் பற்றுவதில் பல விவ சாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. 

    அதனால் பதிவு செய்யும் முறையை எளிமையாக்கினால் விவசாயிகளுக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்றனர்.
    ஆப்பக்கூடல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு-பணத்தை திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    டி.என்.பாளையம்:

    ஆப்பக்கூடல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து  தங்க காசு-பணத்தை திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள  வேம்பதி சிந்தண கவுண்டன் பாளையத்தை  சேர்ந்தவர் பழனிசாமி.  சம்பவத்தன்று  பழனிசாமி வேலைக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று  ஒரு பவுன் தங்க காசு,  ரூ.2 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி கொண்டு வேகமாக சென்று உள்ளார்.

    இதனை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர்  அதிர்ச்சி அடைந்து திருடன்.. திருடன் என சத்தம் போட்டுள்ளார். 

    அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு அந்த நபரை மடக்கி பிடித்தனர். 

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.  

    விசாரணையில் அந்த நபர் குமாரபாளையம், தட்டன் குட்டை, ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (34) என தெரியவந்தது. 

    சங்கர் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க காசு, ரூ.2 ஆயிரம் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

     இதையடுத்து அவரிடம் இருந்து தங்க காசு, பணம், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ஆப்பக்கூடல்  போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். 

    பின்னர் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம் அருகே நடந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே நடந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம் அடுத்த கொண்டையம் பாளையம் சின்னகாளியூரை சேர்ந்தவர் முருகேசன் (40).  இவர் மேட்டுப் பாளையம் அருகே உள்ள சிறுமு கையில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.  

    இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமுகை சென்று சம்பளம் வாங்கி கொண்டு முருகேசன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந் தார். 

    அப்போது சத்தி- அத்தாணி சாலையில் கொண்டையம் பாளையம் அருகே வந்து கொண் டிருந்த  போது வளைவில் திடீரென நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர இருந்த மரத்தில் மோதியது. 

    இதில் படுகாயமடைந்த முருகேசன் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது  குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஞ்சல் துறை சார்பில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    அஞ்சல் துறை சார்பில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு அஞ்சல் கோட்டம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-  மாணவர்களுக்கு இடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க 9 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. 

    எதிர்காலநிலை நெருக்கடியில் அவர்கள் ஏன் மற்றும் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விளக்கி செல்வாக்கு மிக்க ஒருவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும். 

    தேசிய அளவில் 3 தபால் துறை, வட்ட அளவில் 3 என்ற வீதம் படைப்புகள் தேர்வு செய்யப்படும். சிறந்த படைப்புகள் சர்வதேச அளவிலான போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும். 

    ஆர்வமுள்ளவர்கள் வரும் மார்ச் மாதம் 4-ந் தேதி ஈரோட்டுக்கு நேரடியாக வந்து போட்டியில் பங்கேற்கலாம். வீட்டில் இருந்தவாறு எழுதுபவர்கள் வரும் 15-ந் தேதிக்குள் எழுதிய கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும். 

    தேர்வு நடக்கும் இடம், வீட்டில் இருந்து எழுதுபவர்கள் அந்த கடிதத்தை எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற விபரங்கள் www.indiapost.gov.in என்ற இணைய தள முகவரியில் அறியலாம். 

    தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

    அஞ்சல் துறை வட்ட அளவில் தேர்வு செய்யப் படுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2-ம் தவணை தடுப்பூசியை 70 சதவீதம் பேர் செலுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2-ம் தவணை தடுப்பூசியை 70 சதவீதம் பேர் செலுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.

    தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரியில் போடப்பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாம் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.
     
    மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும்.  இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இதேபோல் 15 முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்தவர் களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 28 ஆயிரத்து 700 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 90 சதவீதமாகும்.  

    இதேப் போல் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 12 லட்சத்து 54 ஆயிரத்து 201 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 70 சதவீதமாகும்.

    முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியை மொத்தம் இதுவரை 28 லட்சத்து 82 ஆயிரத்து 901 பேர் செலுத்தி உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 
    வடமாநிலத்தவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    வடமாநிலத்தவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று வரபாளையத்தை அடுத்த மொட்டணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. 


    அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேனில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் கோபி, குருமந் தூரை சேர்ந்த  கார்த்தி (42), பழனி கவுண்டன்பாளையம் சத்யாநகர் காலனியை சேர்ந்த சின்ராசு (42) என தெரியவந்தது.

    அவர்கள் பெருந்துறையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு அரிசி கொடுப்பதற்காக கடத்தி சென்றதை ஒப்புக் கொண்டனர். 

    இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு  அவர்களிடம் இருந்த அரிசி, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 83 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 83 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டாலும் லேசான அறிகுறிகளையே அவர்கள் குணம் அடைந்து வருகின்றனர். 

    இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 

    இதையடுத்து 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. 

    இதில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப் பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர். 

    இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 83, 336 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த சிறுவர்களுக்கு  2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

    மாவட்டத்தில்  43 ஆயிரத்து 712  சிறுவர்களுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    அந்தியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு தண்டனை விதித்து சிறையில் அடைக்க ஈரோடு மகிளாநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    பவானி:

    அந்தியூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு  5 ஆண்டு தண்டனை விதித்து சிறையில் அடைக்க ஈரோடு மகிளாநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அந்தியூர் தவிட்டுப்பாளையம் ஏ.கே. பழனியப்பா வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (58).  இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அந்த பகுதியில் இருந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். 

    இது குறித்து அந்த சிறுமி அவரது உறவினர்களிடம் கூறினார். இதனையடுத்து சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர்  போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பான வழக்கு ஈரோடு மகிளா நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நீதிபதி மாலதி விசாரணை நடத்தி தீர்ப்பு  கூறினார். 

    இதில் தேவராஜீக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தும்  நீதிபதி உத்தரவிட்டார். ரூ.1000 கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். 

    இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தர விடப்பட்டது.  

    இதையடுத்து தேவராஜ் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி நியமிக்கப்பட்டு வாதாடினார்.
    ×