என் மலர்tooltip icon

    ஈரோடு

    சத்தியமங்கலம் பகுதியில்அட்ட காசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத் துள்ள சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி. 

    இவர் தனது வீட்டில் ஆட்டுப்பட்டி அமைத்து 5 ஆடுகள் வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் தனது 3 ஏக்கர் மஞ்சள் காட்டில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இரவு வழக்கமான இடத்தில் கட்டி வைத்தார். 

    பின்னர் நள்ளிரவு திடீரென நாய்கள்  குறைக்கும் சத்தம் அதிகமாக கேட்டது. 

    இதையடுத்து  முருகன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது சிறுத்தை   ஒன்று ஆட்டை கடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  

    பின்னர் அவர் சத்தம் போட்டார். இதையடுத்து அந்த சிறுத்தை அங்கிருந்து சென்றது.

    இதில் அங்கு கட்டி வைக்கப் பட்டு இருந்த 5 ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது தெரிய வந்தது. 

    உடனே இது குறித்து சத்தியமங்கலம் வனத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.  

    வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான வனத்துறையினர் சம்பவயிடம் வந்து  சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய் தனர்.

    மேலும் சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். 

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுத் தையை பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும் போது:- சத்தியமங்கலம் பகுதியில் சிறுத்தைகள் அடிக்கடி புகுந்து கால் நடை களை அடித்து கொன்று வருகிறது. 

    தற்போது எங்கள் பகுதியில் அட்டகாசம் செய்து வரும்  சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்கள்.
    ஈரோடு

    ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்கள்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று காலை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    பின்னர்   இன்ஸ்பெக்டர் ஜெயசுதா பொதுமக்களிடம்  கூறியதாவது:-
    ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி எங்களிடம் முன் பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது உங்களை தொடர்பு கொண்டால் உடனே அந்த அழைப்பை துண்டித்து விட வேண்டும். 

    குடும்பத்தினர் புகைப்படத்தை சமூக வலைத ளத்தில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.  பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் ஏதேனும் கேட்டால் உடனே அழைப்பை துண்டிக்க வேண்டும். 

    கடன் தருவதாக வங்கி மேலாளர் போல் தொலைபேசி அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு பற்றிய விவரங்கள் மற்றும் முன்பணம் கேட்டால் கொடுக்கக் கூடாது.

    பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக பணம் கேட்டு மிரட்டினால் அருகில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவும்.

    உங்களது செல்போன் தொலைந்தால் உடனடியாக பிளாக் செய்து விட வேண்டும். இல்லையென்றால் அந்த எண் தவறாக பயன்படுத்தக் கூடும்.
    பெட்ரோல் பங்க், ஷாப்பிக் மால்களில் ஆன்லைன் பண பரிவர் த்தனை செய்யும் போது கவனமுடன் செயல்பட வேண்டும். 

    உங்களிடத்தில் மொபைல் டவர் அல்லது காற்றாலை அமைக்க உள்ளோம் அதற்கு மாதம் பல ஆயிரம் வாடகை கிடைக்கும் எனவே அதற்கு முன் பல லட்சங்கள் கொடு த்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறினால் நம்ப வேண்டாம்.

    அறிமுகம் இல்லாத நபரிடம் வீடியோ கால் பேசுவதை தவிர்க்கவும். உங்கள் குழந்தைகள் பணம் செலுத்தி ஆன்லைனில் கேம் விளையாடுகிறார்களா? என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். 

    பயன்படுத்தப்படாத உங் களது வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் வங்கி கணக்கை வேறு யாரேனும் தவறாக பயன்படுத்தக் கூடும்.
    உங்களது கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலில் விலை உயர்ந்த பரிசு விழுந்து உள்ளது. அதை பெறுவதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினால் அதை நம்பி ஏமாற வேண்டாம்.

    மேலும் ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டால் 1930 என்ற எண்ணிற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார்களை அளிக்க வேண்டும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    குடும்ப தகராறு காரணமாக 50 அடி பள்ளத்தில் இருந்து குதித்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம்:

    குடும்ப தகராறு காரணமாக 50 அடி பள்ளத்தில் இருந்து குதித்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர் நகலூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (41). இவர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார், இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 7 வயதில் நித்தின் என்ற மகனும், 2 வயதில் ஹரீஸ் என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் சென்ற வேலுச்சாமி நேற்று வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் கடம்பூர் அருகே உள்ள மல்லியதுர்கம் கோன்பாறை என்ற இடத்தில் எஸ் வடிவ மலைப்பாதையில் வேலுச்சாமியின் கார் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.
    இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். 

    அப்போது கார் நிறுத்தப்பட்ட இடத்தில் வேலுச்சாமி இல்லாத நிலையில் அருகில் இருந்த பள்ளத்தில் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த வர்கள் உதவியுடன் பள்ளத்தில் இறங்கி தேடினர்.

    அப்போது வேலுச்சாமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து பள்ளத்தில் இருந்து கடும் போராட்டத் திற்கு பிறகு வேலுச்சாமியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு  ஆம்புலன்ஸ் மூலமாக  கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே இறந்து விட்டார்.

    இதைய டுத்து வேலுச்சாமி யின் உடல் பிரேத பரிசோத¬ னக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்ப ட்டது. 

    இதுகுறித் து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உருக்கமான தகவல்கள் வெளிய £னது. வேலுச்ச £மிக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் வேலுச்சாமி மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் விடுமுறை முடிந்து வேலைக்கு வந்தபோது காரை மலைப்பாதையில் நிறுத்தி உள்ளார். பின்னர் அங்கிருந்து 50 அடி ஆழ கிடு, கிடு பள்ளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.  

    அப்போது அவர் விழுந்து சுமார் 1 மணி நேரம் கழித்துதான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்று மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் அவர் இறந்து விட்டார். அவர் பள்ளத்தில் விழுந்த உடன் மீட்டிருந்தால் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் யாருக்கும் இதுப்பற்றி தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1,700 வரை பதிவானது. 

    இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 
    அதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது. 2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக் கையும் அதிகரிக்கப்பட்டது. 

    தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரி க்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட் டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட் டவர்கள் விரைவாக குணம் அடைந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மூலம் 3-ம் அலையாக உருவாகி மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து முதலில் 2 ஆயிரம் பரிசோதனை மேற் கொண்டு வந்த நிலையில் பின்னர் அது படிப்படியாக 4 ஆயிரமாக உயர்ந்தது. அதன் பின்னர் 6 ஆயிரமாக அதிகரித்தது. இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. 
    மாவட்டம் முழுவதும் இதுவரை 26 லட்சத்து 47 ஆயிரத்து 442 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் 2 ஆயிரம் முதல் 2500 பேருக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    கவுந்தப்பாடி அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    கவுந்தப்பாடி அருகே 1,200 கிலோ  ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சித்தோடு, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
    அப்போது, கவுந்தப்பாடியில் இருந்து வைரமங்கலம் செல்லும் சாலையில் வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 
    இதையடுத்து போலீசார் விசாரணையில் பவானி, எலவமலை, கரை எல்லப் பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (31) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி வந்து பெருந்துறையில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு குமரேசனை செய்துனர். மேலும் அவரிடம் இருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2 நாட்களில் மட்டும் ரேஷன் அரிசி கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் கைதான வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் கைதான வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பவானிசாகர் போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ் பெக்டர் அம்மாசை மற்றும் போலீசார் பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் உள்ள கன்ரா மொக்கை, ஜே.ஜே. நகர், சித்தன்குட்டை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    தொடர்ந்து கன்ரா மொக்கை அடுத்த ஒத்தபன மரக்காட்டில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பி செல்ல முயன் றார். இதையடுத்து போலீ சார் அவரை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார்  விசாரணை நடத்தினர். இதில் அவர் பவானிசாகர் அடுத்த ஒத்தப்பனைக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி (38) என்பதும், அவரது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு அடியில் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி மற்றும் 50 பால்ரஸ் குண்டுகள் மறைத்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பெரியசாமியை கைது செய்து  தோட்டத்தில் மறைத்து வைத்து இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் பால்ரஸ் குண்டுகளை பறி முதல் செய்தனர்.
    இதையடுத்து பெரிய சாமியை போலீசார் சத்தியமங்கலம் கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோபி கிளை சிறையில் அடைக்கப் பட்டார்.
    சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சர்வே கற்கள் நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சர்வே கற்கள் நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உத்தரவின்படியும், ஆணையர் அறிவுரையின் பேரில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து, நில அளவை எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

     அதன்படி சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி முடிவடைந்து ஈரோடு மண்டலத்தில் முதலா வதாக சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான அட்டவணை பிடாரியூர் கிராமம், சர்வே எண் 172-ல், 10.99 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலத்திற்கு சர்வே எல்லை கற்கள் நடும் பணியானது ஈரோடு மண்டல இணை ஆணையர் மங்கையற்கரசி தலைமையில் தொடங் கியது. 

    இதில் ஈரோடு உதவி ஆணையர் அன்னக்கொடி, முருகன் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், உதவி கோட்டப் பொறியாளர் காணீஸ்வரி, உதவிப்பொறியாளர் சரவணன், தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் (கோவில் நிலங்கள்), அழகுராஜன், அரசு உரிமம் பெற்ற நில அளவையர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    ஈரோடு:

    வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது  செய்யப்பட்டார்.


    ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 46). தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக் கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி சதீஷ் அந்த தேசிய மயமாக் கப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார். அங்கு வங்கி ஊழியரிடம் அவர் ஒரு காசோலையை கொடுத்து அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டு உள்ள பணத்தை தனது வங்கி கணக்கில் வரவு வைக்கும்படி கூறி உள்ளார்.
    அந்த காசோலையை வாங்கி வங்கி ஊழியர் சரிபார்த்தார். அப்போது அதில் ரூ.6 கோடியே 60 லட்சம் என்று குறிப்பிடப்பட்டி இருந்தது. அதிக தொகை என்பதால் சதீஷின் வங்கி கணக்கில் வரவு செலவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவரது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் வரவு, செலவு இருந்தது தெரியவந்தது. இதனால் வங்கி அதிகாரிகளுக்கு சதீஷின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டு உள்ள மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தொட ர்பு கொண்டு வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 

    அப்போது சதீஸ் என்ற பெயரில் இதுவரை காசோலை எதுவும் வழங்கப் படவில்லை என்றும், அந்த காசோ¬ லக்கும், தங்களது நிறுவனத் துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து வங்கியின் உதவி மேலாளர்  ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 
    விசாரணையில் போலி காசோலை கொடுத்து வங்கியில் சதீஸ் பண மோசடி செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சதீசை  போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில்  இந்த காசோலையை ஆணைக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி என்பவர் என்னிடம் கொடுத்து மாற்ற சொன்னார் என்று கூறினார்.
     
    இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்பாக ஈஸ்வர மூர்த்தியிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். மேலும் இந்த போலி காசோலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,247 விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,247 விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    தமிழகத்தில் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தி ருந்தார்.
    25 ஆயிரம்
    விவசாயிகள்
    இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மின்வாரியம் சார்பில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கும் ஆணை வழங்கியது.
    இதனை தொடர்ந்து மாதத்துக்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி 4 மாதத்துக்குள் நிறைவு செய்ய மின்வாரியம் திட்ட மிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பத்த நிலையில் முதற்கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு தர திட்டமிடப்பட்டது.
    1,247 மின் இணைப்பு
    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபி மின் பகிர்மான வட்டங்களில் இணைப்பு துரிதமாக வழங்கப்படுகிறது. இதில் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில் 1,187 மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து 467 இணைப்பும், கோபி மின் பகிர்மான வட்டத்தில் 2,105 மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து 780 விவசாய மின் இணைப்பும் வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    உக்ரைனில் 3 மாதங்களாக போர் சூழல் நிலவி வருவதால் தமிழக மருத்துவ மாணவர்கள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுவதாக ஈரோடு திரும்பிய மாணவி கர்ஷினி கூறி உள்ளார்.
    ஈரோடு:

    உக்ரைனில் 3 மாதங்களாக போர் சூழல் நிலவி வருவதால் தமிழக மருத்துவ மாணவர்கள்  உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுவதாக ஈரோடு திரும்பிய மாணவி கர்ஷினி கூறி உள்ளார்.

    ரஷ்யா உக்ரைன் மீது இன்று 3&வது நாளாக போர் தொடுத்து வருகிறது.உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உக்ரைன் தலைநகர் கிவ்வில் படித்து வருகிறார்கள். 

    இதில் ஒரு சில மாணவர்கள் இந்தியா திரும்பி விட்டனர். பெரும்பாலும் மாணவ& மாணவிகள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். அவர்களை இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு  மூலப்பாளையம் காமராஜர் வீதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகள் கர்ஷினி. 
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்ரைன் தலைநகரில் உள்ள போகோமோலக்ஸ் நேஷனல் யூனிவர்சிட்டியில் மருத்துவ படிப்பில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார். அவருடன் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
    இந்த நிலையில் உக்ரைனில் ஏற்பட்டு உள்ள போர் காரணமாக இந்தியாவை சேர்ந்த மருத்துவம் படிக்க சென்ற ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களை இந்திய தூதரகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து அழைத்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கர்ஷினி 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு திரும்பி உள்ளார். 
    உக்ரைனில் உள்ள நிலைமை குறித்து மாணவி கர்ஷினி கூறியதாவது:-

    உக்ரைனில் கடந்த 3 மாதங்களாகவே போர் சூழல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருந்த உக்ரைன் தலைநகரில் எந்த பிரச்சி னையும் அதிகமாக இல்லை. எல்லை பகுதியில் தான் போருக்கான பிரச்சினை இருந்தது. இருந்தாலும் எனது பெற்றோர்கள் பயந்து ஈரோடுக்கு திரும்பி வர சொன்னார்கள். 
    அப்போது ஊருக்கு திரும்பி வர விமான டிக்கெட்கள் கிடைக்க வில்லை. அப்படி கிடைத்தாலும் 3 மடங்கு விலை ஏற்றத்துடன் இருந்தது. இருந்தாலும் நான் விமான டிக்கெட் எடுத்து கொண்டேன்.விமான டிக்கெட் உயர்வு காரணமாக அதிக அளவில் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியிருந்தனர்.  

    இந்திய தூதரகம் தங்களை பாதுகாத்து பத்திரமாக திரும்ப அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் இருந்து வருகிறார்கள். மேலும் என்னுடன் படிக்கும் நண்பர்கள் 24&ந் தேதிக்கு மேல் தான்  விமான டிக்கெட்கள் புக் செய்து இருந்த நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் திரும்பி வர இயலவில்லை. இதனால் அவர்கள் அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    உணவு, தண்ணீர் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருவதாக எனது நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருக்கக்கூடிய பகுதிகள் அருகில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.  இந்திய தூதரகம் எல்லை பகுதிகளில் இருந்து மட்டுமே அழைத்து வர முடியும் என்று கூறி உள்ளது.

    ஆனால் எல்லை பகுதிகளுக்கு செல்ல சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றும் தற்போதைய சூழ்நிலையில் அவர்களால் பாதுகாப்பாக செல்ல முடியாது. 
    எனவே எனது நண்பர்களை எல்லை பகுதிகளுக்கு செல்ல பாதுகாப்புடன் கூடிய வாகன வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 500&க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு தங்கி உள்ளனர். 
    இந்தியாவிலிருந்து அதிக அளவு உக்ரைன் நாட்டுக்கு மருத்துவம் படிக்க செல்ல காரணம் இந்தியாவை விட அங்கு மருத்துவம் படிக்க ஆகும் செலவு மிக குறைவு உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தான் அதிக அளவில் இந்தியர்கள் மாணவர்கள் உள்ளார்கள். எனவே அங்கு சிக்கி தவித்து வரும் எனது நண்பர்களை மத்திய, மாநில அரசுகள் பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55) விவசாயி. இவர் தனது வீட்டில் ஆட்டுப்பட்டி அமைத்து 5 ஆடுகள் வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று தனது மஞ்சள் காட்டில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இரவு வழக்கமான இடத்தில் கட்டி வைத்தார். நள்ளிரவு திடீரென நாய்கள் சத்தம் அதிகமாக கேட்டது.

    இதையடுத்து முருகன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் சத்தம் போட்டு பேட்டரி டார்ச் அடித்து பார்க்கும் பொழுது சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது.

    இதனையடுத்து பட்டியில் சென்று பார்த்தபோது சிறுத்தை அடித்து கொன்றதில் 5 ஆடுகளும் பலியானது தெரிய வந்தது. உடனே இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான வனத்துறையினர் சம்பவயிடம் வந்து சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்தனர்.

    மேலும் சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். விவசாயி கண்முன்னே ஆட்டை கடித்த சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறையினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உதவி செய்வதைப் போல் நடித்து தனபாலனின் மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

    சித்தோடு:

    பவானி ராயல் தியேட்டர் ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருபவர் தனபாலன். இவர் கடந்த 7-ந்தேதி தனது மொபட்டில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சென்று விட்டு பின்னர் பவானி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் சித்தோடு செல்லப்பம் பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு ரோட்டில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர்கள் அவருக்கு உதவி செய்வது போல் நடித்து அவர் ஓட்டி வந்த மொபட்டை திருடி சென்றனர்.

    இது குறித்து தனபாலன் சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் சித்தோட்டில் இருந்து திருப்பூர் வரை 84 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுமார் 750 சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.

    அப்போது தனபாலனின் மொபட்டை ஒரு வாலிபர் சித்தோட்டில் இருந்து திருப்பூர் வரை ஓட்டி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை பின்தொடர்ந்து சென்று அந்த வாலிபரை திருப்பூரில் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் சித்தோடு போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருப்பூர் சிவசக்தி நகர் 1-வது வீதியை சேர்ந்த பிரபாகரன் (23) என்பதும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இவர் கடந்த 7-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்று உள்ளார். பின்னர் வெப்படையை சேர்ந்த வேலு, கடலூரை சேர்ந்த வினோத் ஆகியோருடன் மீண்டும் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வரும் வழியில் தனபாலன் மயக்க நிலையில் இருப்பதை கண்டு உதவி செய்வதைப் போல் நடித்து தனபாலனின் மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய வேலு, வினோத் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மோட்டார் சைக்கள் திருடனை சி.சி.டி.வி. கேமிரா மூலம் 84 கி.மீ தூரம் பின்தொடர்ந்து கைது செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    ×