என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தற்போது கடும் பனி நிலவிவரூவதால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள மல்லிகை செடிகளில் பூக்கள் குறைந்த அளவிலேயே வரூகிறது.
    • பூக்களின் தேவை அதிகரித்து, வரத்து குறைந்து உள்ளதால் ஈரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்து வரூகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மற்றும் ஈரோடு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரூந்தும் ஈரோடு பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    தற்போது கடும் பனி நிலவிவரூவதால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள மல்லிகை செடிகளில் பூக்கள் குறைந்த அளவிலேயே வரூகிறது.

    மேலும் தற்போது கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த நாள், கார்த்திகை தீபம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இரூந்து கோவிலுக்கு செல்வதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    பூக்களின் தேவை அதிகரித்து, வரத்து குறைந்து உள்ளதால் ஈரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்து வரூகிறது.

    அதிக பட்சமாக ஒரூ கிலோ மல்லிகை பூ ரூ. 3ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் முல்லைப்பூ கிலோ ரூ. 2ஆயிரத்துக்கும், காக்கட்டான் பூ கிலோ ரூ. 800 க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ. 120-க்கும், அரளி பூ கிலோ ரூ. 300-க்கும், சம்பங்கி பூ கிலோ ரூ. 50-க்கும் விற்பனை செய்யப்படு–கிறது.

    இதே போல் துளசி, மரிக்ெகாழுந்து, ரோஜா ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது.

    • பின்னர் மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கரூருக்கு புறப்பட்டனர்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை–பகுதியை சேர்ந்தவர் துரைசாமி.இவர் கரூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலைப்பார்த்து வந்தார்.

    நேற்று இவர் தனது மருமகன் சரவணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொடுமுடிக்கு ஒரு வளை–காப்பு நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் மீண்டும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கரூருக்கு புறப்பட்டனர்.

    அப்போது அவர்கள் சோளக் காளி பாளையம் என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த னர். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.அப்போது எதிர்பாராத வகையில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டது.

    இந்த விபத்தில் துரைசாமி படுகாயம் அடைந்தார். இதை யடுத்து கொடுமுடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் துரைசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொடு முடிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம பீட் என்ற பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
    • இதையடுத்து இன்று யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட கொத்தமங்கலம பீட் என்ற பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்யானை இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் பவானிசாகர்வன சரகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.

    அப்போது யானை இறந்து சில நாட்கள் ஆனது தெரியவந்தது. மேலும் குடற்புழு நோயால் யானை இறந்து இருக்கலாம்என்றும் தெரியவந்தது. இதையடுத்து இன்று யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    அதன் பின்னர்தான் யானை சாவுக்கான முழு காரணமும் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் 2.30 மணி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
    • சாலைகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் 2.30 மணி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மதியம் இடியுடன் கூடிய கன மழை பெய்து தொடங்கியது. சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    சாலைகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பின்னர் தொடர்ந்து மாலை வரை சாரல் மழை பெய்து.

    இதுபோல் கொடுமுடி மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 27.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதே போல் சென்னிமலை, பெருந்துறை, கொடிவேரி, குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், கோபி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அவல்பூந்துறை, அரச்சலூர், 46 புதூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம் போன்ற பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கியது.

    வெண்டிபாளையம், சாவடிப்பாளையம், கேட்புதூர் உள்ளிட்ட ரெயில்வே நுழைவுப் பாலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொடுமுடி - 27.60, சென்னிமலை - 22, ஈரோடு - 14, பெருந்துறை - 12, மொடக்குறிச்சி - 10.20, கொடிவேரி - 9.20, குண்டேரி பள்ளம் - 9, கோபி - 6.20, பவானிசாகர் - 4.20, வரட்டு பள்ளம் - 3.60, கவுந்தப்பாடி - 2, பவானி -1.60

    • விவசாயிகள் 11,526 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • மொத்தம் 4,702 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 295 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் அரச்சலூர் அவல்பூந்துறை உள்ளிட்ட அப்பகுதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 11,526 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 31 காசுக்கும், அதிகபட்ச விலையாக 30 ரூபாய் 13 காசுக்கும், சராசரி விலையாக 28 ரூபாய் 39 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 4,702 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 295 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது. நேற்று வினாடிக்கு 2,712 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று அணைக்கு வினாடிக்கு 712 கன அடியாக குறைந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவிலும் காலியாக உள்ள பணியிடத்துக்கு 8,237 பேர் விண்ணப்பி த்துள்ளனர்.
    • இவர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று காலை நடந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு படித்த தமிழ் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவிலும் காலியாக உள்ள 107 பணியிடத்துக்கு 8,237 பேர் விண்ணப்பி த்துள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று காலை நடந்தது.

    இதற்காக ஈரோடு மாவட்டத்தில் வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாளர் மெட்ரிக் மகளிர் மேல் நிலைப்பள்ளி, கொடு முடியில் உள்ள தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள நவரசம் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி, பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டி பாளையத்தில் உள்ள சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

    சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி, பவானியில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, ஐடியல் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி, நம்பியூரில் உள்ள குமுதா மெட்ரிகு லேசன் மேல்நிலைப்பள்ளி, அந்தியூரில் உள்ள மங்களம் மேல்நிலைப்பள்ளி, தாளவாடியில் உள்ள ஜே.எஸ்.எஸ். மெட்ரி குலேஷன் மேல்நிலை ப்பள்ளி என மாவட்டம் முழுவதும் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    காலை 10 மணிக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வர்கள் காலை 8 மணி முதலே அந்தந்த தேர்வு மையத்துக்கு வர தொடங்கினர். 9.30 மணி க்குள் தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப் பட்டிருந்தது. 9.50 மணிக்கு மேல் வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மேலும் கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. செல்போன் புத்தகங்கள், கைப்பைகள், மின்னணு சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெற்றது. தேர்வு மையங்களை அந்தந்த பகுதி தாசில்தார்கள் கண்கா ணித்தனர். வேளாளர் மெட்ரிக் மகளிர் பள்ளியில் நடைபெற்ற எழுத்து தேர்வை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.

    தேர்வு நடைபெறும் மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி செய்யப்ப ட்டிருந்தது. தேர்வுக்காக மாவட்ட போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன.

    • கரும்பு லாரி மீது ஒருவர் நின்று கொண்டு கரும்புகளை யானைக்கு வீசி கொண்டிருந்தார்.
    • வனத்துறை அதிகாரிகள் யானைக்கு கரும்புகளை உணவாக அளிப்பது குற்றம் என தெரிவித்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.இதில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    கடந்த சில மாதங்களாக கரும்புகளை தின்று பழகிய யானைகள் சாலையில் உலா வருவதும், கரும்பு லாரியை மறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி மற்றும் கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரிகள் தினந்தோறும் சென்று வருகிறது . கரும்பை சுவைத்து பழகிய யானைகள் தொடர்ந்து சாலையில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

    ஒரு சில லாரி டிரைவர்கள் சாலை ஓரத்தில் நிற்கும் யானை களுக்கு லாரியை நிறுத்தி கரும்புகளை வீசி செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் ஆசனூர் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் வந்தனர் .

    அப்பொழுது கரும்பு லாரி மீது ஒருவர் நின்று கொண்டு கரும்புகளை யானைக்கு வீசி கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றி சென்றதும், சாலை ஓரத்தில் நின்றிருந்த யானைக்கு கரும்பை உணவாக அளித்ததும் தெரியவந்தது.

    வனத்துறை அதிகாரிகள் யானைக்கு கரும்புகளை உணவாக அளிப்பது குற்றம் என தெரிவித்தனர். இதனையடுத்து லாரி டிரைவர் கர்நாடகா மாநிலம் நஞ்சன்கூடு பகுதிைய சேர்ந்த சித்தராஜ் என்பவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    • சம்பவத்தன்று கங்கனா கவுடா பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் முகம், கை, கால் கழுவ ஆற்றில் இறங்கினார்.
    • அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு படிக்கட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    பவானி:

    கர்நாடக மாநிலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கங்கனா கவுடா (32). போர்வெல் லாரி டிரைவர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பூஜாப்பூர் ஆனந்தராப்ட் என்பவர் கங்கனா கவுடாக்கு போன் செய்து திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பட்டறையில் தனது லாரி தயாராகி கொண்டிருப்பதாக கூறினார். இதனையடுத்து லாரியை எடுத்து வர கங்கனா கவுடா திருச்செங்கோடு வந்தார்.

    இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் முகம், கை, கால் கழுவ ஆற்றில் இறங்கினார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு படிக்கட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் காயம் ஏற்பட்ட அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ–மனையில் சிகிச்சைக்கா சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கங்கனா கவுடா பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக அவரின் மனைவி கங்கம்மா பவானி போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இன்று அதிகாலை முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.
    • இதனால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆண்டு தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி–மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முன்னோர் களுக்கு திதி கொடுத்து புனித நீராடி செல்வார்கள்.

    ேமலும் அமாவாசை மற்றும் முக்கிய முகூர்த்த நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வருகை இருக்கும்.

    தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்களும் அதிகளவில் பவானி கூடுதுறைக்கு வர தொடங்கியுள்ளனர். அவர்கள் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்று வருகிறார்கள்.

    இன்று அதிகாலை முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்தனர். மேலும் இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதாலும் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    • விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோட ம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    இதேபோல் ஈரோடு சுத்தானந்தா நகரை சேர்ந்த பரத் (27) என்பவர் வேலை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    வெட்டுக்காட்டு வலசு பிரிவு அருகே வந்தபோது பரத் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை ஏறி வந்த போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சசிகுமார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத்திற்கு மூக்கில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வெண்டிபாளையம் அருகே மணலி கந்தசாமி வீதி உள்ளது. இந்த வீதி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தாகும்.

    மணலி கந்தசாமி வீதி வழியாக செல்லும் சாலை ஈரோடு நாமக்கல் மாவட்டம் செல்வதற்கு பிரதான முக்கிய சாலையாகவும், ஈரோடு நாமக்கல் என 2 மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் இருப்பதால் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

    இப்பகுதி வழியே ஈரோடு நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் கல்லூரி வாகனங்கள் தனியார் மற்றும் அரசு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பொதுமக்கள் நாள்தோறும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் . மேலும் இப்பகுதியில் தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தார் சாலை அமைக்காததால் மழைக் காலங்களில் சாலையில் ஏற்பட்டிருக்கும் குழிகள், மழை நீரால் நிரம்பி காணப்படுவதுடன், வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான பகுதியில் மழைநீர் நிரம்பி இருப்பதை தெரியாமல் வாகனங்களை இயக்கி பலர் விபத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.

    மணலி கந்தசாமி சாலையை புதுப்பித்து தருமாறு பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் இருந்து மணலி கந்தசாமி குடியிருப்பு வரை உள்ள பிரதான சாலையை புதுப்பித்து, தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×