என் மலர்tooltip icon

    ஈரோடு

    • எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவிற்கு சென்னி மலை வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகேசன் கலந்து கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்பு அம்சங்களை எடுத்து ரைத்தார்.

    மேலும் சென்னிமலை வட்டார வள மேற்பார்வையாளர் கோபிநாத் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

    பள்ளி ஆசிரியை ஆஷா குட்டி மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் வகுப்பறை களங்கள் பற்றி செயல்விளக்கம் அளித்தார். மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

    நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊர் பொது மக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

    • 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒங்கன்புரம் மற்றும் மரூர் பகுதியில் 10 பேர் கொண்ட 2 குழுவினர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒங்கன்புரம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தாளவாடி பகுதியை சேர்ந்த விஜய குமார் (40), பசுவராஜ் (30), சித்துராஜ் (25), அருள்ராஜ் (26), மாதேஷ் (50) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்த இருசக்கர வாகனங்கள், 52 சீட்டுகள், பணம் ரூ.1,000 ஆகியவ ற்றையும் பறிமுதல் செய்த னர்.

    இதேபோல் மரூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாளவாடி பகுதியை சேர்ந்த பசுவராஜ் (35), நசீப் (52), சிவராமு (35), சிவகுமார் (41), நந்தேஷ் (47) ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள், பணம் ரூ.52 ஆயிரத்து 60 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.

    பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 938 பேர் கொரோ னா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை தினசரி பாதிப்பு 1,2 என பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பதிவாகி உள்ளது.

    • டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள பங்களாபுதூர், டி.ஜி.புதூர் பகுதியில் பங்களாபுதூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள பள்ளத்தில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் டி.ஜி.புதூர் பங்களாமேடு பகுதியை சேர்ந்த பெருமாள் (36) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 51 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிடப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை,

    கைத்தறித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் உள்ளன.

    2023-24-ம் நிதிஆண்டிற்கான கடன் இலக்கு ரூ.16 ஆயிரத்து 30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விவசாயத்திற்கான கடன் இலக்கு ரூ.8814.95 கோடி, சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் இலக்கு ரூ.5465.26 கோடி, பிற முன்னுரிமைகளுக்கான கடன் இலக்கு ரூ.1596.48 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கடன்களை தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போது தான் அரசுத்துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

    விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டு கடன்களை வழங்கிடவும், குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற பயிர்கடன் மற்றும் சிறுகுறுதொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படுகின்ற கடன்கள் வழங்குவதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காமலும், முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கிட வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவி க்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம்,

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களு க்கான வேலை வாய்ப்பு உறுவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறை படுத்தும் திட்டம் ஆகிய சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இத்திட்ட ங்களின் மூலம் சிறப்பான சேவைகள் வழங்கிய சிறந்த வங்கிகள் மற்றும் சிறந்த வங்கிக்கிளைகளுக்கும் 2022-2023-ம் ஆண்டிற்கான விருது களையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

    மேற்காணும் 4 திட்டங்கள் மூலமாக 326 நபர்களுக்குரூ.58.60 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். மாவட்டத் தொழில் மையத்தின் மேலாளர் மருதப்பன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர், ரிசர்வ் வங்கி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    • அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 716 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.08 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 716 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ராமசாமி அரிவாளால் ஜோதிலட்சுமியை திடீரென வெட்டினார்.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை மணிமலை கரடு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி ஜோதிலட்சுமி (வயது 43). நாச்சிமுத்துவின் தந்தை ராமசாமி சென்னிமலை அடுத்த மேலப்பாளையத்தில் சரவணா நகரில் வசித்து வருகிறார்.

    இவர் தனது பூர்வீக நிலத்தை விற்று அதில் 3 மகன்களுக்கும் வீடு கட்டி தந்துள்ளார்.

    இந்த நிலையில் ராமசாமி மணிமலை கரடு பகுதியில் உள்ள தனது மகன் குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஜோதிலட்சுமியிடம், ராமசாமி செய்வினை வைத்து விட்டாய். உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ராமசாமி தான் வைத்திருந்த தேங்காய் போடும் அரிவாளால் ஜோதிலட்சுமியை திடீரென வெட்டினார். இதில் ஜோதிலட்சுமி படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அவரது மகன்கள் ராமசாமியை தடுக்க சென்றனர். பின்னர் அவர் தன்னை தடுத்தால் அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    பின்னர் ராமசாமி அரிவாளை போட்டு விட்டு அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமி 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமவைாக உள்ள ராமசாமியை போலீசார் வலை வீசி தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • புதிய ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • நீர் வீழ்ச்சி, நினைவு சின்னம், அலங்கார விளக்குகள் அமைத்து பராமரிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், முடிவுற்ற திட்டப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டும் வருகிறது.

    அந்த வகையில் ஈரோடு மாநகராட்சியில் சாலை மேம்பாட்டிற்காக நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணி,

    நவீன சாலை அமைக்கும் பணி, சாலை விரிவாக்கம் செய்து மழை நீர் வடிகால் அமைத்தல், பாதசாரிகள் நடந்து செல்ல ஏதுவாக நடைமேடை அமைக்கும் பணி போன்ற திட்டப்பணிகள்

    ஈரோடு காவேரி சாலை-ஆர்.கே.வி. சாலை, மூலப்பாளை யம்-பூந்துறை சாலை, ஈ.வி.என்.சாலை, ரெயில்வே நிலையம் சாலை, காந்திஜி சாலை, கலெ க்ட்ரேட்-குமலன்குட்டை செல்லும் பெருந்துறை சாலை போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது.

    மேலும் தற்போது மாநகராட்சி மாடல் சிட்டி என்ற புதிய திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவ மனை சந்திப்பிலும், காளைமாட்டு சிலை சந்திப்பிலும் தலா ரூ.30 லட்சம் என ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியிலும், காளைமாட்டு சிலை பகுதியிலும் ஏற்கனவே இருந்த ரவுண்டானாக்களை இடித்து அப்புறப்படுத்தி,

    விரிவுப்படுத்திய புதிய ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது இப்பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாநகராட்சியின் சார்பில் மாடல் சிட்டி திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு, காளைமாட்டு சிலை சந்திப்பில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரவுண்டானா அமைக்கப்ப ட்டு வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தே ர்தல் காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது.

    ரவுண்டானாக்களை விரிவுப்படுத்திட முறையாக ஆய்வு செய்து அதற்கேற்றார் போல அமைத்துள்ளோம். அரசு சார்பில் நெடுஞ்சாலை துறை மூலம் ரவுண்டானா மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல முறையான நடைபாதை, போக்குவரத்து சிக்னல்கள், மழைநீர் வடிகால் போன்றவை கட்டமைக்க ப்படும்.

    அதைத்தொடர்ந்து 3-ல் 1 பங்கு தனியார் பங்களப்பு டன் நீர் வீழ்ச்சி, நினைவு சின்னம், அலங்கார விளக்குகள் அமைத்து பராமரிக் ப்படும்.

    அரசு மருத்துவமனை ரவுண்டானாவும், காளை மாட்டு சிலை ரவுண்டானா நகரின் முக்கிய பகுதியாக இருக்கிறது. இதனால் காளைமாட்டு சிலை ரவுண்டானா பகுதியில் ஏற்கனவே உள்ளதை போல புதிய காளைமாட்டு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு மருத்து வமனை ரவுண்டானாவில் என்ன மாதிரியான நினைவு சின்னம் அமைக்கப்படும் என்பதை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும். அதன்பின் ரவுண்டானா பணிகள் முழுமையாக நிறைவு பெறும். இந்த பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.

    இதேபோல் திண்டல் ரிங் ரோடு சந்திப்பில் அமைக்க ப்பட்ட ரவுண்டானா 100 சதவீதம் பணிகள் நிறை வடைந்துள்ளது. மேட்டுக்கடை பகுதியில் அமைக்க ப்பட்ட ரவு ண்டானா நிலப்பிரச்சனை காரண மாக இறுதி கட்டத்தில் நிற்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வாய்க்கால் புனரமைப்பு பணிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    அம்மாபேட்டை:

    உலக வங்கி உதவியுடன் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அம்மாபேட்டை அருகே கருங்காடு மேட்டூர் வலது கரை வாய்க்கால் புனரமைப்பு பணி, அந்தியூர், ஆப்பக்கூடல் ஏரி புணரமைப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    அப்போது வலது கரை வாய்க்கால் பாசன விவசாயி கள் கால்வாய் புனரமைப்பு பணிகள் நல்ல முறையில் விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகவும்,

    வாய்க்கா லின் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைத்த தால் கால்வாயி லிருந்து நீர் கசிவால் வேளாண் பயிர்கள் சேதம் ஆவது தடுக்கப்பட்டி ருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடியவர் விவசாயிகளிடம் என்னென்ன பயிர்கள் எந்தெந்த சமயங்களில் பயிர் செய்துவருகிறீர்கள் என்றும், எந்த காலகட்டத்தில் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது,

    எத்தனை மாதங்கள் வரை தண்ணீர் செல்கிறது? திறக்கப்படக்கூடிய தண்ணீர் தங்கு தடை இன்றி அறுவடை சமயம் வரை விவசாயத்திற்கு கிடைக்கி றதா? என கேட்டறிந்தார்.

    இதில் நீர் மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், பவானிசாகர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் அருளழகன், செயற்பொறியாளர் சிவக்கு மார், உதவி செயற்பொ றியாளர் சாமிநாதன், பவானி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியா ளர்கள் கவுதமன், தமிழ்பா ரத், சுலைமான் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • டெம்போ வேன் ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது.

    இந்த வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு செல்ல குறைந்த தூரம் என்பதாலும், 2 கொண்டை ஊசி வளைவுகள் மட்டுமே இருப்பதாலும் பெரு ம்பாலான வாகன ஓட்டிகள் இந்த வழியாக சென்று வருகிறார்கள்.

    தற்போது சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர் .

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து தவிடு பாரம் ஏற்றி கொண்டு ஒரு டெம்போ வேன் பெருந்துறையில் தவுடுகளை இறக்குவதற்காக பர்கூர் வனப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேலாம்பட்டி பிரிவு என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென டெம்போ வேன் ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் டெம்போ வேனில் வந்த கர்நாடக மாநிலம் அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் அமிர்தலிங்கம் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிளீனர் கார்த்தி (22) ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை ஆம்புலன்சு மூலம் மீட்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • டாக்டரின் மனைவி, தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தனது கணவருக்கு சாம்பார் கொஞ்சம் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
    • பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தனது மகனை டாக்டர் சதீஷ்குமார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    சத்தியமங்கலம்:

    திருப்பூரை சேர்ந்தவர் டாக்டர் சதீஷ்குமார் (32). இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் டாக்டர் சதீஷ்குமார் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு இடமாறுதலாகி வந்தார். பின்னர் இவர் கோணமூலை என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் தங்கி தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் டாக்டர் சதீஷ்குமாரின் மனைவி நேற்று திருப்பூருக்கு சென்று விட்டார். இதையடுத்து டாக்டர் சதீஷ்குமார் மட்டும் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே டாக்டரின் மனைவி, தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தனது கணவருக்கு சாம்பார் கொஞ்சம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தனது மகனை டாக்டர் சதீஷ்குமார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    அப்போது அங்கு சென்று பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. மேலும் டாக்டர் சதீஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதைபார்த்த சிறுவன் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான். பின்னர் அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து இதுகுறித்து திருப்பூருக்கு சென்ற அவரது மனைவிக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இது குறித்து சத்தியமங்கலம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்தது.

    • கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழக-கர்நாடக இடையே முக்கிய சாலையாக இது உள்ளது. மலைப்பாதையில் 27 அபாய கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் நூற்றாண்டு பழமையான விநாயகர் கோவில் உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த கோவில் அருகே வாகனங்களை நிறுத்தி விநாயகரை வழிபட்டு அதன் பின்னர் செல்வது வழக்கம். வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக இந்த விநாயகர் கோவில் இருந்து வந்தது. சிறுத்தை மற்றும் புலிகள் நடமாட்டத்தால் இரவு மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மலைப்பாதையில் தொடங்கும் இடத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தவும், வழிபடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனாலும் கோவிலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் விநாயகரை தங்கள் வாகனத்தில் இருந்தே கும்பிட்டு சென்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் திம்பம் மலைப்பாதை வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக விளங்கிய விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலை திடீரென திருட்டு போய்விட்டது. இதனை கண்டு வாகன ஓட்டுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, வாகன ஓட்டிகளுக்கு காவல்தெய்வமாக இருந்த விநாயகர் சிலையை திருடியவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×